Pages

பிதாவாகிய தேவனாலும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்கு கிருபையும், சமாதானமும் உண்டாவதாக
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி! அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்!! பரிசுத்த வேதாகமம் அருளப்பட்டதல்ல! பரிசுத்த மனிதர்கள் தேவனுடைய செய்தியை பெற்று எழுதினார்கள்!!

Saturday, November 8, 2008

“லேவி, சூமேக்கர்” மோதல்



1994ம் ஆண்டு வியாழன் கிரகத்தை சில சிறிய கோள்கள் சென்று மோதி பயங்கர சேதத்தையும், ஆழமான படுகுழியையும் உருவாக்கின. இம்மோதல்களை விஞ்ஞானிகள் ஏற்கனவே குறிப்பிட்டு சரியான நேரத்தையும் கணிப்பிட்டு கூறியதால் உலக அவதானிகள் அதைக்கவனித்து அம்மோதல் நிகழ்ச்சிகளைப்படமெடுத்து பத்திரிக்கைகளில் பிரசுரித்தன. இதை நாம் எல்லோரும் நன்கறிவோம்.



இருபதாம் நூற்றாண்டின் நடைப்பெற்ற இம்மோதலானது நமக்கு மிகப்பெரிய எச்சரிப்பையும் அதேவேளை மாபெரும் அச்சுறுத்தலையும் கொடுத்துள்ளது என்பதை எம்மால் மறுக்க முடியாது.
இம்மோதலானது எம் பூமண்டலத்தையும் ஒருநாள் மிகப்பெரிய கோள் ஒன்று தாக்கி விபரிக்க முடியாத பயங்கர சேதத்தையும் மாபெரும் அழிவையும் ஏற்படுத்தும் என்பதை எமக்கு உணர்த்துகின்றது.
இப்படியான ஒரு நிகழ்ச்சி நடைபெறுமா என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் அப்படியான ஒரு நிகழ்ச்சி, நிச்சயமாக நடைபெறத்தான் போகின்றது.
அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை. ஏனென்றால் ஒரு ஒளி ஆண்டிற்கு உட்பட்ட பிரதேசத்திலிருந்து மிகப்பெரிய விஷ நட்சத்திரக்கோளம் ஒன்று, எமது பூமியை நோக்கி பயங்கர வேகத்தில் வந்துக்கொண்டிருக்கின்றது.
அதை எமது விஞ்ஞானிகள் இதுவரை அறியா விட்டாலும், அக்கிரகம் பூமியில் வந்து மோதுவதை அவர்களால் தடுக்க முடியாது. ஏனென்றால் இந் நிகழ்ச்சியை பரிசுத்த வேதாகமமே முன்னுரைத்துள்ளதால் அது நிச்சயமாக எமது கண்களுக்கு முன்பாக வெற்றிகரமாக நிறைவேறப்போகின்றது.



இந்த கோளானது ஓர் நச்சுக்கிரகமாக இருக்குமென்பதால் இது மாபெரும் பாதிப்பை மனுக்குலத்திற்கு ஏற்படுத்தும் என நாம் கருதலாம்.
அன்பான சகோதரனே, சகோதரியே, இதைபோன்ற ஓரு நச்சுக்கோளம் அல்லது ஒரு விஷக்கிரகம் இதுவரை பூமியைத் தாக்கியதும் இல்லை மோதியதும் இல்லை.
ஆனால் இயேசு கிறிஸ்துவின் இலவச இரட்சிப்பையும் பாவமன்னிப்பையும் வேண்டாம் என்று உதறித்தள்ளிய பாவமும் விபச்சாரமும் நிறைந்த இக்கால சந்ததியினருக்குரிய தண்டனையாக இந்த நியாயத்தீர்ப்பு இருக்கும்.
இக்கால மக்கள் ஆகாயத்திலிருந்து விழுந்ததென கருதப்படும் கற்களை முத்தமிடவும், பூமியிலிருக்கும் கருங்கற்களை வணங்கவும் …… எவ்வளவு ஆவலோடு விரும்புகின்றனர்.
இஸ்லாமியர் ஆகாயத்திலிருந்து விழுந்ததென கருதப்பட்ட கல்லான கபாவை தரிசிக்க மெக்காவை நோக்கி ஓடுகின்றனர்.
இந்துக்களும், பெளத்தர்களும் கருங்கற்களால் மனித உருவங்களை செய்து, அவற்றை தெய்வம் என வணங்குகின்றனர்.
சகோதரனே, சகோதரியே! இன்னும் தாமதமா?



உலகத்திலே உங்களுக்கு பொக்கிஷங்களை சேர்க்கவேண்டாம் என்று இயேசுகிறிஸ்து கூறிய கட்டளையை நீங்கள் மீறிக்கொண்டிருக்கிறீர்களா?
வீடும்- கிணறும், தோட்டமும்- வயலும், ஆடும்-மாடும், வாங்கும் காலமல்ல இது. நகையும்-நட்டும், பொன்னும் பொருளும், சேர்க்கும் காலமல்ல இது.
பொன்னையும், பொருளையும், நகையையும், நட்டையும், தூக்கி எறிந்துவிட்டு தப்பி ஓடும் காலமல்லவா இது! (யாக்கோபு 5:3) எனவே இப்பொழுதே உலக ஆபாசங்களிலிருந்து விடுபட்டு, இறைவனைத் தேடி பரிசுத்தமடைந்து புனிதனாக வாழ நாங்கள் உங்களுக்கு இந்நற்செய்தியை அறிவிக்கின்றோம்.
இயேசு கிறிஸ்துவை குலதெய்வமாக ஏற்றுக்கொண்டவர்கள் மாத்திரமே இறைவனுடைய பிள்ளைகள் ஆவார்கள். இதை கீழ்காணும் வசனம் உறுதி செய்கின்றது.
அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார். (யோவான் 1:12)
But as many as received him, to them gave he power to become the sons of God, even to them that believe on his name: (John 1:12)

எனவே இன்றே இயேசுகிறிஸ்துவை உங்கள் குலதெய்வமாக ஏற்றுக்கொண்டு அவர் பிள்ளையாக மாறுங்கள். இன்றைய சந்தர்ப்பத்தை நீங்கள் தவற விடுவீர்களானால், மீண்டும் ஒரு சந்தர்ப்பம் உங்களுக்கு கிடைக்காமல் போகலாம்.
உலக இறுதி நியாயத்தீர்ப்பிலிருந்து மனுக்குலத்தால் தப்பவே முடியாது.
சொர்க்கத்திற்குள் நுழையும் ஒரே வழி இயேசு கிறிஸ்துவே. அவரை அல்லாமல் வேறொரு வழியில்லை. இயேசு சொன்னார் :- “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன். என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.” (யோவான் 14:6) Jesus saith unto him, I am the way, the truth, and the life: no man cometh unto the Father, but by me. (John 14:6) எனவே இப்பொழுதே அவரிடம் நெருங்குங்கள்!
இவ்விஷக்கோளம் இப்பூமியை மோதப்போவதை 2000 ஆண்டுகளுக்கு முன்பே உயிர்த்தெழுந்த இயேசுகிறிஸ்து தமது சீஷனான யோவானுக்கு வெளிப்படுத்தியுள்ளார். அது பரிசுத்த வேதாகமத்தின் இறுதிப்புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு ஆசிய, ஆபிரிக்க, ஐரோப்பிய கண்டங்கள் சந்திக்கும் நடுப்பகுதியான மத்திய தரைக்கடற் பகுதியில் நிகழலாம் என நம்பப்படுகின்றது. இக்கோளாமானது எரிந்த வண்ணம் விழக்கூடும்.
இக்கோளிலிருந்து பரவுகிற தூசியும், சாம்பலும், புகை மண்டலமும் உலகிலுள்ள பல நீர்நிலைகளை மாசுபடுத்தி அந்நீர்நிலைகளை மக்கள் பாவிக்க முடியாத வண்ணம் கொடிய விஷமாக்கி விடும்.
தாகத்தினால் இத்தண்ணீரை அருந்தும் மக்கள் உடனடியாக மரணத்தை தழுவிக்கொள்வார்கள்.



பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது.................
“மூன்றாம் தூதன் எக்காளம் ஊதினான். அப்பொழுது ஒரு பெரிய நட்சத்திரம் தீவட்டியைப்போல எரிந்து, வானத்திலிருந்து விழுந்தது. அது ஆறுகளில் மூன்றிலொரு பங்கின்மேலும், நீரூற்றுகளின் மேலும் விழுந்தது.
“And the third angel sounded, and there fell a great star from heaven, burning as it were a lamp, and it fell upon the third part of the rivers, and upon the fountains of waters;
அந்த நட்சத்திரத்திற்கு எட்டியென்று பெயர். அதினால் தண்ணீரில் மூன்றிலொருபங்கு எட்டியைப்போலக் கசப்பாயிற்று. இப்படிக் கசப்பான தண்ணீரினால் மனுஷரில் அநேகர் செத்தார்கள்.” (வெளிப்படுத்தல் 8:10-11)
And the name of the star is called Wormwood: and the third part of the waters became wormwood; and many men died of the waters, because they were made bitter.” (Revelation 8:10-11)

இச்சூழ்நிலையிலிருந்து நீங்கள் தப்ப………. எம்மை சிருஷ்டித்த தேவனிடம் தஞ்சம் புகுவதே மிகச்சிறந்தது என நாம் கருதுகின்றோம்.
கிறிஸ்துவிடம் நீங்கள் நெருங்க விரும்பினால் கீழ்கண்ட மாதிரி ஜெபத்தை நீங்கள் மீண்டும், மீண்டும் செய்யலாம்.
அன்பான “ஜெகோவா” என்னும் பெயருடைய பரம பிதாவே, உயிர்த்து எழுந்து உமது வலது பக்கத்திலிருக்கும் உமது ஒரே குமாரனாகிய இயேசுகிறிஸ்துவை எனது இரட்சகராகவும், எனது குலதெய்வமாகவும் ஏற்றுக்கொள்ளுகிறேன். உமது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவைப்பலியினாலேயே எனது பாவங்கள் கழுவப்படும் என உணர்கிறேன். எனது குற்றங்களையும் குறைகளையும் மன்னித்து, என்னைக் கழுவி சுத்திகரியும். நான் உமக்கு பிரியமான பிள்ளையாக இப்பூமியில் தீட்டுப்படாமல் வாழ உதவி புரியும். இச்செய்தியை அறிவித்தவரையும் ஆசீர்வதியும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன். ஆமேன்.
எச்சரிக்கை:-
“வேறொரு சுவிசேஷம் இல்லையே. சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல.
நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற (ஜிப்ராயில் அல்லது சாத்தான் என்னும் பெயருடைய) ஒரு தூதனாவது, வேறொரு (புனிதத்துவம் நிறைந்தது என்னும் கபட்டுத்தனமான) சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.
முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன். நீங்கள் ஏற்றுக்கொண்ட (இயேசுகிறிஸ்துவின் நற்செய்தி என்னும்) சுவிசேஷத்தையல்லாமல் (இஸ்லாம் என்னும் போலி மதம் போன்ற) வேறொரு சுவிசேஷத்தை (முகம்மதுநபி, சத்திய சாய்பாபா போன்ற நயவஞ்சகமுடைய) ஒருவன் (கி.பி.100 தொடக்கம் இன்று வரை) உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.” (கலாத்தியர் 1:7-9)
“Which is not another; but there be some that trouble you, and would pervert the gospel of Christ.
But though we, or an angel from heaven, preach any other gospel unto you than that which we have preached unto you, let him be accursed.
As we said before, so say I now again, If any man preach any other gospel unto you than that ye have received, let him be accursed. “ (Galatians 1:7-9)
இறுதியாக இறைவன் விரும்புகின்ற இவ்விடயங்களை நீங்கள் வாசித்து இயேசுகிறிஸ்துவையே உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொள்ள தீர்மானித்ததற்காக நாங்கள் சந்தோஷப்படுகிறோம். உங்கள் நலம் விரும்பும் இலங்கைச் சகோதரன் (2008.10.29).
நன்றி! நன்றி!! நன்றி!!!
“நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்”. (வெளிப்படுத்தல் 22:21)
“The grace of our Lord Jesus Christ be with you all. Amen”. (Revelation 22:21)
பார்வையிடுங்கள், உங்கள் நண்பர்களுக்கு தெரிவியுங்கள்.
www.kaattukkaluthai.blogspot.com
www.thidukkidumislamhindu.wordpress.com
www.minnumneelanachchaththiram.wordpress.com

(0686149244)
E-mail: naannesikkumjesu@gmail.com
இது ஒரு ஈ.பி.சி வெளியீடு கிறிஸ்து வருஷம் 2008, புனித இலங்கை

No comments: