Pages

பிதாவாகிய தேவனாலும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்கு கிருபையும், சமாதானமும் உண்டாவதாக
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி! அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்!! பரிசுத்த வேதாகமம் அருளப்பட்டதல்ல! பரிசுத்த மனிதர்கள் தேவனுடைய செய்தியை பெற்று எழுதினார்கள்!!

Sunday, September 30, 2018

இஸ்ரவேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஆற்றிய உரை 27-9-2018

Prime Minister Benjamin Netanyahu's 2018 UN General Assembly Speech 

இங்கு பொதுச் சபையில் நடைபெறப்போகும் உரையானது, மேன்மைத்தங்கிய பெஞ்சமின் நெத்தன்யாஹு இஸ்ரவேல் நாட்டின் பிரதமர், வெளிவிவகார அமைச்சர், பொருளாதார அமைச்சர், தொடர்பாடல் அமைச்சர், பிராந்திய கூட்டுறவு அமைச்சர் மேன்மை தங்கிய அவரை, பங்குபற்றுமாறு நான் வேண்டுகின்றேன். பொது சபையில் இஸ்ரவேல் நாட்டின் பிரதமர் அவர்களை உரையாற்றுமாறு அழைப்பதையிட்டு நான் பெரும் மகிழ்ச்சி கொள்ளுகின்றேன். நான் அவரை பொதுச் சபையில் உரையாற்றுமாறு அழைக்கின்றேன்.

ஐ.நா.சபையில் இஸ்ரவேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு ஆற்றிய உரை 27-9-2018 (பகுதி - 1/3)

'மேன்மைதங்கிய பிரதிநிதிகளே, சீமான்கள் மற்றும் சீமாட்டிகளே,

நான் மூன்று வருடங்களுங்களுக்கு முன்பு இங்கிருந்து பேசும்போது, தேசங்களுக்குள்ளே இஸ்ரவேல் தனிமையாக நின்று கொண்டிருந்தது. இந்த அறையில் அமர்ந்திருந்த ஏறக்குறைய 200 நாடுகளில், இஸ்ரவேல் மாத்திரமே வெளிப்படையாக ஈரானுடைய அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்த்தது. நாம் அதனை எதிர்க்கும் காரணம், அது! அது எமது உயிர் பிழைப்பில் மாத்திரம் அல்ல! அது எமது எதிர்காலத்தை கூட அச்சுறுத்துகின்றது. நாம் அதனை எதிர்க்கும் காரணம், அணுசக்தி ஆயுதங்களின் பாதையில் ஈரான் பயணிப்பதின் ஒப்பந்தத்தின் காரணத்தினால் ஆகும். பொருளாதார தடைகளை உயர்த்தியதன் மூலம் மத்திய கிழக்கு முழுவதும் படுகொலைகள் மற்றும் கைபற்றுதல் ஆகியவற்றை செய்வதற்கு ஈரான் எண்ணெய் ஊற்றுகின்றது. நாம் அதனை எதிர்க்கும் காரணம், ஈரான் அணுசக்தி ஆயுதங்களை உருவாக்க விரும்பவில்லை என்ற அந்த அடிப்படை பொய்யை, அடிப்படையாக கொண்ட ஒப்பந்தம் என்பதினாலேயேயாகும்.

இப்பொழுது, இந்த வருடத்தின் ஆரம்பத்தில் அந்த பொய்யை இஸ்ரவேல் வெளிப்படுத்தியது. கடைசி பெப்ரவரியில், ஈரானுடைய இரகசிய அணு ஆயுத காப்பகத்தை இஸ்ரவேல் தைரியமாக சோதனை நடத்தியது. தெஹ்ரானின் இதயப்பகுதியில் அப்பாவிகளை போல் காட்சியளிக்கும் கட்டிடங்களிலுள்ள கழிவறைகளில் மறைக்கப்பட்டுள்ளதான ஒளிநாடாக்களையும் 1,00,000ற்கு மேலான ஆவணங்களையும் நாம் பெற்றுக்கொண்டோம். மே மாதத்தில் நான், நாம் பெற்றுகொண்டவற்றின் குறுகிய சுருக்கத்தை சர்வதேச செய்தி ஊடகத்திற்கு சமர்ப்பித்தேன். ஆணுஆயுதங்களை கட்டுவதற்கான ஈராணுடைய திட்டங்கள் மற்றும்  சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்கான அதன் திட்டங்கள் ஆகியவற்றின் உறுதியான ஆதாரத்தை நான் சமர்ப்பித்தேன். P5+1 அங்கத்தவர்கள் மற்றும் பன்னாட்டு அணுசக்தி முகமையக (International Atomic Energy Agency) அங்கத்தவர்களோடு இந்த தகவல்களையும் நாம் கண்டெடுத்த இன்னும் கடுமையான சான்றுகளையும் இஸ்ரவேல் பகிர்ந்து கொண்டது. மாதங்கள் கடந்தன,  IAA ஆனது இன்னும் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அது ஈரானிடம் எந்த ஒரு கேள்வியையும் முன்வைக்கவில்லை. அது அந்த இரகசிய ஆவணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதிய இடத்தை கூட ஆய்வு செய்ய ஒரு தடவையும் கோரவில்லை.

ஆகவே இந்த செயலற்ற தன்மை தரப்பட்டதால், இன்று நான் சில உளவுத்துறை அமைப்புக்களோடும் IAA வுடனும் நாம் பகிர்ந்து கொண்ட அந்த சில காரியங்களை வெளிப்படுத்த தீர்மானித்தேன். நான் எதை கூறுகின்றேனோ அது முன்னர் பகிரங்கமாக வெளிப்படுத்தப்பட்ட காரியம் அல்ல. இன்று நான் ஈரான் தெஹ்ரானில் கொண்டிருக்கும் மற்றொரு ரகசிய வசதியையும் குறித்து முதல் தடவையாக வெளிப்படுத்துகின்றேன். ஈரானுடைய இரகசிய அணு ஆயுத திட்டங்களுக்கான மிகப் பெரிதளவிலான உபகரணங்களும் பொருட்களும் களஞ்சியப்படுத்துவதற்கான ஒரு இரகசிய அணு ஆயுத காப்பகம் ஆகும்.

மே மாதத்தில் ஈரானுடைய இரகசிய அணு ஆயுத காப்பகத்தை நாம் அம்பலப்படுத்தினோம். இது தெஹ்ரானின் ஷஹாபாத் மாவட்டத்தில் சரியாக அமைந்துள்ளது. நான் இன்று இரண்டாவது வசதியுள்ள பகுதியை வெளிப்படுத்த போகின்றேன்: ஈரானுடைய இரகசிய அணு ஆயுத காப்பகம். இது தெஹ்ரானின் டுர்குசாஹ்பாத் மாவட்டத்தில் சரியாக அமைந்துள்ளது. ஏறக்குறைய மூன்று மைல் தொலைவில். இரகசிய அணு ஆயுத காப்பகம் எவ்வாறு சரியாக தோற்றம் அளிக்கின்றது என்பதை நான் உங்களுக்கு காட்டுகின்றேன். அது இங்கு தான் உள்ளது. நீங்கள் பார்க்கும் விதமாக, அணு ஆயுத காப்பகத்தை போல் இதுவும் மற்றொரு அப்பாவிபோல் காட்சிதரும் கட்டிடம் ஆகும். இப்பொழுது கூகுள் ஏர்த்தை (Google Earth) உங்களுடைய வீட்டில் நீங்கள் உபயோகிக்கும் ஒருவராயின், இது இரகசிய அணு ஆயுத காப்பகமாக நீண்ட காலத்திற்கு இருக்க முடியாது. உங்களிடம் ஒருங்கிணைக்கப்பட்ட தகவல் உள்ளது, நீங்கள் அதை பெறும்படியாக முயற்சிக்கலாம். அத்தோடு அதை பெறும்படியாக முயற்சிக்கும் ஒவ்வொருவருக்கும்: கம்பளியை-தூய்மையாக்கும் இடத்திலிருந்து 100 மீற்றர் தொலைவில் உள்ளது. அதே நேரத்தில், அங்கு கம்பளியை தூய்மையாக்கும் மிகச்சிறந்த காரியத்தை அவர்கள் செய்வதாக நான் கேள்விப்பட்டேன். ஆனால் இப்போதிருந்து கதிரியக்க பகுதிகளில் இருக்கலாம். இதுவே இரண்டாவது இரகசிய தளம். இப்பொழுது செயற்கைகோள் திறன் உடைய நாடுகள் வார நாட்களிலும் வார இறுதியிலும் அந்த நடைபாதைகளில் சில செயற்பாடுகள் அதிகரித்திருப்பதை காணலாம்.

முன்னும் பின்னும் வேகமாக செல்லக்கூடியதாக காணப்படும் அந்த மக்கள் ஈரானிய அதிகாரிகளே ஆவார்கள், அவர்கள் அந்த பகுதியை தூய்மைப்படுத்துவற்கான வேலையை முடிப்பதற்கு தீவிரமாக முயற்சிக்கின்றார்கள். நீங்கள் பார்க்கின்ற படி – அணு ஆயுத காப்பகத்தை தூய்மைப்படுத்துவதற்காக கடுமையாக வேலைப்பளுவில் அவர்கள் இருப்பதை எமது ஆணு ஆயுத சோதனையின் பின் நாம் காணலாம். ஏறத்தாள கடைசி மாதத்தில் அவர்கள் 15 கிலோகிராமுடைய கதிர்வீச்சுப் பொருட்களை அகற்றியுள்ளனர். அவர்கள் அதை கொண்டு என்ன செய்தார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? அந்த 15 கிலோ கிராமுடைய கதிர்வீச்சு பொருட்களை, இந்தப் பகுதியில் இருந்து வெளியேற்ற வேண்டும். அகவே அவர்கள் அதை வெளியே எடுத்து ஆதாரத்தை மறைக்;க முயற்சிக்கும் காரணத்தினால் தெஹ்ரானை சுற்றி அதை பரப்பி வைத்துவிட்டனர். தெஹ்ரானிலுள்ள ஆபத்தான பகுதியில் உள்ள குடியிருப்பாளர்கள் அமேசான் amazon.com தளத்திலிருந்து வெறும் 29.99 டாலருக்கு Geiger counter என்னும் (கதிர்வீச்சு அளவிடும் உபகரணத்தை) அவர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிய வேண்டுகின்றேன். இன்றைய நாளின் படி, அது ஈரானிய ரியாலில் வெறும் நான்கு மில்லியன் ஆகும். ஆனால் நாம் அதை பின்னதாக பார்த்துக்கொள்வோம். நான் ஈரானியருடைய பொருளாதாரத்தை குறித்து ஒரு நிமிடத்தில் பேசிக்கொள்ளுகின்றேன்.

அவர்கள் இந்த கதிர் வீச்சுப்பொருட்களை எடுத்து தெஹ்ரானை அதை சுற்றி பரப்பி வைத்துள்ளனர். இப்பொழுது ஈரானிய அதிகாரிகள் அந்த பகுதியை இன்னும் சுத்தம் செய்து கொண்டிருப்பதால் இன்னும் அதிகமாக செய்ய வேண்டிய வேலைகள் உள்ளன ஏனென்றால் ஏறக்குறைய 15 கப்பல் கொள்கலன்களில் அவைகளை அவர்கள் வைத்திருக்கிறார்கள், அவைகள் மிகப்பெரியவைகள், 15 கப்பல் கொள்கலன்களில் முழுமையான அணு ஆயுத தொடர்புடைய உபகரணங்களையும் பொருட்களையும் சேமித்து வைத்திருக்கின்றார்கள். இப்பொழுது வரைக்கும் இந்த ஒவ்வொரு கொள்கலன்களும் 20 தொன் வரையான பொருட்களை உள்ளடக்கக் கூடியதாக இருக்கும் இதன் அர்த்தமானது இந்த தளமானது ஆணு ஆயுதம் தொடர்புடைய 300 தொன் நிறையுடைய உபகரணங்களையும் பொருட்களையும் கொண்டிருக்கின்றது.

இங்கே தான். ஆகவே, மேன்மைதங்கிய பிரதிநிதிகளே, நீங்கள் உங்களுக்குள்ளேயே ஒரு கேள்வியை கேட்டுக்கொள்ள வேண்டும். ஈரான் ஏன் இரகசிய அணு ஆயுத காப்பகத்தையும் இரகசிய ஆணு ஆயுத ஆலையையும் வைத்திருக்க வேண்டும்? ஏனென்றால் அனைத்திற்கும் பிறகு, தெற்கு ஆபிரிக்காவும் லிபியாவும் கூட, அவர்களுடைய அணு ஆயுத திட்டங்களை அவர்கள் கொடுக்கும்போது, அவர்கள் செய்த முதலாவது காரியமானது இருவரிடமுமுள்ள காப்பகத்தையும், பொருட்களையும் மற்றும் உபகரணங்களையும் அழிப்பதாகவே இருந்தது. அத்தோடு இந்த கேள்விக்கான விடை இலகுவானது: ஈரான் அதனுடைய அணு ஆயுத காப்பகத்தையும் அதனுடைய அணு ஆயுத ஆலைகளையும் அழிக்காமல் இருக்கின்றது ஏனென்றால் அது அணு ஆயுத உபகரணங்களை விருத்திசெய்யும்படியான அதனுடைய இலக்குகளை கைவிடவில்லை. உண்மையாகவே, அணுகுண்டை சரியான தருணத்தில் வெளிப்படுத்துவதற்காக வரப்போகும் சில வருடங்களில் இந்த இரு தளங்களையும் அது பயன்படுத்த தீர்மானித்து உள்ளது. ஆனால் சீமான்கள் மற்றும் சீமாட்டிகளே, அது நடைபெறாதிருக்கும் பொருட்டு, மீதியானதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அது நடைபெறாது, ஏனென்றால் எதை ஈரான் மறைத்தாலும் அதை இஸ்ரவேல் கண்டுபிடித்து விடும்.

சீமான்கள் மற்றும் சீமாட்டிகளே, நான் IAA தலைமை செயலகம் மதிப்பிற்குரிய யுகியா அமானோ  அவர்களுக்கு ஒரு செய்தியை அறிவித்தேன். அவர் நல்ல மனிதன் என்று நான் நம்புகின்றேன். நான் அவர் சரியான காரியங்களை செய்யகின்றவர் என நம்புகின்றேன். நன்று... மதிப்பிற்குரிய அமானோ சரியான காரியத்தை செய்யுங்கள். சென்று இந்த அணு ஆயுத களஞ்சிய வீட்டை ஆய்வு செய்யுங்கள். உடனடியாகவே. ஈரானியர்கள் அந்த இடத்தை சுத்தம் செய்யும் முன்னர். மேன்மைதங்கிய பிரதிநிதிகளே, அந்த ஆய்வுகள் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் மேற்கொள்ளப்படலாம் என நாம் வாக்குறுதி அளித்ததை நீங்கள் ஞாபகத்தில் கொண்டிருக்கின்றீர்களா? அதை ஞாபகத்தில் வைத்திருக்கின்றீர்களா? எந்த நேரத்திலும், எந்த இடத்திலும். நன்று. இந்த இடத்தில், இந்த தருணத்தில் ஆய்வு செய்வதை குறித்தான நிலைப்பாடு என்ன? மற்றும் மதிப்பிற்குரிய அமானோ – நீங்கள் அந்த இடத்தில் இருக்கும்போது, நாங்கள் உங்களுக்கு சொன்னதை குறித்து மற்ற தளங்களை ஆய்வு செய்யுங்கள். அனைவருக்காகவும், ஒரு தடவை ஈரானை குறித்தான உண்மையை உலகிற்கு கூறுங்கள்.

இப்பொழுது தெஹ்ரானின் கொடுங்கோலர்களுக்கு, இன்று கூட நான் ஒரு செய்தயை வைத்திருக்கின்றேன். நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள் என்பது இஸ்ரவேலுக்கு தெரியும், அத்தோடு அதை நீங்கள் எங்கு செய்கின்றீர்கள் என்பதும் இஸ்ரவேலுக்கு தெரியும். எமது அழிவுக்காக விருத்தி செய்யப்படும் அணு ஆயுதங்களுக்கான அந்த ஆட்சிமுறையான செயற்பாட்டை இஸ்ரவேல் ஒருபோதும் அனுமதிக்காது. இப்பொழுது அல்ல! பத்து வருடங்களில் அல்ல!! என்றென்றைக்குமே அனுமதிக்காது!!!

அத்தோடு ஈரானுடைய ஆக்கிரமிப்பிற்கு எதிராக தன்னைத்தான் தற்காத்துக்கொள்ள இஸ்ரவேல் எது வேண்டுமானாலும் செய்யும்! நாம் சிரியாவில் உங்களுக்கு எதிரான நடவடிக்கையை தொடருவோம்! நாம் லெபனானில் உங்களுக்கு எதிரான நடவடிக்கையை செய்வோம்! நாம் ஈராக்கில் உங்களுக்கு எதிரான நடவடிக்கையை செய்வோம்!  நாம் உங்களுக்கு எதிரான நடவடிக்கையை எந்த நேரத்திலும், எங்கென்றாலும் செய்வோம்! நாம் எமது நாட்டை பாதுகாக்கவும், எமது மக்களை பாதுகாக்கவும் செயற்பாடுகளை செய்ய வேண்டும். மேன்மை தங்கிய பிரதிநிதிகளே, மூன்று வருடங்களுக்கு முன், சில வாரங்களுக்கு அப்புறம் அணு ஆயுத ஒப்பந்தம் நிறைவேறியது, நான் இந்த கேள்வியை இந்த சிறந்த மேடையில் இருந்து கேட்டேன்: ஆயுதம் மற்றும் பணத்தை கொண்ட ஈரானியருடைய வெள்ளம் போன்ற தீவிரமான ஜனநாயகமானது அதன் ஆக்கிரமிக்கும் பசியை கட்டுப்படுத்தும் என யாராவது உண்மையாகவே நம்புகின்றீர்களா?

ஆனால் ஒப்பந்தத்தை ஆதரிப்போர் அநேகர் அதையே சாதாரணமாக நம்புகின்றார்கள். ஈரானுடைய ஆட்சியானது இன்னும் அதிகம் மிதமாக, அதிகம் சமாதானமாக மாறும் என அவர்கள் நம்புகின்றார்கள். அவர்கள் மேலிடத்திலிருந்து அது பெறும் பில்லியன் கணக்கான டாலர்களை தமது மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றுவதற்கு ஈரான் பயன்படுத்தும் என அவர்கள் நம்புகின்றார்கள். தண்ணீர் பிரச்சனையை நீக்குவதற்கு. போக்குவரத்து பிரச்சினையை தீர்ப்பதற்கு. மின்சார பிரச்சினையை தீர்ப்பதற்கு. வைத்தியசாலைகள், பாடசாலைகள். இதைத்தான் அவர்கள் நம்புகின்றார்கள். மெய்யாகவே உங்களில் சிலரும் கூட அதைதான் நம்புகின்றீர்கள். நன்று, உண்மையில் அது நடைபெறவில்லை. மாறாக, ஈரான் அதன் பரந்த போர் உபகரணங்களுக்கு எரிபொருள் நிரப்பவே பணத்தை உபயோகிக்கின்றது. கடந்து சென்ற வருடத்தில் ஈராக்கில் இருந்த குர்தியர்களை ஈரான் தாக்கியது, சிரியாவில் இருந்த சுன்னி பிரிவினரை படுகொலை செய்தது, லெபனானில் இருந்த ஹிஸ்புல்லாவிற்கு ஆயுதங்களை கொடுத்தது, காசாவில் இருந்த ஹமாஸிற்கு நிதியுதவி அளித்தது, சவுதி அரேபியாவிற்குள் ஏவுகனைகளை ஏவியது, ஸ்ட்ரெய்ட் ஆப் ஹோர்மஸ் மற்றும் ஸ்ட்ரெய்ட் ஆப் பாப் அல்-மாட் ஆகியோரின் வழிநடத்தப்பட்ட சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் விடுத்தது.

ஐ.நா.சபையில் இஸ்ரவேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு ஆற்றிய உரை 27-9-2018 (பகுதி - 2/3)

சில சமாதானம். சில நிதானம். இப்பொழுது நீங்கள் சிந்தித்தால், ஈரானுடைய ஆக்கிரமிப்பானது மத்திய கிழக்கில் வரையறுக்கப்பட்டது என நீங்கள் சிந்தித்தால், மீண்டும் சிந்தித்துக் கொள்ளுங்கள். ஐக்கிய அமெரிக்காவில், கடைசி மாதத்தில் இரண்டு ஈரானிய முகவர்கள், அதாவது சரியாக இப்பகுதியில் தீவிரவாத தாக்குதல்களுக்கு சதி திட்டம் தீட்டிய காரணத்தினால் கைது செய்யப்பட்டார்கள்.  அத்தோடு பல வாரங்களுக்கு முன்பு, ஐரோப்பிய மத்திய பகுதியில் தீவிரவாத தாக்குதல்களுக்கு சதிதிட்டம் செய்யப்பட்ட காரணத்தினால் இரண்டு ஈரானிய முகவர்கள் கைது செய்யப்பட்டார்கள். இன்னமும் கூட ஐக்கிய அமெரிக்காவால் ஈரான் மீது புதிய தடைகளை எதிர்கொள்ளுகின்றது, ஐரோப்பா மற்றும் வேறு நாட்டவர்கள் ஈரானுக்கு உதவி செய்து அந்த புதிய தடைகளை நீக்கி அமைதிப்படுத்த முயற்சிக்கின்றன.

இப்பொழுது நான் சாதாரணமாக ஒரு வார்த்தையை உபயோகிக்கின்றேன். ஓர் கடினமாக வார்த்தை. ஓர் பலமுள்ளதுமான ஓர் வார்த்தை. அமைதிப்படுத்தல். அத்தோடு நான் அதை தயக்கமின்றி பயன்படுத்துகின்றேன். ஆனால் துரதிஷ்டவசமாக அது சரியானதாகவே நாம் மீண்டும் அதனை பார்க்கின்றோம். ஐரோப்பியாவில். இதை சிந்தித்துப் பாருங்கள். இதே வாரத்தில் ஐரோப்பிய குடிமக்களை படுகொலை செய்வதற்கான முயற்சியில் ஈரான் கையும் களவுமாக பிடிபட்டது, ஜனாதிபதி ரோஹினிக்கு சிவப்பு கம்பளத்தை விரிக்கும் ஐரோப்பிய தலைவர்கள், ஈரானுக்கு இன்னும் அதிகம் பணத்தை கொடுப்பதற்கு வாக்குறுதி அளிக்கின்றனர்.

நான் ஒரு வரலாற்று மகன், நான் தான் கேட்க வேண்டும்: நான் ஒரு வரலாற்று மகனாக மாத்திரம் அல்ல, ஒரு யூதனாக, உலகத்தின் குடிமகனாக, 20ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒருவரைப்போன்று - இந்த ஐரோப்பிய தலைவர்கள் வரலாற்றில் இருந்து எதையும் கற்கவில்லையா? அவர்கள் ஒருபோதும் எழும்ப மாட்டார்களா? நன்று!

நாம் இஸ்ரவேலில் உள்ளோம் -- எம்மை எழுப்பவேண்டிய அழைப்பு மணி தேவையில்லை ஏனென்றால் ஒவ்வொரு நாளும் ஈரான் எம்மை அச்சுறுத்துகின்றது. ஏனென்றால் மிகச் சிறந்த நம்பிக்கைகள் இருந்த போதிலும், அணுசக்தி ஒப்பந்தத்தோடு சுற்றி அநேக நம்பிக்கைகள் இருந்த போதிலும் இந்த ஒப்பந்தமானது போரை மேலும் தூரத்திற்கு தள்ளி விடவில்லை. அது எமது எல்லைகளுக்கு மிக அருகாமையில் போரை கொண்டு வந்துள்ளது. சிரியாவில், ஈரான் எமக்கு எதிராக நிரந்தரமான இராணுவ தளங்களை நிறுவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றது அத்தோடு ஏற்கனவே எமது பிராந்தியத்திற்குள் ஏவுகணைகளையும் ஆளற்ற விமானங்களையும் ஏவியுள்ளது. காசாவில் ஈரான் எமது நகரங்களுக்கு ஏவுகணை தாக்குதல்களை நிறுவுவதற்காகவும், எமது குடிமக்களுக்கு எதிராக தீவிரவாத தாக்குதல்களுக்காகவும் தீவிரவாத குழுக்களுக்கு ஆயுதங்களை அளித்துள்ளது. லெபனானில், ஈரான் தவறாக செல்லும் ஏவுகணைகளை துல்லியமான வழிநடத்தப்படகூடிய ஏவுகணைகளாக மாற்றுவதற்கான ரகசிய தளங்களை கட்டுவதற்கு ஹிஸ்புல்லாவை வழிநடத்துகின்றது. இஸ்ரவேலிற்கு ஆழமாக உற்புறம் ஏவுகனைகள் சரியாக பத்து மீற்றருக்கும் இடையில் இலக்குவைக்கப்பட்டுள்ளது. ஹிஸ்புல்லா, இதை கவனித்து கொள்ளுங்கள், ஹிஸ்புல்லா பெய்ரூட்டில் வேண்டுமென்றே அப்பாவி மக்களை மனித கவசங்களாக பயன்படுத்துகின்றது. பெய்ருட் சர்வதேச விமானத்தளத்திற்கு அருகாமையில் மாற்று ஏவுகணை தளங்களாக இந்த மூன்று இடங்களை அவர்கள் வைத்துள்ளார்கள்.

இங்கு ஒரு படம் காணப்படுகின்றது இதன் பெறுமதியானது 'ஆயிரம் ஏவுகணைகள்' ஆகும். இங்குள்ளது பெய்ரூட் சர்வதேச விமான நிலையம். இங்குள்ளது முதலாவது ஏவுகணை தளம். இது நீர்விளிம்பின் அருகாமையிலுள்ள உசாய் பக்கத்தில், ஓடுதளத்திலிருந்து சில அடிகளுக்கு அப்பால் அமைந்துள்ளது. இங்குள்ளது இரண்டாவது தளம். இது இரண்டு அடி தூரத்தில் கால்பந்து மைதானத்திற்கு அப்பால் உள்ளது. அத்தோடு இதுவே மூன்றாவது தளம். இது அதனுடன் அடுத்து சரியாக விமான நிலையத்திற்கு அருகில் இருக்கின்றது. ஆகவே நான் இன்று ஹிஸ்புல்லாவிற்கு ஒரு செய்தியை வைத்திருக்கின்றேன்: இஸ்ரவேலுக்கு தெரியும்!, நீங்கள் என்ன செய்கின்றீர்கள் என்பதும் கூட இஸ்ரவேலுக்கு தெரியும்! எங்கே நீங்கள் அவற்றை செய்கின்றீர்கள் என்பது இஸ்ரவேலுக்கு தெரியும்! அத்தோடு நீங்கள் அதற்கூடாகவே செல்லும்படியாக இஸ்ரவேல் ஒரு போதும் அனுமதிக்காது!

சீமான்கள் மற்றும் சீமாட்டிகளே, தடைகள் நீக்கப்பட்டால் என்ன நடைபெறும் என்பதை குறித்து அணு ஆயுத ஒப்பந்தத்தை ஆதரிப்போர் தறவான நிலைபாட்டில் உள்ளார்கள். அவர்கள் தவறான நிலைபாட்டில் உள்ளார்கள், தடைகள் மீள் ஏற்படுத்தப்பட்டால் என்ன நடைபெறும் என்பதை குறித்தும் மிகதவறான நிலைபாட்டில் உள்ளார்கள். ஐக்கிய அமெரிக்காவினுடைய தடைகள் மாத்திரம் ஈரானில் சிறிதளவிலான பொருளாதார தாக்கம் கொண்டிருக்கும் என அவர்கள் வாதிடுகின்றார்கள். அதை தான் அவர்கள் கூறினார்கள். உண்மையாகவா? நன்று இப்பொழுது ஈரானுடைய  GDP அளவிலும் ஐம்பது மடங்கு பெரிதளவு GDP கொண்ட ஐக்கிய அமெரிக்காவோடு வியாபாரம் செய்யும் நிறுவனங்களுக்கும்  ஜனாதிபதி டிரம்பினால் ஈரானில் வியாபாரம் செய்யும்படியாக கட்டாயப்படுத்தப்பட்ட நிறுவனங்களினாலும் ஈரானிய பொருளாதாரத்திற்கு என்ன நடைபெற்றுள்ளது என்பதை நாம் பார்ப்போம். ஒரு வருடத்திற்கு முன்னர் ஈரானுடைய பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தது. இப்பொழுது அது சரிகின்றது. ஈரானுடைய நாணயம் வீழ்ச்சியடைந்துள்ளது. பணவீக்கம் மற்றும் வேலையின்மை உயர்ந்து வருகின்றது. பிரித்தானிய விமான நிறுவனங்கள், ஜெர்மானிய வங்கிகள், பிரான்சு எண்ணை கம்பனிகள், ஜப்பானிய எண்ணெய் இறக்குமதியாளர்கள் மற்றும் அநேகர் இதிலிருந்து வெளியேறுவதற்கு தடுமாறுகின்றனர். இது சிறு பொருளாதார தாக்கமானது என்றால், நவம்பர் மாதத்தில் ஐக்கிய அமெரிக்காவால் திணிக்கப்படப்போகும் அடுத்தகட்டத்தில் என்ன நடைபெறும் என்பதை எண்ணிப் பாருங்கள்.

ஒப்பந்தத்தின் ஆதரவாளர்கள், பொருளாதார தடைகளை மீட்டெடுப்பதானது, ஆட்சிக்கு எதிராக ஈரானிய மக்களை அணிவகுக்கும் என்று வாதிடும் போது கூட தவறானவர்கள் ஆகின்றனர். நன்று! அவர்கள் நிச்சயமாக அணிவகுக்கின்றார்கள் ஆனால் ஆட்சியை சுற்றி அல்ல - - அவர்கள் ஆட்சிக்கு எதிராகவே அணிவகுக்கின்றார்கள். அவர்கள் 'அமெரிக்காவுக்கு அழிவு உண்டாகட்டும்' என கோஷமிடவில்லை.  அவர்கள் 'சர்வதிகாரத்திற்கு அழிவு உண்டாகட்டும்' என கோஷமிடுகின்றனர்.  அவர்கள் 'இஸ்லாமிய புரட்சியை ஏற்றுமதி செய்யுங்கள்' என  கோஷமிடவில்லை. அவர்கள் 'சிரியாவை விட்டு வெளியேறு,' 'லெபனானை விட்டு வெளியேறு,' 'காசாவை விட்டு வெளியேறு,' 'ஈரானில் எம்மை கவனியுங்கள்' என கோஷமிடுகின்றனர்.

நான் இந்த ஆர்பாட்டங்களை குறித்து கேட்டேன். நான் ஈரானிய மக்களோடு பேசினேன். நான் இந்த ஒளிநாடாக்களை பகிர்ந்தேன். அத்தோடு நான் அநேக பிரதியுத்தரவுகளை ஈரானியர்களிடம் இருந்து பெற்றேன். முதலில் லண்டனில் அல்லது பாரிசில் அல்லது லாஸ் ஏஞ்சல்சில் பாதுகாப்பாயிருப்பதாக ஈரானிய வெளிநாட்டவர்களை எண்ணினேன். இல்லை. ஈரானிலிருந்த ஈரானியர்கள், இஸ்ரவேலை தழுவி, ஆட்சியை விமர்சித்து – அவர்களுடைய பெயர்களின் படி --- அவ்வாறு ஒர் குறை இருக்கின்றது. அத்தோடு என்னுடைய உளவுத்துறை மக்களிடம் நான் கேட்டேன்: என்ன நடைபெறுகின்றது? அத்தோடு சிறிது நேரத்திற்கு பின் எதிர்ப்புக்கள் வெடித்தவுடன், நான் கூறியதின் காரணத்தினால் அல்ல ஆனால் அந்த இடத்தில் மேற்கொள்ளப்படும் அசாதாரணமான காரியத்தை சுட்டிக்காட்டுவதாகவே அது இருந்தது ஏனென்றால் இந்த எதிர்ப்புக்களில் ஈரானிய மக்கள் நம்பமுடியாதளவு நம்பிக்கையை காட்டினர். நகர்புற மையங்களிலிருந்து வெளிப்புற கிராமங்களுக்கு, அத்தோடு இது முழு ஈரான் தேசத்தையும் தழுவிக்கொண்டிருக்கின்றது. வேலை செய்யும் பஜார் வியாபாரிகளிடம் இருந்து இளம் பெண்கள் வரை தமது முடியை மறைக்காதபடி செய்கின்றனர்: மத்திய கிழக்கு முழுவதும் இரத்தக்களரி போர்களுக்கிடையில், ஈரானிய மக்கள் நான்கு தசாப்தங்களாக மிருகத்தனமாக அடக்குமுறை செய்கின்ற ஒரு ஆட்சிக்கு முன்னால் தைரியமாக நிற்கின்றார்கள், அத்தோடு அது அவர்களுடைய பணத்தை வீணாக்கியது, இன்னும் அவர்களுடைய பணத்தை வீணாக்கும்.

ஆகவே இங்கு ஐரோப்பிய தலைவர்களுக்கும் மற்றவர்களுக்கும் நான் கூறுவது என்னவென்றால்: ஈரானிய சர்வதிகாரிகளை மூடுவதற்கு பதிலாக அனைத்து உலகிலும், எல்லா அபாயத்திற்கு உட்படுத்தும் அந்த ஆட்சியிற்கு எதிரான புதிய ஆதரவுக்காக அநேக அராபிய நாடுகளோடும், ஐக்கிய அமெரிக்காவோடும், இஸ்ரவேலோடும் இணைந்து கொள்ளுங்கள்.

ஈரானுடனான பேரழிவுகரமான அணுசக்தி உடன்படிக்கையிலிருந்து விலகிக்கொள்வதான தைரியமான முடிவுக்கு ஜனாதிபதி டிரம்பிற்கு இஸ்ரவேல் ஆழமான மிகப்பெரிதான நன்றியுடையதாயிருக்கின்றது. அநேக, அநேக எமது அரபு அயலகத்தவர்களும் கூட நன்றியுடையவர்களாக இருக்கின்றார்கள். அத்தோடு உலகத்தின் பாதுகாப்பு மற்றும் சமாதானத்தை குறித்து கரிசனை கொள்ளும் அனைவரும் நன்றியுடையவர்களாக இருக்கின்றார்கள். ஆனால் சீமான்கள் மற்றும் சீமாட்டிகளே, எனக்கு செய்ய வேண்டிய மிக முக்கியமான அறிக்கை ஒன்று உள்ளது: இது உங்களை ஆச்சரியப்பட வைக்கலாம் ஆனால் நான் அதை ஒப்புக்கொள்ள வேண்டும் அதாவது ஈரானுடைய உடன்படிக்கையானது ஒரு அநீதியான காரியத்தை கொண்டிருக்கின்றது -- ஈரானை மேம்படுத்துவதின் மூலம், முன் எப்பொழுதும் இராத வரையில் ஒர் நெருங்கிய உறவு மற்றும் நட்பில் அது இஸ்ரவேலையும் அநேக அரபு தேசங்களையும் நெருக்கத்திற்குள் கொண்டுவந்திருக்கின்றது, அதை என்னுடைய வாழ்நாளில் பார்த்திருக்க முடியாது, ஒரு சில வருடங்களுக்கு முன்பு வரை கற்பனை செய்ய முடியாதளவிற்கு இருந்தது.

ஓர் அச்சுறுத்தலை சுற்றி, ஓர் சவாலை சுற்றி, நட்பை நீங்கள் உருவாக்கும் போது, நீங்கள் உடனடியாகவே சந்தர்ப்பங்களை காண்கின்றீர்கள் என்று நீங்கள் அறிவீர்கள். இஸ்ரவேல் உதவி செய்தும், உதவி செய்யப்படவும் எமது மக்களுக்கான நல்ல வாழ்க்கையை எவ்வாறு கொண்டுவர வேண்டும் என்பதாகும், ஆனால் இது பாதுகாப்பிற்கு மட்டும் அல்ல. இஸ்ரவேல் இந்த புதிய நட்பு குறித்து ஆழமான பெறுமதியினை கொண்டிருக்கின்றது அத்தோடு பாலஸ்தீனியர்கள் உட்பட, ஜோர்தானிலிருந்து அராபிய அண்டை நாடுகள், எகிப்து அப்பால் இஸ்ரவேல் சமாதானத்தை விரிவுபடுத்தும், முறையான சமாதானம், இயலுமை சீக்கிரம் வரும் நாட்களை குறித்து நான் நம்பிக்கையுடையவனாக இருக்கின்றேன். இந்த இலக்கை அடையும்படியாக ஜனாதிபதி டிரம்ப் மற்றும் அவருடைய சமாதான குழுக்களோடு வேலை செய்வதற்கு நான் எதிர்பார்த்து இருக்கின்றேன். நான் அறிந்த இடமாகிய ஐக்கிய அமெரிக்காவாகிய இங்கு நாம் இருக்கின்றோம், நானும் கூட இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த வேண்டுகின்றேன,; ஏனென்றால் அநேக வருடங்களுக்கு முன்பு அநேக வருடங்களாக நான் தூதுவராக பணியாற்றினேன், ஆகவே நான் ஐ.நா குறித்து சில காரியங்களை நான் அறிவேன். ஆகவே நான் இந்த சந்தர்ப்பத்தை ஜனாதிபதி டிரம்ப் அத்தோடு ஐ.நா.வில் இஸ்ரவேலுக்கு அசைக்க முடியாத ஆதரவை ஏற்படுத்திய தூதர் ஹெலி அவர்களுக்கும் இஸ்ரவேலினுடைய பாராட்டை தெரிவிக்கும் விதமாக பயன்படுத்த விரும்புகின்றேன். அவர்கள் ஐயத்திற்கு இடமின்றி இஸ்ரவேல் தன்னைத்தான் பாதுகாத்துக்கொள்ளும் உரிமையை குறித்து மிகவும் ஆதரவாக செயற்பட்டனர்.

அவர்கள் சரியாக வரலாற்று புறக்கணிப்பை செய்தார்கள் - யுனெஸ்கோவை புறக்கணித்தார்கள் மற்றும் ஐ.நா மனித உரிமை அமைப்பிலிருந்து மிகச்சரியாக வெளியேற்றப்பட்டனர். உலகை சேர்த்தல் தொடர்பாக மற்ற பகுதிகளை விட இஸ்ரவேலை குறித்த அநேக தீர்வுகளை அவர்கள் கொண்டிருக்கின்றார்கள் என நான் எண்ணுகின்றேன். அத்தோடு பத்து மடங்கு அதிகமாக ஈரான், சிரியா, அதற்கு எவ்வாறு பெயர் வைப்பீர்கள் என்று எனக்கு தெரியாது. பத்து மடங்கு மாத்திரம் அல்ல, ஏனென்றால் பூச்சியத்தை கொண்டு எந்த எண்ணையும் உங்களால் பெருக்க முடியாது.

ஜனாதிபதி டிரம்ப், தூதுவர் ஹேலி ஆகியோருக்கு நிதியளிப்பதை அவர்கள் நிறுத்தினார்கள், அவர்கள் மறுசீரமைக்கப்படாத UNRWA க்கு நிதியளிப்பதை அவர்கள் நிறுத்தினார்கள், இது பாலஸ்தீன அகதிகளுக்கான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மாறாக அதை பூரணப்படுத்தும் ஓர் அமைப்பாகும்.

நாளுக்கு நாள், இஸ்ரேலினுடைய பழிதூற்றலுக்கு பின் டிரம்பினுடைய நிர்வாகமானது ஐ.நா.வில் இங்கு நீண்ட காலமாக ஓர் சிறப்பம்சமாக எழுந்து நிற்கின்றது. 25 வருடங்களுக்கு முன்பாக சீயோனிசத்தை இனவாதத்திற்கு ஒப்பிட்டு செய்யும் வெட்கப்படுத்தும் தீர்வானது அகற்றப்பட்டாலும், அதன் தவறான துர்நாற்றம் இன்னும் இந்த அறைகளுக்கிடையே ஒட்டிக்கொண்டிருக்கின்றது என்று நான் கூற மிகவும் வருந்துகின்றேன்.

இஸ்ரவேல் எத்தியோப்பிய யூதர்களை சுதந்திரத்திற்கு நேராக உயர்த்தினர், அத்தோடு யூத நகரில், இஸ்ரவேலில் ஒரு புதிய வாழ்க்கையோடும் கூட. இன்னும் ஐ.நா.வில் இங்கு, ஐ.நா.வில் இங்கு இஸ்ரவேலின் மீது அபத்தமான இனவெறி குற்றச்சாட்டு உள்ளது.

இஸ்ரவேலில் அராபிய குடிமக்கள் எமது தேர்தலில் பங்குபற்றியுள்ளனர், எமது பாராளுமன்றங்களில் சேவித்துள்ளனர், எங்கள் நீதிமன்றங்களில் தலைமை தாங்கியுள்ளனர், அனைத்து மற்றைய இஸ்ரவேலிய குடிமக்களை போல அதே தனிமனித உரிமைகளை சரியாக கொண்டிருக்கிறார்கள். இன்னும் ஐ.நா.வில் இங்கு, இஸ்ரவேல் வெட்கக்கேடான முறையில் குற்றம் சாட்டப்படுகின்றது.

இன்று! இஸ்ரவேல் நிலைபெற்ற வருடமாகிய 1948ல் இருந்ததை காட்டிலும் ஐந்து மடங்கு அநேக பலஸ்தீனியர்கள் காணப்படுகின்றார்கள். இன்னும் ஐ.நா.வில் இங்கு, இனப் படுகொலைக்கு முர்க்கத்தனமாக குற்றம் சாட்டப்படுகின்றது.

சீமான்கள் மற்றும் சீமாட்டிகளே, இது என்ன என்பதை குறித்து உங்களுக்கு தெரியுமா?

இது அதே பழைய ஆன்டி செமிஸ்தியம் தான் ஆனால் வேறொரு புதிய முகமூடியுடன்... அவ்வளவும் தான் இது.

ஐ.நா.சபையில் இஸ்ரவேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு ஆற்றிய உரை 27-9-2018 (பகுதி - 3/3)

மேலும், யூத மக்களே அவதூறு செய்யப்பட்டனர் அத்தோடு வித்தியாசமான தராதரத்திற்கு ஏற்படுத்தப்பட்டார்கள்.

இன்று! யூத நாடே அவதூறு செய்யப்படுகின்றது, அத்தோடு வித்தியாசமான தராதரத்திற்கு உட்படுத்தப்படுகின்றது.

இங்கு ஓர் உதாரணம் தரப்படுகின்றது: யூத மக்களுடைய தேசிய மாநிலமாக இஸ்ரவேலின் சட்டத்தின் அறிவிப்பின்படி சமீபத்தில் பெறப்பட்ட, எமது பாராளுமன்றம், எமது நெசட்டிற்கு பின் இஸ்ரவேலுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு தாக்குதல்களை எடுத்துக்கொள்ளுங்கள்.

ஞாபகத்தில் கொள்ளுங்கள்! இஸ்ரவேல் ஒரு சுதந்திர நாடு! நீங்கள் ஒரு சட்டத்தை எதிர்க்கலாம், அத்தோடு மக்களும் எதிர்ப்பு செய்தார்கள். இதற்கு நீங்கள் வித்தியாசமான வார்த்தைகளை அல்லது அந்த பிரிவுகளை கொண்டு அழைக்கலாம் அல்லது அந்த பிரிவில் சேர்ப்பதற்கோ அல்லது கழிப்பதற்கோ நீங்கள் அழைக்கலாம். உங்களால் அது செய்ய முடியும்.

ஆனால் இஸ்ரவேல் இனவெறி என அழைக்கப்படும் போது, இஸ்ரவேல் ஹீப்ருவை அதன் உத்தியோகபூர்வ மொழியாக உருவாக்கியதால் இனவெறி என அழைக்கப்படுகின்றதா மற்றும் தாவீதினுடைய நட்சத்திரத்தை  அதன் கொடியில் கொண்டிருப்பதாலா இஸ்ரவேல் யூத மக்களுடைய தேசிய நாடு என தன்னில் பிரகடனம் செய்வதால் இனவெறி எனப்படும் முத்திரை குத்தப்படுகின்றதா, இது இது கீழ்த்தரமான ஆபத்தான நேர்மையற்ற முறை ஆகும். அத்தோடு உங்களுக்கு ஏன் என்று தெரியுமா?

ஏனென்றால் இந்த அறையில் 100 நாட்டிற்கும் அதிகமான பிரதிநிதிகள் இருக்கின்றார்கள் அவர்களிடம் ஒரேஒரு உத்தியோகபூர்வ மொழியே காணப்படுகின்றது, அநேக நாடுகளில் பொதுவாக பேசப்படும் வேறு அநேக மொழிகளும் கூட காணப்படுகின்றது. சிலுவை அடையாளங்களையும் அல்லது பிறை அடையாளங்களையும் அவர்களுடைய கொடிகள் கொண்டிருக்கும், 50க்கும் மேற்பட்ட நாடுகள் காணப்படுகின்றன, எவ்வாறாயினும் கூட அவர்களில் அநேக இஸ்லாமியர்கள் அல்லாதவர்களும் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களும் இருக்கின்றார்கள், அவர்களின் அநேகர், அவர்களுக்கு நடுவில் வாழுகின்றார்கள். அத்தோடு கூட டஜன் கணக்கான நாடுகள் அவர்களுடைய எல்லைக்குள் பல இன மற்றும் தேசிய சிறுபான்மையினர் இருப்பினும் கூட குறிப்பிட்ட மக்களுக்கு தேசிய நாடாக தம்மைத்தாம் வரையறுக்கின்றனர்.

அவர்களுடைய தனிப்பட்ட தேசிய அடையாளத்தை கொண்டாடுவதற்கு அவமதிப்பு அல்லது இழிவு செய்யப்படும் எந்த ஒரு நாடும் இல்லை. இஸ்ரவேல் மாத்திரமே அவமதிப்பு செய்யப்படுகின்றது. இஸ்ரவேல் மாத்திரமே இழிவு செய்யப்படுகின்றது.

நாம் ஒரு தேசிய அரசை கொண்டிருக்காமல் இருக்கும் யூத மக்களை குறித்தான தனிப்பட்ட விடயம் என்ன? நாம் ஒர் தேசிய அரசை கொண்டிருப்பதை இன்னும் அநேகர் எதிர்ப்பதன் குறித்தான தனிப்பட்ட விடயம் என்ன?

சில தருணங்களுக்கு முன்னர், ஜனாதிபதி அப்பாஸ் இஸ்ரவேலர்களுடைய தேசிய மாநில சட்டம் இஸ்ரவேல் ஒரு இனவெறியுடைய, நிறவெறியுடைய அரசு என்பதை உறுதிப்படுத்துகின்றது என அருவருப்புடன் கூறினார்.

ஜனாதிபதி அப்பாஸ், நீங்கள் மிகச்சிறந்த காரியத்தை அறிந்திருக்க வேண்டும். நீங்கள் இன அழிப்பை மறுத்து ஒரு விளக்கவுரையை எழுதினீர்கள். உங்களுடைய பாலஸ்தீன ஆணையம் யூதர்களுக்கு நிலத்தை விற்பனை செய்வதற்காக பாலஸ்தீனர்களுக்கு மரண தண்டனையை விதிக்கின்றது. நீங்கள் அதை குறித்து அறிந்திருக்கின்றீர்களா? ஓரு யூதர் ஒரு கட்டிடத்தை அல்லது பாலஸ்தீன பிராந்தியத்தில் எங்காவது ஒரு துண்டு நிலத்தை வாங்கினால், அந்த நிலத்தை விற்ற பஸ்தீனியராகிய அவர் தூக்கிலிடப்படுவார். இவ்விதமாகவே சட்டங்கள் கூறுகின்றது.

ஜனாதிபதி அப்பாஸ், யூதர்களை கொன்ற பலஸ்தீனிய பயங்கரவாதிகளுக்கு நீங்கள் பெருமையாக பணம் செலுத்துகின்றீர்கள். உண்மையாகவே, எவ்வளவுக்கதிகம் அவர்கள் கொல்லப்படுகின்றார்களோ, அவ்வளவுக்கு அதிகம் நீங்கள் பணம் செலுத்துகின்றீர்கள். அவர்களுடைய சட்டத்திலும் கூட அவ்வாறு இருக்கின்றது. அத்தோடு இஸ்ரவேலின் அறநெறியை நீங்கள் கண்டனம் செய்கின்றீர்களா? நீங்கள் இஸ்ரவேலை இனவெறி என அழைக்கின்றீர்களா?

இது சமாதானத்திற்கான வழி அல்ல! இஸ்ரவேல் தொடர்ச்சியாக அர்ப்பணிக்கப்பட்டிருப்பதும், தேவைப்படும் எம் அனைவருக்கும் அவசியமான  சமாதானத்தை அடைவதற்கான வழி இது அல்ல. பயங்கரவாதிகளுக்கு பணம் செலுத்தும் ஆட்சியில் உள்ள தலைவரை இந்த சரீரம் பாராட்டக் கூடாது. ஐ.நா. அத்தகைய ஒரு இழிந்த கொள்கையை கண்டிக்க வேண்டும்.

அத்தோடு ஐ.நா, 2014ல் யுத்த நிறுத்தத்திற்கு இடைதரகராக செயல்பட்ட ஐ.நா வானது, வீழ்ந்த எமது வீரர்களான ஓரோன் ஹாவுல் மற்றும் ஹாடார் கோல்ட்டின் ஆகியோரை ஹமாஸ் விடுவிக்கும்படியாக கோர வேண்டும், இவர்கள் போர்நிறுத்தத்தை மீறி ஹமாசினால் கட்டத்தப்பட்டவர்கள் ஆவார்கள்.

ஹமாசும் கூட அது சிறைவைத்து கொண்டிருக்கும் அபேரா மென்கிஸ்து மற்றும் ஹிசாம் அல் சாயத் ஆகிய இரண்டு இஸ்ரவேலிய குடிமக்களையும் கூட விடுவிக்க வேண்டும்.

சீமான்கள் மற்றும் சீமாட்டிகளே,

நான் இங்கு நின்றும் ஒவ்வொரு தடவையும், இன்று நான் செய்ததை போலவே நான் உணருகின்றேன். இஸ்ரவேலின் ஜனநாயக அரசு மற்றும் யூதர்களின் பிரதம மந்திரியாக இங்கு நான் நின்று கொண்டிருக்கின்றேன்.

இஸ்ரவேல் யூதமாகவும் ஜனநாயகமாகவும் இரண்டையும் கொண்டிருக்க முடியாது என சிலர் நம்புகின்றார்கள். இது தவறானது. இஸ்ரவேல் இரண்டுமே ஆனது, இஸ்ரவேல் இரண்டிலுமே தொடர்ந்தும் நிலைத்து நிற்கும்.

ஏறத்தாழ 4000 வருடங்களுக்கு முன்பாக வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தில் ஆபிரகாம் மற்றும் சாராள் அவர்களுடைய பயணத்தை மேற்கொண்டார்களோ அன்றே இஸ்ரவேல் என்னும் தேசம் எமக்கான தாய் நாடாக மாறி விட்டது. இந்த இடத்திலேயே ஈசாக்கு, ரெபேக்காள், யாக்கோபு, லேயாள்; மற்றும் ராகேல் தேவனுடனான அவர்களுடைய நித்திய உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டார்கள்.

இங்கேயே யோசுவா, இஸ்ரவேலை எமக்கு ஓரு இறையாண்மை உள்ள தேசமாக மாற்றி கொடுத்தார், இங்கேயே தாவீது ஆட்சி செய்தார், ஏசாயா பிரசங்கித்தார், இங்கேயே மக்காபியர்கள் போராட, மசாடா வீழ்ச்சியடைந்தது, இந்த இடமே நாம் நாடுகடத்தப்பட்டதும், பின்பு நாம் திரும்பியதுமான இடமாகும், இங்கேயே எமது பண்டைய நகரை மீள கட்டி நித்திய தலைநகராக எருசலேமை ஏற்படுத்திக்கொண்டோம்.

இந்த இடமாகிய இஸ்ரவேல் தேசம் மாத்திரமே யூத மக்கள் பெருமையுடன் சுய நிர்ணயத்தின் எமது கூட்டு உரிமையை கையாளக்கூடிய ஒரே இடம் ஆகும். உலக நாடுகளின் சங்கத்தினால் ஏறத்தாள நூற்றாண்டுக்கு முன்னேயும் ஐ.நாவினால் 70 ஆண்டுகளுக்கு முன்னேயும் யூத தேசத்தை நிறுவுவதற்கான ஆதரவை வாக்களித்த போதே அந்த உரிமை அங்கீகரிக்கப்பட்டது.

அதே நேரத்தில், இஸ்ரவேல் ஒரு துடிப்புமிக்க ஜனநாயக நாடாக, அதாவது அதனுடைய குடிமக்கள் அனைவரும் -- யூதர்களும் யூதர்கள் அற்றவர்களும் ஒன்றுபோல் சமமான தனிமனித உரிமையை அனுபவிப்பதோடு இந்த உரிமைகள் அனைத்தும் சட்டத்தினால் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரவேலில் நீங்கள் யூதராய் இருக்கலாம் அல்லது அரபியராய் இருக்கலாம் அல்லது கிறிஸ்தவர் அல்லது இஸ்லாம், டூரூஸ் அல்லது பிடோயுன் அல்லது எதுவாகவும் இருக்கலாம், உங்களுடைய தனிபட்ட உரிமைகளானது ஒரே மாதிரியாகவே காணப்படும், அத்தோடு அது என்றென்றைக்குமே ஒரே மாதிரியாகவே காணப்படும்.

மத்திய கிழக்கில் அது வெளிப்படையாக இல்லை, இப்பொழுது அது தெளிவாக இல்லை, மத்திய கிழக்கில் பெண்களை பெரும்பாலும் சொத்து என்றே கருதுகின்றார்கள், சிறுபான்மையினத்தினர் துன்புறுத்தப்படுகின்றார்கள், ஓர் பாலினத்தார் தூக்கிலிடப்படுகின்றனர், இஸ்ரவேலானது மின்னும் சுதந்திரம் மற்றும் செயற்பாடுகளுக்கும் உதாரணமாக எழுந்து நிற்கின்றது.

சீமான்கள் மற்றும் சீமாட்டிகளே,

என்னுடைய நாடான இஸ்ரவேலை பிரதிநிதித்துவம் செய்வதால் நான் அதிகம் பெருமிதம் அடைய முடியாது. இஸ்ரேவேலை கண்கவர் படைபாற்றலான உலகரீதியான தொழில்நுட்ப வல்லமையையும், தகவல் தொழில்நுட்பத்தையும், நுட்பமான வேளாண்மையையும் உடையதாக நாம் மாற்றியிருக்கின்றோம் என்பதில் நாம் பெருமையடைகின்றோம். உங்களுக்கு அது என்ன என்று தெரியுமா? நாம் ஒவ்வொரு தாவரத்திற்கு அடியிலே உரத்தையும் தண்ணீரையும் இலக்காக வைக்கின்றோம். தோட்டத்தில் அல்ல, தோட்டத்தின் ஒரு பகுதியில் அல்ல. ஒவ்வொரு தாவரத்திற்கு அடியிலேயே தான்.  உலகை சுற்றியுள்ள மில்லியன் கணக்கான மக்களுடைய வாழ்க்கையில் முன்றேற்றத்தை ஏற்படுத்தும் நீர் மேலாண்மை, இணைய பாதுகாப்பு, தன்னாட்சி வாகனங்கள், தொழில்நுட்ப சுகாதாரம், மருத்துவ உபகரணங்கள் மற்றும் இன்னும் அநேக துறைகளில் இந்த மிகச்சிறந்த நம்பமுடியாத அபிவிருத்திகளை கொண்டு வருவதையிட்டு நான் பெருமையடைகின்றேன்.

இஸ்ரவேலின் ஞானமுள்ள அறிஞர்கள், புதிதாக்கும் தொழில் முனைவோர், தாலந்துள்ள கலைஞர்களுக்காக நான் பெருமையடைகின்றேன். இஸ்ரவேலின் அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்கள், இரக்கமுள்ள மருத்துவர்கள், ஹைட்டி தொடக்கம் மெக்சிகோ வரை, நேபாளம் தொடக்கம் பிலிப்பைன்ஸ் வரை வாழும் மக்களை பாதுகாத்த எமது தேடுதல் மற்றும் உயிர்களை காப்பாற்றும் குழுவினருக்காக நான் பெருமையடைகின்றேன். மிக உயர்ந்த நிலை பெறுமதிகளை நிலைநிறுத்தும் எமது தாய்நாட்டை மிக அறிவுடன் பாதுகாக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய தைரியமுள்ள இஸ்ரவேலின் வீரர்களுக்காக நான் மிகவும் பெருமையடைகின்றேன். மிகவும் பெருமையடைகின்றேன்.

அனைத்திற்கும் அதிகமாக, சீமான்கள் மற்றும் சீமாட்டிகளே, அனைத்திற்கும் அதிகமாக எமது பாரம்பரியத்தின் ஆழ்ந்த ஊற்றுக்களிலிருந்து அசாதாரண வலிமைகளை பெற்ற, ஒன்றே மற்றும் ஒரே யூத தேசமாக எதிகாலத்தை பாதுகாத்து காட்டுவதற்கு, அற்புதகமாக கட்ட தீர்மானிப்போருக்காகவும், பிரிக்க முடியாத தியாக எண்ணங்களை கொண்டிருக்கும் இஸ்ரவேலின் மக்களுக்காக நான் பெருமை அடைகின்றேன்.

நன்றி.

Wednesday, February 27, 2013

கத்தரி தோட்டத்து வெருளிகள்


மனித சமுதாயம் உருவான காலம் தொடக்கம் இன்றுவரை மனிதர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு, விளையாட்டு பொம்மைகளை வாங்கிக் கொடுக்கின்றனர். அமெரிக்காவிலுள்ள ஒரு நிறுவனம் பார்பி பொம்மைகளை உருவாக்க அவை அரைகுறை ஆடைகளுடன் இருப்பதாக கூறி, ஈரானியர்கள் முக்காடிட்ட பொம்மைகளை உருவாக்குகின்றனர்.

கி.மு 2456ல் ஏற்பட்ட ஜலப்பிரளயத்தில் இறைவனால் காப்பாற்றப்பட்ட நோவாவின் பூட்டனான நிம்ரோத், 'கர்த்தருக்கு முன்பாக பலத்த வேட்டைக்காரனாக இருந்தான்' என்று வேதாகமம் கூறுகின்றது (ஆதி 10:9). இவன் சிநேயார் தேசத்திலுள்ள பாபிலோன், ஏரேக், அக்தாத், கல்னே ஆகிய இடங்களை ஆட்சிபுரிந்தவன். இவன் ஒருநாள் திடீரென மரணமடையவே, அவனது மனைவியான செராமிஸ்..... அரசனாகிய நிம்ரோத் மீண்டும் பிறப்பான் என விளம்பரப்படுத்தி, ஒரு தேவ தாய் ஒரு குழந்தையை தூக்கி வைத்திருப்பது போன்ற பொம்மைகளை உருவாக்கி, பூமியெங்கும் மனிதர் குடியிருந்த பகுதிகளெங்கும் அச்சிலைகளை அனுப்பிவைத்தாள். பாபிலோனிலிருந்து மனித நாகரீகம் மட்டுமல்ல! இப்பொம்மை வணக்கமும் கூடவே பூமியெங்கும் பரவியது!

ஈராக்கில் பிறந்த ஆபிரகாம் இப்பொம்மை வணக்கத்தில் கலந்து கொள்ளாதவனாக இருந்ததால், ஏக இறைவன் அவனது சந்ததியில், தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை பிறக்கவைப்பதற்காக, அவனை மத்திய தரைக் கடலோரமாக போய் குடியேறும்படி கட்டளையிட்டார். பூவுலகின் நடுமையமாக கருதப்படும் எருசலேம் மாநகரில் சாத்தானின் கபாலமாகிய பிசாசின் தலையை வெற்றிகரமாக நசித்து, அவனது போலிவேடத்தை அழிப்பது தேவனுடைய உன்னதத்திட்டமாக இருந்தது. 2000 ஆண்டுகளுக்கு முன் இயேசு கிறிஸ்து சிலுவையில் தொங்கி சர்வலோக பெரும் யாகமாகிய பாவநிவாரண பூசைப்பலியை நிறைவேற்றினார். அந்த யாகத்தில் சிந்தப்பட்ட தேவகுமாரன், இயேசுகிறிஸ்துவின் இரத்தத்திற் கூடாகவே, மனித குலத்தினரின் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்பதும், மன்னிக்கப்பட்ட மனிதர்கள் படிப்படியாக தூய்மையடைந்து புனிதர்களாகின்றனர் என்றும் அவர்கள் தேவலோக பிரஜைகள் ஆகின்றனர் என்றும் வேதாகமம் கூறுகின்றது.

பஞ்சத்தின் நிமித்தம் எகிப்தில் குடியேறிய ஆபிரகாமின் சந்ததியினர், 430 வருடங்களின் பின் அங்கிருந்து மோசேக்கூடாக... செங்கடலைக் கடந்து சீனாய் மலையோரமாக வரும்போது.... அக்கொடுமுடியில் தோன்றிய தேவன், நீங்கள் 'என்னையன்றி வேறு தெய்வங்களை வணங்கக் கூடாது' என்றும், பொம்மை வணக்கமாகிய'சிலைகளை உருவாக்கக் கூடாது' என்றும், அடுத்த வீட்டுக்காரன் மனைவிமேல் மோகங்கொள்ளக்கூடாது என்றும்... இவ்வண்ணமாக மொத்தம் பத்து அதிவிசேஷ கட்டளைகளை தமது விரல்களால் எழுதிக்கொடுத்துள்ளார் (யாத். 20:1-17).

மாமன்னன் சாலமோன், தேவாதி தேவனுக்கு ஜெருசலேமில் மாபெரும் தேவாலயத்தைக் கட்டிய போதிலும் யூதர்கள், அயல் நாட்டினரின் பொம்மைகளையே வணங்க ஆரம்பித்தனர். இறைவன் தமது தீர்க்கதரிசிகளைக் கொண்டு அவ்வணக்கம் படுபிழைகள் என எச்சரித்தபோதும் எருசலேமில் வாழ்ந்தவர்கள் திருந்தவேயில்லை! எனவே இறைவன், நாமறிந்த எமது இன்றைய தலைவரைப்போன்ற தோற்றமுடைய பாபிலோனிய பேரரசனான நேபுகாத்நேச்சரைக் கொண்டே, யூத தேசத்தை அழித்தொழிக்க முடிவெடுத்தார்.

கி.மு 606ல் பாபிலோனிய இராணுவம் ஜெருசலேமிற்குள் நுழைந்து யோயாக்கீம் என்ற யூத அரசனைப் பிடித்து, அவனைக் கொலை செய்து, அவனுடலை பனியிலும் சூரிய உஷ்ணத் திலும் வாட்டியெடுத்து இறுதியில் ஒரு செத்த கழுதையை புதைப்பதுபோல் புதைக்க கட்டளையிட்டார். (எரேமியா 36:30)   பின்பு 11 வருட வித்தியாசத்தில் இறுதி யூத அரசனான சிதேக்கியாவைப் பிடித்து, அவனது கண்களுக்கு முன்பதாகவே அவனது பிள்ளைகளை கொலைசெய்து, அவனது இரு கண்களையும் குருடாக்கி, அவனை பாபிலோனுக்கு இழுத்துச் செல்லவும் அவர் அனுமதித்தார். (எரேமியா 52:10-12). இவ்வண்ணம் யூத அரசியல்,  தமிழர்களின் முள்ளிவாய்க்கால் அழிவைப்போல் பெரும் பேரழிவாக முடிந்ததற்கு, தேவாதி தேவன் எக்காலமும் அருவருக்கும் இப் பொம்மை வணக்கங்களே மூலகாரணங்களாக அமைந்தன.

விக்கிரக பொம்மை வணக்கங்கள் பெரும் பேரழிவுகளை ஏற்படுத்தும் என்பதை பரிசுத்த வேதாகமமும், 2009 மே மாதம்வரை இலங்கையில் நடைபெற்ற இனவழிப்பு சம்பவங்களும் நமக்கு உணர்த்துகின்றன. இன்று மனிதர் மெய்யான தெய்வம் எது? மனிதர்களால் அழகுபடுத்தப்பட்ட பொம்மைகள் எது? என்பதை பிரித்து அறியமுடியாமல் பட்டுடுத்தி, மின்னும் பொன் ஆபரணங்களால் தங்களை அலங்கரித்து, ஊர்வலமாக வலம்வந்து, கோவில்களில்  இப்பொம்மைகளைத் தரிசித்து, அவற்றிடமிருந்து மாபெரும் ஆசிகளை பெற்றுக்கொள்வதாக இம்மக்கள் எண்ணிக்கொள்கின்றனர். ஆனால் அவ்வெண்ணங்கள் யாவும் உண்மையானவைகள் அல்ல!

தீர்க்கதரிசியான எரேமியா, யூத தேச மக்களுக்கும் யூத அரசர்களுக்கும் உவமித்துக் கூறிய (תמר) தோமேர் என்ற எபிரேய சொல்லை.... ரோமன்கத்தோலிக்க திண்டிவன மொழிபெயர்ப்பில் 'வெள்ளரித்தோட்டத்தில் பறவையோட்டவைக்கும் பூச்சாண்டி பொம்மைகள்' என்றும், வேறு ஒரு பிரதியில் 'சோளக்கொல்லை பொம்மை' என்றும் திருவிவிலியத்தில் 'வெள்ளரித்தோட்ட பொம்மை' என்றும் மிகச்சரியாக மொழி பெயர்த்துள்ளனர். (எரேமியா 10:5) இன்று பல கிறிஸ்தவ வீடுகளில் கூட வைக்கோல் அடைக்கப்பட்ட, இக் கரிப்பானை தலையுடைய 'கத்தரி தோட்டத்து வெருளிகள்' அழகிய சிலைகளாகவும் கண்ணாடி பிரேம்களுக் குள் அச்சடிக்கப்பட்ட வர்ணப் படங்களாகவும் காணப்படவில்லையா? யூதருக்கொரு சட்டம்! நமக்கொரு சட்டமா? இப் பூச்சாண்டி வணக்கத்தை, இறைவன் பெரும் பாவமாக கணித்து, அவ் வணக்கத்தினரை தண்டிப்பது மாத்திரமல்ல, அவர்களுடைய பிள்ளைகளையும் அவர்களுடைய பேரப்பிள்ளைகளையும், அவர்களது பூட்டப்பிள்ளைகளையும் தண்டிப்பேன் என்றும் எச்சரித்துள்ளார்.

'உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்து பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்' என்று இவ்வுலகத்தை சிருஷ்டித்த இறைவனாகிய ஜெகோவா எச்சரித்துள்ளார். இன்று சத்திய மார்க்கமாக கிறிஸ்தவம் மட்டுமே துலங்கிக் கொண்டிருக்கின்றது. 'தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவைக் குறித்து அறிவதே சதாகால வாழ்வு' என்று யோவான் 17:3 கூறுவதால் நீங்கள் விரைவாக அவரைக்குறித்து அறிய தீர்மானிக்கவேண்டும். 

அடுத்தவருடம் நீங்கள் இப்பூமியில் வாழமுடியாமல், உங்கள் வாழ்க்கை இவ்வருடத்துடனேயே  முடிவடையலாம். எனவே இவ்வருடத்தையே இரட்சகரான இயேசுகிறிஸ்துவை அறியும் நல்ல வருடமாக நீங்கள்  பயன்படுத்திக் கொள்ளுங்கள்! பூச்சாண்டிகளை நீங்கள் வணங்குவீர்களானால் அதற்கு சரியான தண்டனை  உங்களருகே நிற்கும் ஆயுததாரியின் அல்லது கிறிஸ்மனிதனின்  இடுப்பில் செருகப்பட்டிருக்கும் கூரான ஆயுதமாகும் என்பதை கீழ்கண்ட வசனம் உறுதி செய்கின்றது.

'தேவன் நீதியுள்ள நியாயாதிபதி. அவர் நாள்தோறும் பாவியின்மேல் சினங் கொள்ளுகிற தேவன். அவன் மனந்திரும்பாவிட்டால் அவர் தம்முடைய பட்டயத்தைக் கருக்காக்குவார். அவனுக்கு மரணாயுதங்களை ஆயத்தம் பண்ணினார். தம்முடைய அம்புகளை (அதாவது இடியோடு கூடிய மின்னலை) அக்கினி அம்புகளாக்கினார்'  (சங்.7:11-22). 

எனவே ஒருநாள் அவன் உன்னைப் பிடித்து ஏதோ ஒரு காரணத்தை சொல்லி...., 'நீ ஒரு படுபிழையான நபர்' என்று உனக்கு ஒரு மகுடமிட்டு, உன்னை நியாயந்தீர்த்து, உன்னைக் கொன்று போடுவதற்கு  முன்பதாகவே.... நீ உனது குற்றங்களிலிருந்து விடுபட, இன்றே கிறிஸ்து இயேசுவை நெருங்கி, அவர் தரும் பாவ மன்னிப்பை பெற்றுக்கொள்வாயாக!

நன்றி!

Thursday, December 1, 2011

பரிசுத்த வேதாகமம் கூறும் உண்மைகள்!

ஆபிரகாம் என்ற எபிரேயனுக்கு, எகிப்திய வேலைக்கார பெண்ணுக்கூடாக இஸ்மவேல் என்னும் மகனும் உரிமைக்குரியவனாக சொந்த மனைவி சாராளுக்கு ஊடாக ஈசாக்கு என்னும் மகனும் பிள்ளைகளாக பிறந்தனர். தொடர்ந்து கெத்தூராள் என்னும் கானானிய அல்லது எமோரியப் பெண்ணுக்கூடாக சிம்ரான், யக் ஷான், மேதான், மீதியான், இஸ்பாக், சூவா என்னும் ஆறு பிள்ளைகள் பிறந்தனர். (ஆதியாகமம் 25:1-2)

ஆபிரகாம் தன் வாரிசான ஈசாக்கிற்கு எபிரேய ஜாதியில் பெண் எடுக்கும்படி சிரியாவின் வடக்கே இருந்த பதான் ஆராமிற்கு தனது ஊழியனான எலியேசரை அனுப்பி வைத்தான். தேவ அனுக்கிரகத்தால் வழிநடத்தப்பட்ட எலியேசர், தாய்மாமன் மகளான ரெபேக்காளை ஈசாக்கிற்குரிய மணமகளாக்க கண்டு, அவளை கானான் தேசத்திற்கு அழைத்துவர ஆயத்தமானான். அப்பொழுது ரெபேக்காளின் உறவினர் அனைவரும்….. ரெபேக்காளை வாழ்த்தி…. எங்கள் சகோதரியே, நீ கோடாகோடியாய்ப் பெருகுவாயாக. உன் சந்ததியார் தங்கள் பகைஞருடைய வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்வார்களாக என்று ஆசீர்வதித்தார்கள். அப்பொழுது ரெபெக்காளும் அவள் வேலைக்காரிகளும் எழுந்து ஒட்டகங்கள்மேல் ஏறி, அந்த மனிதனோடேகூடப் போனார்கள். ஊழியக்காரனான எலியேசர் அவர்களை அழைத்துக் கொண்டுபோனான். (ஆதியாகமம் 24:60-61)

19. ஆபிரகாமின் குமாரனாகிய ஈசாக்குடைய வம்சவரலாறு. ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்.

20. ஈசாக்கு ரெபெக்காளை விவாகம்பண்ணுகிறபோது நாற்பது வயதாயிருந்தான். இவள் பதான்அராம் என்னும் சீரியா தேசத்தானாகிய பெத்துவேலுக்குக் குமாரத்தியும், சீரியா தேசத்தானாகிய லாபானுக்குச் சகோதரியுமானவள்.

21. மலடியாயிருந்த தன் மனைவிக்காக ஈசாக்கு கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்தான். கர்த்தர் அவன் வேண்டுதலைக் கேட்டருளினார். அவன் மனைவி ரெபெக்காள் கர்ப்பந்தரித்தாள்.

22. அவள் கர்ப்பத்திலே பிள்ளைகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டிருந்தன. அப்பொழுது அவள்: இப்படியானால் எனக்கு எப்படியோ என்று சொல்லி, கர்த்தரிடத்தில் விசாரிக்கும்படி போனாள்.

23. அதற்குக் கர்த்தர்: இரண்டு ஜாதிகள் உன் கர்ப்பத்தில் உண்டாயிருக்கிறது. இரண்டுவித ஜனங்கள் உன் வயிற்றிலிருந்து பிரியும். அவர்களில் ஒரு ஜனத்தார் மற்ற ஜனத்தாரைப்பார்க்கிலும் பலத்திருப்பார்கள், மூத்தவன் இளையவனைச் சேவிப்பான் என்றார்.

24. பிரசவகாலம் பூரணமானபோது, அவள் கர்ப்பத்தில் இரட்டைப் பிள்ளைகள் இருந்தது.

25. மூத்தவன் சிவந்த நிறமுள்ளவனாயும் சர்வாங்கமும் ரோம அங்கி போர்த்தவன் போலவும் வெளிப்பட்டான். அவனுக்கு ஏசா என்று பேரிட்டார்கள்.

26. பின்பு, அவன் சகோதரன் தன் கையினாலே ஏசாவின் குதிங்காலைப் பிடித்துக்கொண்டு வெளிப்பட்டான். அவனுக்கு யாக்கோபு என்று பேரிட்டார்கள். இவர்களை அவள் பெற்றபோது ஈசாக்கு அறுபது வயதாயிருந்தான்.

27. இந்தப் பிள்ளைகள் பெரியவர்களானபோது, ஏசா வேட்டையில் வல்லவனும் வனசஞ்சாரியுமாய் இருந்தான். யாக்கோபு குணசாலியும் கூடாரவாசியுமாய் இருந்தான்.

28. ஏசா வேட்டையாடிக் கொண்டுவருகிறது ஈசாக்கினுடைய வாய்க்கு ருசிகரமாயிருந்ததினாலே ஏசாவின்மேல் பட்சமாயிருந்தான். ரெபெக்காளோ யாக்கோபின்மேல் பட்சமாயிருந்தாள்.

29. ஒருநாள் ஏசா வெளியிலிருந்து களைத்து வந்தபோது, யாக்கோபு கூழ் சமைத்துக்கொண்டிருந்தான்.

30. அப்பொழுது ஏசா யாக்கோபை நோக்கி: அந்தச் சிவப்பான கூழிலே நான் சாப்பிடக் கொஞ்சம் தா, இளைத்திருக்கிறேன் என்றான். இதனாலே அவனுக்கு ஏதோம் என்கிற பேர் உண்டாயிற்று.

31. அப்பொழுது யாக்கோபு: உன் சேஷ்ட புத்திரபாகத்தை இன்று எனக்கு விற்றுப்போடு என்றான்.

32. அதற்கு ஏசா: இதோ, நான் சாகாப்போகிறேனே, இந்தச் சேஷ்ட புத்திரபாகம் எனக்கு என்னத்திற்கு என்றான்.

33. அப்பொழுது யாக்கோபு: இன்று எனக்கு ஆணையிட்டுக்கொடு என்றான். அவன் யாக்கோபுக்கு ஆணையிட்டு, தன் சேஷ்ட புத்திரபாகத்தை அவனுக்கு விற்றுப்போட்டான்.

34. அப்பொழுது யாக்கோபு ஏசாவுக்கு அப்பத்தையும் பயற்றங்கூழையும் கொடுத்தான். அவன் புசித்துக் குடித்து எழுந்திருந்து போய்விட்டான். இப்படி ஏசா தன் சேஷ்ட புத்திரபாகத்தை அலட்சியம்பண்ணினான். (ஆதியாகமம் 25:19-34)

1. ஆபிரகாமின் நாட்களில் உண்டான பஞ்சத்தை அல்லாமல், பின்னும் ஒரு பஞ்சம் தேசத்தில் உண்டாயிற்று. அப்பொழுது ஈசாக்கு பெலிஸ்தருக்கு ராஜாவாகிய அபிமெலேக்கினிடத்தில் கேராருக்குப் போனான்.

2. கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி: நீ எகிப்துக்குப் போகாமல், நான் உனக்குச் சொல்லும் தேசத்திலே குடியிரு.

3. இந்தத் தேசத்திலே வாசம்பண்ணு. நான் உன்னோடேகூட இருந்து, உன்னை ஆசீர்வதிப்பேன். நான் உனக்கும் உன் சந்ததிக்கும் இந்தத் தேசங்கள் யாவையும் தந்து, உன் தகப்பனாகிய ஆபிரகாமுக்கு நான் இட்ட ஆணையை நிறைவேற்றுவேன்.

4. ஆபிரகாம் என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து, என் விதிகளையும், என் கற்பனைகளையும், என் நியமங்களையும், என் பிரமாணங்களையும் கைக்கொண்டபடியினால்,

5. நான் உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப்போலப் பெருகப்பண்ணி, உன் சந்ததிக்கு இந்தத் தேசங்கள் யாவையும் தருவேன். உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றார். (ஆதியாகமம் 26:1-5)

1. ஈசாக்கு முதிர்வயதானதினால் அவன் கண்கள் இருளடைந்து பார்வையற்றுப்போனபோது, அவன் தன் மூத்த குமாரனாகிய ஏசாவை அழைத்து, என் மகனே என்றான். அவன், இதோ, இருக்கிறேன் என்றான்.

2. அப்பொழுது அவன்: நான் முதிர்வயதானேன், என் மரணம் இன்ன நாளில் என்று அறியேன்.

3. ஆகையால், நீ உன் ஆயுதங்களாகிய உன் அம்பறாத்தூணியையும் உன் வில்லையும் எடுத்துக்கொண்டு வனத்துக்குப்போய், எனக்காக வேட்டையாடி,

4. அதை எனக்குப் பிரியமாயிருக்கிற ருசியுள்ள பதார்த்தங்களாகச் சமைத்து, நான் புசிக்கவும், நான் மரணமடையுமுன்னே என் ஆத்துமா உன்னை ஆசீர்வதிக்கவும், என்னிடத்தில் கொண்டுவா என்றான்.

5. ஈசாக்கு தன் குமாரனாகிய ஏசாவோடே பேசுகையில், ரெபெக்காள் கேட்டுக்கொண்டிருந்தாள். ஏசா வேட்டையாடிக்கொண்டுவரும்படி வனத்துக்குப் போனான்.

6. அப்பொழுது ரெபெக்காள் தன் குமாரனாகிய யாக்கோபை நோக்கி: உன் தகப்பன் உன் சகோதரனாகிய ஏசாவை அழைத்து:

7. நான் புசித்து, எனக்கு மரணம் வருமுன்னே, கர்த்தரை முன்னிட்டு உன்னை ஆசீர்வதிக்கும்படி, நீ எனக்காக வேட்டையாடி, அதை எனக்கு ருசியுள்ள பதார்த்தங்களாகச் சமைத்துக்கொண்டுவா என்று சொல்லக்கேட்டான்.

8. ஆகையால், என் மகனே, என் சொல்லைக் கேட்டு, நான் உனக்குக் கற்பிக்கிறபடி செய்.

9. நீ ஆட்டுமந்தைக்குப் போய், இரண்டு நல்ல வெள்ளாட்டுக்குட்டிகளைக் கொண்டுவா. நான் அவைகளை உன் தகப்பனுக்குப் பிரியமான ருசியுள்ள பதார்த்தங்களாகச் சமைப்பேன்.

10. உன் தகப்பன் தாம் மரணமடையுமுன்னே உன்னை ஆசீர்வதிக்கும்படி அவர் புசிப்பதற்கு நீ அதை அவரிடத்தில் கொண்டுபோகவேண்டும் என்றாள்.

11. அதற்கு யாக்கோபு தன் தாயாகிய ரெபெக்காளை நோக்கி: என் சகோதரனாகிய ஏசா ரோமம் மிகுத்தவன், நான் ரோமமில்லாதவன்.

12. ஒருவேளை என் தகப்பன் என்னைத் தடவிப்பார்ப்பார். அப்பொழுது நான் அவருக்கு எத்தனாய்க் காணப்பட்டு, என்மேல் ஆசீர்வாதத்தை அல்ல, சாபத்தை வரப்பண்ணிக்கொள்ளுவேனே என்றான்.

13. அதற்கு அவன் தாய்: என்மகனே, உன்மேல் வரும் சாபம் என்மேல் வரட்டும். என் சொல்லை மாத்திரம் கேட்டு, நீ போய், அவைகளை என்னிடத்தில் கொண்டுவா என்றாள்.

14. அவன் போய் அவைகளைப் பிடித்து, தன் தாயினிடத்தில் கொண்டுவந்தான். அவனுடைய தாய் அவன் தகப்பனுக்குப் பிரியமானபடி ருசியுள்ள பதார்த்தங்களைச் சமைத்தாள்.

15. பின்பு, ரெபெக்காள் வீட்டிலே தன்னிடத்தில் இருந்த தன் மூத்த மகனாகிய ஏசாவின் நல்ல வஸ்திரங்களை எடுத்து, தன் இளைய மகனாகிய யாக்கோபுக்கு உடுத்தி,

16. வெள்ளாட்டுக்குட்டிகளின் தோலை அவன் கைகளிலேயும் ரோமமில்லாத அவன் கழுத்திலேயும் போட்டு,

17. தான் சமைத்த ருசியுள்ள பதார்த்தங்களையும் அப்பங்களையும் தன் குமாரனாகிய யாக்கோபின் கையிலே கொடுத்தாள்.

18. அவன் தன் தகப்பனிடத்தில் வந்து, என் தகப்பனே என்றான். அதற்கு அவன்: இதோ, இருக்கிறேன். நீ யார், என் மகனே என்றான்.

19. அப்பொழுது யாக்கோபு தன் தகப்பனை நோக்கி: நான் உமது மூத்த மகனாகிய ஏசா. நீர் எனக்குச் சொன்னபடியே செய்தேன். உம்முடைய ஆத்துமா என்னை ஆசீர்வதிக்கும்படி, நீர் எழுந்து உட்கார்ந்து, நான் வேட்டையாடிக்கொண்டுவந்ததைப் புசியும் என்றான்.

20. அப்பொழுது ஈசாக்குத் தன் குமாரனை நோக்கி: என் மகனே, இது உனக்கு இத்தனை சீக்கிரமாய் எப்படி அகப்பட்டது என்றான். அவன்: உம்முடைய தேவனாகிய கர்த்தர் எனக்கு நேரிடப்பண்ணினார் என்றான்.

21. அப்பொழுது ஈசாக்கு யாக்கோபை நோக்கி: என் மகனே, நீ என் குமாரனாகிய ஏசாதானோ அல்லவோ என்று நான் உன்னைத் தடவிப்பார்க்கும்படி கிட்ட வா என்றான்.

22. யாக்கோபு தன் தகப்பனாகிய ஈசாக்கண்டையில் கிட்டப் போனான். அவன் இவனைத் தடவிப்பார்த்து: சத்தம் யாக்கோபின் சத்தம், கைகளோ ஏசாவின் கைகள் என்று சொல்லி,

23. அவனுடைய கைகள் அவன் சகோதரனாகிய ஏசாவின் கைகளைப்போல ரோமமுள்ளவைகளாயிருந்தபடியினாலே, இன்னான் என்று அறியாமல், அவனை ஆசீர்வதித்து,

24. நீ என் குமாரனாகிய ஏசாதானோ என்றான். அவன்: நான்தான் என்றான்.

25. அப்பொழுது அவன்: என் குமாரனே, நீ வேட்டையாடிக் கொண்டுவந்ததை நான் புசித்து, என் ஆத்துமா உன்னை ஆசீர்வதிக்கும்படி அதை என் கிட்டக் கொண்டுவா என்றான். அவன் அதைக் கிட்டக் கொண்டுபோனான். அப்பொழுது அவன் புசித்தான். பிற்பாடு, திராட்சரசம் அவனுக்குக் கொண்டுவந்து கொடுத்தான், அவன் குடித்தான்.

26. அப்பொழுது அவன் தகப்பனாகிய ஈசாக்கு அவனை நோக்கி: என்மகனே, நீ கிட்ட வந்து என்னை முத்தஞ்செய் என்றான்.

27. அவன் கிட்டப் போய், அவனை முத்தஞ்செய்தான். அப்பொழுது அவனுடைய வஸ்திரங்களின் வாசனையை மோந்து: இதோ, என் குமாரனுடைய வாசனை கர்த்தர் ஆசீர்வதித்த வயல்வெளியின் வாசனையைப்போல் இருக்கிறது.

28. தேவன் உனக்கு வானத்துப்பனியையும் பூமியின் கொழுமையையும் கொடுத்து, மிகுந்த தானியத்தையும் திராட்சரசத்தையும் தந்தருளுவாராக.

29. ஜனங்கள் உன்னைச் சேவிக்கவும் ஜாதிகள் உன்னை வணங்கவும் கடவர்கள். உன் சகோதரருக்கு எஜமானாயிருப்பாய். உன் தாயின் பிள்ளைகள் உன்னை வணங்குவார்கள். உன்னைச் சபிக்கிறவர்கள் சபிக்கப்பட்டவர்களும், உன்னை ஆசீர்வதிக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களுமாய் இருப்பார்கள் என்று சொல்லி அவனை ஆசீர்வதித்தான்.

30. ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதித்து முடிந்தபோது, யாக்கோபு தன் தகப்பனாகிய ஈசாக்கின் சமுகத்தைவிட்டுப் புறப்பட்டவுடனே, அவன் சகோதரனாகிய ஏசா வேட்டையாடி வந்து சேர்ந்தான்.

31. அவனும் ருசியுள்ள பதார்த்தங்களைச் சமைத்து, தன் தகப்பனண்டைக்குக் கொண்டுவந்து, தகப்பனை நோக்கி: உம்முடைய ஆத்துமா என்னை ஆசீர்வதிக்கும்படி, என் தகப்பனார் எழுந்திருந்து, உம்முடைய குமாரனாகிய நான் வேட்டையாடிக் கொண்டுவந்ததைப் புசிப்பாராக என்றான்.

32. அப்பொழுது அவன் தகப்பனாகிய ஈசாக்கு: நீ யார் என்றான். அதற்கு அவன்: நான் உமது மூத்த மகனாகிய ஏசா என்றான்.

33. அப்பொழுது ஈசாக்கு மிகவும் பிரமித்து நடுங்கி: வேட்டையாடி எனக்குக் கொண்டுவந்தானே, அவன் யார்? நீ வருமுன்னே அவையெல்லாவற்றிலும் நான் புசித்து அவனை ஆசீர்வதித்தேனே, அவன் ஆசீர்வதிக்கப்பட்டவனாகவும் இருப்பான் என்றான்.

34. ஏசா தன் தகப்பனுடைய வார்த்தைகளைக் கேட்டவுடனே, மிகவும் மனங்கசந்து உரத்த சத்தமிட்டு அலறி, தன் தகப்பனை நோக்கி: என் தகப்பனே, என்னையும் ஆசீர்வதியும் என்றான்.

35. அதற்கு அவன்: உன் சகோதரன் தந்திரமாய் வந்து, உன்னுடைய ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டான் என்றான்.

36. அப்பொழுது அவன்: அவன் பெயர் யாக்கோபு என்னப்படுவது சரியல்லவா? இதோடே இரண்டுதரம் என்னை மோசம்போக்கினான். என் சேஷ்ட புத்திரபாகத்தை எடுத்துக்கொண்டான். இதோ, இப்பொழுது என் ஆசீர்வாதத்தையும் வாங்கிக்கொண்டான் என்று சொல்லி, நீர் எனக்கு ஒரு ஆசீர்வாதத்தையாகிலும் வைத்துவைக்கவில்லையா என்றான்.

37. ஈசாக்கு ஏசாவுக்குப் பிரதியுத்தரமாக: இதோ, நான் அவனை உனக்கு எஜமானாக வைத்தேன். அவன் சகோதரர் எல்லாரையும் அவனுக்கு ஊழியக்காரராகக் கொடுத்து, அவனைத் தானியத்தினாலும் திராட்சரசத்தினாலும் ஆதரித்தேன். இப்பொழுதும் என் மகனே, நான் உனக்கு என்னசெய்வேன் என்றான்.

38. ஏசா தன் தகப்பனை நோக்கி: என் தகப்பனே, இந்த ஒரே ஆசீர்வாதம் மாத்திரமா உம்மிடத்தில் உண்டு? என் தகப்பனே, என்னையும் ஆசீர்வதியும் என்று சொல்லி, ஏசா சத்தமிட்டு அழுதான்.

39. அப்பொழுது அவன் தகப்பனாகிய ஈசாக்கு அவனுக்குப் பிரதியுத்தரமாக: உன் வாசஸ்தலம் பூமியின் சாரத்தோடும் உயர வானத்திலிருந்து இறங்கும் பனியோடும் இருக்கும்.

40. உன் பட்டயத்தினாலே நீ பிழைத்து, உன் சகோதரனைச் சேவிப்பாய். நீ மேற்கொள்ளும் காலம் வரும்போதோ, உன் கழுத்தில் இருக்கிற அவனுடைய நுகத்தடியை முறித்துப்போடுவாய் என்றான்.

41. யாக்கோபைத் தன் தகப்பன் ஆசீர்வதித்ததினிமித்தம் ஏசா யாக்கோபைப் பகைத்து: என் தகப்பனுக்காகத் துக்கிக்கும் நாட்கள் சீக்கிரமாய் வரும், அப்பொழுது என் சகோதரனாகிய யாக்கோபைக் கொன்றுபோடுவேன் என்று ஏசா தன் இருதயத்திலே சொல்லிக்கொண்டான்.

42. மூத்த மகனாகிய ஏசாவின் வார்த்தைகள் ரெபெக்காளுக்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது அவள் தன் இளைய மகனாகிய யாக்கோபை அழைத்து: உன் சகோதரனாகிய ஏசா உன்னைக் கொன்றுபோட நினைத்து, தன்னைத் தேற்றிக்கொள்ளுகிறான்.

43. ஆகையால், என் மகனே, நான் சொல்வதைக் கேட்டு, எழுந்து புறப்பட்டு, ஆரானில் இருக்கிற என் சகோதரனாகிய லாபானிடத்துக்கு ஓடிப்போய்,

44. உன் சகோதரனுடைய கோபம் தணியுமட்டும் சிலநாள் அவனிடத்திலே இரு.

45. உன் சகோதரன் உன்மேல் வைத்த கோபம் தணிந்து, நீ அவனுக்குச் செய்ததை அவன் மறந்தபின், நான் ஆள்அனுப்பி, அவ்விடத்திலிருந்து உன்னை அழைப்பிப்பேன். நான் ஒரேநாளில் உங்கள் இருவரையும் ஏன் இழந்துபோகவேண்டும் என்றாள்.

46. பின்பு, ரெபெக்காள் ஈசாக்கை நோக்கி: ஏத்தின் குமாரத்திகளினிமித்தம் என் உயிர் எனக்கு வெறுப்பாயிருக்கிறது. இந்தத் தேசத்துப்பெண்களாகிய ஏத்தின் குமாரத்திகளில் யாக்கோபு ஒரு பெண்ணை கொள்வானானால் என் உயிர் இருந்து ஆவதென்ன என்றாள். (ஆதியாகமம் 27:1-46)

1. ஈசாக்கு யாக்கோபை அழைத்து, அவனை ஆசீர்வதித்து, நீ கானானியருடைய குமாரத்திகளில் பெண்கொள்ளாமல்,

2. எழுந்து புறப்பட்டு, பதான் அராமிலிருக்கிற உன் தாயினுடைய தகப்பனாகிய பெத்துவேலுடைய வீட்டுக்குப்போய், அவ்விடத்தில் உன் தாயின் சகோதரனாகிய லாபானின் குமாரத்திகளுக்குள் பெண்கொள் என்று அவனுக்குக் கட்டளையிட்டான்.

3. சர்வவல்லமையுள்ள தேவன் உன்னை ஆசீர்வதித்து, நீ பல ஜனக்கூட்டமாகும்படி உன்னைப் பலுகவும் பெருகவும் பண்ணி,

4. தேவன் ஆபிரகாமுக்குக் கொடுத்ததும் நீ பரதேசியாய்த் தங்குகிறதுமான தேசத்தை நீ சுதந்தரித்துக்கொள்ளும்படி ஆபிரகாமுக்கு அருளிய ஆசீர்வாதத்தை உனக்கும் உன் சந்ததிக்கும் அருளுவாராக என்று சொல்லி,

5. ஈசாக்கு யாக்கோபை அனுப்பிவிட்டான். அப்பொழுது அவன் பதான் அராமிலிருக்கும் சீரியா தேசத்தானாகிய பெத்துவேலுடைய குமாரனும், தனக்கும் ஏசாவுக்கும் தாயாகிய ரெபெக்காளின் சகோதரனுமான லாபானிடத்துக்குப் போகப் புறப்பட்டான்.

6. ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதித்து, ஒரு பெண்ணைக் கொள்ளும்படி அவனைப் பதான் அராமுக்கு அனுப்பினதையும், அவனை ஆசீர்வதிக்கையில்: நீ கானானியருடைய குமாரத்திகளில் பெண்கொள்ளவேண்டாம் என்று அவனுக்குக் கட்டளையிட்டதையும்,

7. யாக்கோபு தன் தகப்பனுக்கும் தன் தாய்க்கும் கீழ்ப்படிந்து, பதான் அராமுக்குப் புறப்பட்டுப்போனதையும் ஏசா கண்டதினாலும்,

8. கானானியருடைய குமாரத்திகள் தன் தகப்பனாகிய ஈசாக்கின் பார்வைக்கு ஆகாதவர்கள் என்பதை ஏசா அறிந்ததினாலும்,

9. ஏசா இஸ்மவேலிடத்துக்குப் போய், தனக்கு முன்னிருந்த மனைவிகளுமன்றி, ஆபிரகாமுடைய குமாரனாகிய இஸ்மவேலின் குமாரத்தியும் நெபாயோத்தின் சகோதரியுமாகிய மகலாத்தையும் விவாகம்பண்ணினான்.

10. யாக்கோபு பெயர்செபாவை விட்டுப் புறப்பட்டு ஆரானுக்குப் போகப் பிரயாணம்பண்ணி,

11. ஒரு இடத்திலே வந்து, சூரியன் அஸ்தமித்தபடியினால், அங்கே ராத்தங்கி, அவ்விடத்துக் கற்களில் ஒன்றை எடுத்து, தன் தலையின்கீழ் வைத்து, அங்கே நித்திரை செய்யும்படி படுத்துக்கொண்டான்.

12. அங்கே அவன் ஒரு சொப்பனங்கண்டான். இதோ, ஒரு ஏணி பூமியிலே வைக்கப்பட்டிருந்தது, அதின் நுனி வானத்தை எட்டியிருந்தது, அதிலே தேவதூதர் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாய் இருந்தார்கள்.

13. அதற்கு மேலாகக் கர்த்தர் நின்று: நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனுமாகிய கர்த்தர், நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன்.

14. உன் சந்ததி பூமியின் தூளைப்போலிருக்கும். நீ மேற்கேயும், கிழக்கேயும், வடக்கேயும், தெற்கேயும் பரம்புவாய். உனக்குள்ளும் உன் சந்ததிக்குள்ளும் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும்.

15. நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் தேசத்துக்கு உன்னைத் திரும்பிவரப்பண்ணுவேன். நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்றார்.

16. யாக்கோபு நித்திரை தெளிந்து விழித்தபோது: மெய்யாகவே கர்த்தர் இந்த ஸ்தலத்தில் இருக்கிறார். இதை நான் அறியாதிருந்தேன் என்றான்.

17. அவன் பயந்து, இந்த ஸ்தலம் எவ்வளவு பயங்கரமாயிருக்கிறது! இது தேவனுடைய வீடேயல்லாமல் வேறல்ல, இது வானத்தின் வாசல் என்றான்.

18. அதிகாலையிலே யாக்கோபு எழுந்து, தன் தலையின்கீழ் வைத்திருந்த கல்லை எடுத்து, அதைத் தூணாக நிறுத்தி, அதின்மேல் எண்ணெய் வார்த்து,

19. அந்த ஸ்தலத்திற்குப் பெத்தேல் என்று பேரிட்டான். அதற்கு முன்னே அவ்வூருக்கு லூஸ் என்னும் பேர் இருந்தது.

20. அப்பொழுது யாக்கோபு: தேவன் என்னோடே இருந்து, நான் போகிற இந்த வழியிலே என்னைக் காப்பாற்றி, உண்ண ஆகாரமும், உடுக்க வஸ்திரமும் எனக்குத் தந்து,

21. என்னை என் தகப்பன் வீட்டுக்குச் சமாதானத்தோடே திரும்பிவரப்பண்ணுவாரானால், கர்த்தர் எனக்குத் தேவனாயிருப்பார்.

22. நான் தூணாக நிறுத்தின இந்தக் கல் தேவனுக்கு வீடாகும், தேவரீர் எனக்குத் தரும் எல்லாவற்றிலும் உமக்குத் தசமபாகம் செலுத்துவேன் என்று சொல்லிப் பொருத்தனை பண்ணிக்கொண்டான். (ஆதியாகமம் 28:1-22)

1. யாக்கோபு பிரயாணம்பண்ணி, கீழ்த்திசையாரின் தேசத்தில் போய்ச் சேர்ந்தான்.

2. அங்கே வயல்வெளியிலே ஒரு கிணற்றையும், அதின் அருகே மடக்கியிருக்கிற மூன்று ஆட்டுமந்தைகளையும் கண்டான். அந்தக் கிணற்றிலே மந்தைகளுக்குத் தண்ணீர் காட்டுவார்கள். அந்தக் கிணற்றின் வாய் ஒரு பெரிய கல்லினால் அடைக்கப்பட்டிருந்தது.

3. அவ்விடத்தில் மந்தைகள் எல்லாம் சேர்ந்தபின் கிணற்றின் வாயிலிருக்கும் கல்லை மேய்ப்பர் புரட்டி, ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டி, மறுபடியும் கல்லை முன்னிருந்தபடி கிணற்றின் வாயில் வைப்பார்கள்.

4. யாக்கோபு அவர்களைப் பார்த்து: சகோதரரே, நீங்கள் எவ்விடத்தார் என்றான். அவர்கள், நாங்கள் ஆரான் ஊரார் என்றார்கள்.

5. அப்பொழுது அவன்: நாகோரின் குமாரனாகிய லாபானை அறிவீர்களா என்று கேட்டான். அறிவோம் என்றார்கள்.

6. அவன் சுகமாயிருக்கிறானா என்று விசாரித்தான். அதற்கு அவர்கள்: சுகமாயிருக்கிறான். அவன் குமாரத்தியாகிய ராகேல், அதோ, ஆடுகளை ஓட்டிக்கொண்டு வருகிறாள் என்று சொன்னார்கள்.

7. அப்பொழுது அவன்: இன்னும் வெகுபொழுதிருக்கிறதே, இது மந்தைகளைச் சேர்க்கிற வேளை அல்லவே, ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டி, இன்னும் மேயவிடலாம் என்றான்.

8. அதற்கு அவர்கள்: எல்லா மந்தைகளும் சேருமுன்னே அப்படிச் செய்யக்கூடாது. சேர்ந்தபின் கிணற்றின் வாயிலுள்ள கல்லைப் புரட்டுவார்கள். அப்பொழுது ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டுவோம் என்றார்கள்.

9. அவர்களோடே அவன் பேசிக்கொண்டிருக்கும்போதே, தன் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த ராகேல் அந்த ஆடுகளை ஓட்டிக்கொண்டுவந்தாள்.

10. யாக்கோபு தன் தாயின் சகோதரரான லாபானுடைய குமாரத்தியாகிய ராகேலையும், தன் தாயின் சகோதரனாகிய லாபானின் ஆடுகளையும் கண்டபோது, யாக்கோபு போய், கிணற்றின் வாயிலிருந்த கல்லைப் புரட்டி, தன் தாயின் சகோதரனாகிய லாபானின் ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டினான்.

11. பின்பு யாக்கோபு ராகேலை முத்தஞ்செய்து, சத்தமிட்டு அழுது,

12. தான் அவள் தகப்பனுடைய மருமகனென்றும், ரெபெக்காளின் குமாரனென்றும் ராகேலுக்கு அறிவித்தான். அவள் ஓடிப்போய்த் தன் தகப்பனுக்கு அறிவித்தாள்.

13. லாபான் தன் சகோதரியின் குமாரனாகிய யாக்கோபுடைய செய்தியைக் கேட்டபோது, அவனுக்கு எதிர்கொண்டோடி, அவனைக் கட்டிக்கொண்டு முத்தஞ்செய்து, தன் வீட்டுக்கு அழைத்துக் கொண்டுபோனான். அவன் தன் காரியங்களையெல்லாம் விவரமாய் லாபானுக்குச் சொன்னான்.

14. அப்பொழுது லாபான்: நீ என் எலும்பும் என் மாம்சமுமானவன் என்றான். ஒரு மாதம் வரைக்கும் யாக்கோபு அவனிடத்தில் தங்கினான்.

15. பின்பு லாபான் யாக்கோபை நோக்கி: நீ என் மருமகனாயிருப்பதினால், சும்மா எனக்கு வேலைசெய்யலாமா? சம்பளம் எவ்வளவு கேட்கிறாய், சொல் என்றான்.

16. லாபானுக்கு இரண்டு குமாரத்திகள் இருந்தார்கள். மூத்தவள் பேர் லேயாள், இளையவள் பேர் ராகேல்.

17. லேயாளுடைய கண்கள் கூச்சப்பார்வையாயிருந்தது. ராகேலோ ரூபவதியும் பார்வைக்கு அழகானவளுமாயிருந்தாள்.

18. யாக்கோபு ராகேல்பேரில் பிரியப்பட்டு: உம்முடைய இளைய குமாரத்தியாகிய ராகேலுக்காக உம்மிடத்தில் ஏழு வருஷம் வேலைசெய்கிறேன் என்றான்.

19. அதற்கு லாபான்: நான் அவளை அந்நிய புருஷனுக்கு கொடுக்கிறதைப் பார்க்கிலும், அவளை உனக்குக் கொடுக்கிறது உத்தமம், என்னிடத்தில் தரித்திரு என்றான்.

20. அந்தப்படியே யாக்கோபு ராகேலுக்காக ஏழு வருஷம் வேலைசெய்தான். அவள்பேரில் இருந்த பிரியத்தினாலே அந்த வருஷங்கள் அவனுக்குக் கொஞ்சநாளாகத் தோன்றினது.

21. பின்பு யாக்கோபு லாபானை நோக்கி: என் நாட்கள் நிறைவேறினபடியால், என் மனைவியினிடத்தில் நான் சேரும்படி அவளை எனக்குத் தரவேண்டும் என்றான்.

22. அப்பொழுது லாபான் அவ்விடத்து மனிதர் எல்லாரையும் கூடிவரச்செய்து விருந்துபண்ணினான்.

23. அன்று இரவிலே அவன் தன் குமாரத்தியாகிய லேயாளை அழைத்துக்கொண்டுபோய், அவனிடத்தில் விட்டான். அவளை அவன் சேர்ந்தான்.

24. லாபான் தன் வேலைக்காரியாகிய சில்பாளைத் தன் குமாரத்தியாகிய லேயாளுக்கு வேலைக்காரியாகக் கொடுத்தான்.

25. காலையிலே, இதோ, அவள் லேயாள் என்று யாக்கோபு கண்டு, லாபானை நோக்கி: ஏன் எனக்கு இப்படிச் செய்தீர்? ராகேலுக்காக அல்லவா உம்மிடத்தில் வேலைசெய்தேன். பின்னை ஏன் எனக்கு வஞ்சகம்பண்ணினீர் என்றான்.

26. அதற்பு லாபான்: மூத்தவள் இருக்க இளையவளைக் கொடுப்பது இவ்விடத்து வழக்கம் அல்ல.

27. இவளுடைய ஏழு நாளை நிறைவேற்றும். அவளையும் உனக்குத் தருவேன். அவளுக்காகவும் நீ இன்னும் ஏழு வருஷம் என்னிடத்தில் வேலைசெய் என்றான்.

28. அந்தப்படியே யாக்கோபு, இவளுடைய ஏழுநாளை நிறைவேற்றினான். அப்பொழுது தன் குமாரத்தியாகிய ராகேலையும் அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான்.

29. மேலும் லாபான் தன் வேலைக்காரியாகிய பில்காளைத் தன் குமாரத்தியாகிய ராகேலுக்கு வேலைக்காரியாகக் கொடுத்தான்.

30. யாக்கோபு ராகேலையும் சேர்ந்தான். லேயாளைப்பார்க்கிலும் ராகேலை அவன் அதிகமாய் நேசித்து, பின்னும் ஏழு வருஷம் அவனிடத்தில் சேவித்தான்.

31. லேயாள் அற்பமாய் எண்ணப்பட்டாள் என்று கர்த்தர் கண்டு, அவள் கர்ப்பந்தரிக்கும்படி செய்தார். ராகேலோ மலடியாயிருந்தாள்.

32. லேயாள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: கர்த்தர் என் சிறுமையைப் பார்த்தருளினார். இப்பொழுது என் புருஷன் என்னை நேசிப்பார் என்று சொல்லி, அவனுக்கு ரூபன் என்று பேரிட்டாள்.

33. மறுபடியும் அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: நான் அற்பமாய் எண்ணப்பட்டதைக கர்த்தர் கேட்டருளி, இவனையும் எனக்குத் தந்தார் என்று சொல்லி, அவனுக்குச் சிமியோன் என்று பேரிட்டாள்.

34. பின்னும் அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: என் புருஷனுக்கு மூன்று குமாரரைப் பெற்றபடியால் அவர் இப்பொழுது என்னோடே சேர்ந்திருப்பார் என்று சொல்லி, அவனுக்கு லேவி என்று பேரிட்டாள்.

35. மறுபடியும் அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: இப்பொழுது கர்த்தரைத் துதிப்பேன் என்று சொல்லி, அவனுக்கு யூதா என்று பேரிட்டாள். பிற்பாடு அவளுக்குப் பிள்ளைப்பேறு நின்றுபோயிற்று. (ஆதியாகமம் 29:1-35)

1. ராகேல் தான் யாக்கோபுக்குப் பிள்ளைகளைப் பெறாததைக் கண்டு, தன் சகோதரியின்மேல் பொறாமைகொண்டு, யாக்கோபை நோக்கி: எனக்குப் பிள்ளைகொடும், இல்லாவிட்டால் நான் சாகிறேன் என்றாள்.

2. அப்பொழுது யாக்கோபு ராகேலின்மேல் கோபங்கொண்டு: தேவனல்லவோ உன் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார், நான் தேவனா? என்றான்.

3. அப்பொழுது அவள்: இதோ, என் வேலைக்காரியாகிய பில்காள் இருக்கிறாளே. அவள் என் மடிக்குப் பிள்ளைகளைப் பெறவும், அவளாலாகிலும் என் வீடு கட்டப்படவும் அவளிடத்தில் சேரும் என்று சொல்லி,

4. அவனுக்குத் தன் வேலைக்காரியாகிய பில்காளை மனைவியாகக் கொடுத்தாள். அப்படியே யாக்கோபு அவளைச் சேர்ந்தான்.

5. பில்காள் கர்ப்பவதியாகி, யாக்கோபுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்.

6. அப்பொழுது ராகேல்: தேவன் என் வழக்கைத் தீர்த்து, என் சத்தத்தையும் கேட்டு, எனக்கு ஒரு குமாரனைக் கொடுத்தார் என்று சொல்லி, அவனுக்குத் தாண் என்று பேரிட்டாள்.

7. மறுபடியும் ராகேலின் வேலைக்காரியாகிய பில்காள் கர்ப்பவதியாகி, யாக்கோபுக்கு இரண்டாம் குமாரனைப் பெற்றாள்.

8. அப்பொழுது ராகேல்: நான் மகா போராட்டமாய் என் சகோதரியோடே போராடி மேற்கொண்டேன் என்று சொல்லி, அவனுக்கு நப்தலி என்று பேரிட்டாள்.

9. லேயாள் தான் பிள்ளைபெறுகிறது நின்றுபோனதைக் கண்டு, தன் வேலைக்காரியாகிய சில்பாளை அழைத்து, அவளை யாக்கோபுக்கு மனைவியாகக் கொடுத்தாள்.

10. லேயாளின் வேலைக்காரியாகிய சில்பாள் யாக்கோபுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்.

11. அப்பொழுது லேயாள்: ஏராளமாகிறதென்று சொல்லி, அவனுக்குக் காத் என்று பேரிட்டாள்.

12. பின்பு லேயாளின் வேலைக்காரியாகிய சில்பாள் யாக்கோபுக்கு இரண்டாம் குமாரனைப் பெற்றாள்.

13. அப்பொழுது லேயாள்: நான் பாக்கியவதி, ஸ்திரீகள் என்னைப் பாக்கியவதி என்பார்கள் என்று சொல்லி, அவனுக்கு ஆசேர் என்று பேரிட்டாள்.

14. கோதுமை அறுப்பு நாட்களிலே ரூபன் வயல்வெளியிலே போய், தூதாயீம் கனிகளைக் கண்டெடுத்து, அவைகளைக் கொண்டுவந்து தன் தாயாகிய லேயாளிடத்தில் கொடுத்தான். அப்பொழுது ராகேல் லேயாளை நோக்கி: உன் குமாரனுடைய தூதாயீம் கனியில் எனக்குக் கொஞ்சம் தா என்றாள்.

15. அதற்கு அவள்: நீ என் புருஷனை எடுத்துக்கொண்டது அற்பகாரியமா? என் குமாரனுடைய தூதாயீம் கனிகளையும் எடுத்துக்கொள்ளவேண்டுமோ என்றாள். அதற்கு ராகேல்: உன் குமாரனுடைய தூதாயீம் கனிகளுக்கு ஈடாக இன்று இரவு அவர் உன்னோடே சயனிக்கட்டும் என்றாள்.

16. சாயங்காலத்தில் யாக்கோபு வெளியிலிருந்து வருகையில் லேயாள் புறப்பட்டு அவனுக்கு எதிர்கொண்டுபோய்: என் குமாரனுடைய தூதாயீம் கனிகளால் உம்மைக் கொண்டேன். ஆகையால், நீர் என்னிடத்தில் வரவேண்டும் என்றாள். அவன் அன்று இரவு அவளோடே சயனித்தான்.

17. தேவன் லேயாளுக்குச் செவிகொடுத்தார். அவள் கர்ப்பவதியாகி யாக்கோபுக்கு ஐந்தாம் குமாரனைப் பெற்றாள்.

18. அப்பொழுது லேயாள்: நான் என் வேலைக்காரியை என் புருஷனுக்குக் கொடுத்த பலனைத் தேவன் எனக்குத் தந்தார் என்று சொல்லி, அவனுக்கு இசக்கார் என்று பேரிட்டாள்.

19. அப்புறம் லேயாள் கர்ப்பவதியாகி யாக்கோபுக்கு ஆறாம் குமாரனைப் பெற்றாள்.

20. அப்பொழுது லேயாள்: தேவன் எனக்கு நல்ல ஈவைத் தந்தார். என் புருஷனுக்கு நான் ஆறு குமாரரைப் பெற்றபடியால், இப்பொழுது அவர் என்னுடனே வாசம்பண்ணுவார் என்று சொல்லி, அவனுக்குச் செபுலோன் என்று பேரிட்டாள்.

21. பின்பு அவள் ஒரு குமாரத்தியையும் பெற்று, அவளுக்கு தீனாள் என்று பேரிட்டாள்.

22. தேவன் ராகேலை நினைத்தருளினார். அவளுக்குத் தேவன் செவிகொடுத்து, அவள் கர்ப்பந்தரிக்கும்படி செய்தார்.

23. அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: தேவன் என் நிந்தையை நீக்கிவிட்டார் என்றும்,

24. இன்னும் ஒரு குமாரனைக் கர்த்தர் எனக்குத் தருவார் என்றும் சொல்லி, அவனுக்கு யோசேப்பு என்று பேரிட்டாள்.

25. ராகேல் யோசேப்பைப் பெற்றபின், யாக்கோபு லாபானை நோக்கி: நான் என் ஸ்தானத்திற்கும் என் தேசத்திற்கும் போக என்னை அனுப்பிவிடும்.

26. நான் உமக்கு ஊழியஞ்செய்து சம்பாதித்த என் மனைவிகளையும் என் பிள்ளைகளையும் எனக்குத் தாரும். நான் போவேன், நான் உம்மிடத்தில் சேவித்த சேவகத்தை அறிந்திருக்கிறீர் என்றான்.

27. அப்பொழுது லாபான்: உன் கண்களில் எனக்குத் தயவு கிடைத்ததேயானால் நீ இரு. உன் நிமித்தம் கர்த்தர் என்னை ஆசீர்வதித்தார் என்று குறிப்பினால் அறிந்தேன்.

28. உன் சம்பளம் இன்னதென்று எனக்குச் சொல், நான் அதைத் தருவேன் என்றான்.

29. அதற்கு அவன்: நான் உம்மைச் சேவித்த விதமும், உம்முடைய மந்தை என்னிடத்தில் இருந்த விதமும் அறிந்திருக்கிறீர்.

30. நான் வருமுன்னே உமக்கு இருந்தது கொஞ்சம். நான் வந்தபின் கர்த்தர் உம்மை ஆசீர்வதித்ததினால் அது மிகவும் பெருகியிருக்கிறது. இனி நான் என் குடும்பத்துக்குச் சம்பாத்தியம்பண்ணுவது எப்பொழுது என்றான்.

31. அதற்கு அவன்: நான் உனக்கு என்ன தரவேண்டும் என்றான். யாக்கோபு: நீர் எனக்கு ஒன்றும் தரவேண்டியதில்லை. நான் சொல்லுகிறபடி நீர் எனக்குச் செய்தால், உம்முடைய மந்தையைத் திரும்ப மேய்த்துக் காப்பேன்.

32. நான் இன்றைக்குப்போய், உம்முடைய மந்தைகளையெல்லாம் பார்வையிட்டு, அவைகளில் புள்ளியும் வரியும் கறுப்புமுள்ள செம்மறியாடுகளையும், வரியும் புள்ளியுமுள்ள வெள்ளாடுகளையும் பிரித்துவிடுகிறேன். அப்படிப்பட்டவை இனி எனக்குச் சம்பளமாயிருக்கட்டும்.

33. அப்படியே இனிமேல் என் சம்பளமாகிய இவற்றை நீர் பார்வையிடும்போது, என் நீதி விளங்கும். புள்ளியும் வரியுமில்லாத வெள்ளாடுகளும், கறுப்பான செம்மறியாடுகளும் என் வசத்தில் இருந்தால், அவையெல்லாம் என்னால் திருடிக்கொள்ளப்பட்டவைகளாய் எண்ணப்படட்டும் என்றான்.

34. அதற்கு லாபான்: நீ சொன்னபடியே ஆகட்டும் என்று சொல்லி,

35. அந்நாளிலே கலப்பு நிறமும் வரியுமுள்ள வெள்ளாட்டுக் கடாக்களையும், புள்ளியும் வரியுமுள்ள வெள்ளாடுகள் யாவையும், சற்று வெண்மையும் கருமையுமுள்ள செம்மறியாடுகள் யாவையும் பிரித்து, தன் குமாரரிடத்தில் ஒப்புவித்து,

36. தனக்கும் யாக்கோபுக்கும் இடையிலே மூன்றுநாள் பிரயாணத்தூரத்தில் இருக்கும்படி வைத்தான். லாபானுடைய மற்ற ஆடுகளை யாக்கோபு மேய்த்தான்.

37. பின்பு யாக்கோபு பச்சையாயிருக்கிற புன்னை, வாதுமை, அர்மோன் என்னும் மரங்களின் கொப்புகளை வெட்டி, இடையிடையே வெண்மை தோன்றும்படி, பட்டையை உரித்து,

38. தான் உரித்த கொப்புகளை ஆடுகள் தண்ணீர் குடிக்க வரும் கால்வாய்களிலும் தொட்டிகளிலும் ஆடுகளுக்கு எதிராகப் போட்டுவைப்பான். ஆடுகள் தண்ணீர் குடிக்க வரும்போது பொலிவதுண்டு.

39. ஆடுகள் அந்தக் கொப்புகளுக்கு முன்பாகப் பொலிந்தபடியால், அவைகள் கலப்புநிறமுள்ளதும் புள்ளியுள்ளதும் வரியுள்ளதுமான குட்டிகளைப் போட்டது.

40. அந்த ஆட்டுக்குட்டிகளை யாக்கோபு பிரித்துக்கொண்டு, ஆடுகளை லாபானுடைய மந்தையிலிருக்கும் கலப்புநிறமானவைகளுக்கும் கறுப்பானவைகளெல்லாவற்றிற்கும் எதிராக நிறத்தி, தன் ஆடுகளை லாபானுடைய மந்தையோடே சேர்க்காமல், தனிப்புறமாக வைத்துக்கொள்வான்.

41. பலத்த ஆடுகள் பொலியும்போது, அந்தக் கொம்புகளுக்கு எதிரே பொலியும்படி யாக்கோபு அவைகளை அந்த ஆடுகளின் கண்களுக்கு முன்பாகக் கால்வாய்களிலே போட்டுவைப்பான்.

42. பலவீனமான ஆடுகள் பொலியும்போது, அவைகளைப் போடாமலிருப்பான். இதனால் பலவீனமானவைகள் லாபானையும், பலமுள்ளவைகள் யாக்கோபையும் சேர்ந்தன.

43. இவ்விதமாய் அந்தப் புருஷன் மிகவும் விருத்தியடைந்து, திரளான ஆடுகளும், வேலைக்காரிகளும், வேலைக்காரரும், ஒட்டகங்களும், கழுதைகளும் உடையவனானான். (ஆதியாகமம் 30:1-43)

1. பின்பு, லாபானுடைய குமாரர்: எங்கள் தகப்பனுக்கு உண்டானவைகள் யாவையும் யாக்கோபு எடுத்துக்கொண்டான் என்றும், எங்கள் தகப்பனுடைய பொருளினாலே இந்தச் செல்வத்தையெல்லாம் அடைந்தான் என்றும் சொன்ன வார்த்தைகளை யாக்கோபு கேட்டான்.

2. லாபானின் முகத்தை யாக்கோபு பார்த்தபோது, அது நேற்று முந்தைநாள் இருந்ததுபோல் இராமல் வேறுபட்டிருக்கக் கண்டான்.

3. கர்த்தர் யாக்கோபை நோக்கி: உன் பிதாக்களுடைய தேசத்திற்கும் உன் இனத்தாரிடத்திற்கும் நீ திரும்பிப்போ. நான் உன்னோடேகூட இருப்பேன் என்றார்.

4. அப்பொழுது யாக்கோபு, ராகேலையும் லேயாளையும் வெளியிலே தன் மந்தையிடத்தில் அழைப்பித்து,

5. அவர்களை நோக்கி: உங்கள் தகப்பனுடைய முகம் நேற்று முந்தைநாள் இருந்ததுபோல இருக்கவில்லை என்று எனக்குத் தோன்றுகிறது. ஆனாலும் என் தகப்பனுடைய தேவன் என்னோடேகூட இருக்கிறார்.

6. என்னால் இயன்றமட்டும் நான் உங்கள் தகப்பனுக்கு ஊழியஞ்செய்தேன் என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.

7. உங்கள் தகப்பனோ, என்னை வஞ்சித்து, என் சம்பளத்தைப் பத்துமுறை மாற்றினான். ஆனாலும் அவன் எனக்குத் தீங்குசெய்ய தேவன் அவனுக்கு இடங்கொடுக்கவில்லை.

8. புள்ளியுள்ளவைகள் உன் சம்பளமாயிருக்கும் என்று அவன் சொன்னபோது, ஆடுகளெல்லாம் புள்ளியுள்ள குட்டிகளைப் போட்டது. கலப்புநிறமானவைகள் உன் சம்பளமாயிருக்கும் என்று அவன் சொன்னபோது, ஆடுகளெல்லாம் கலப்பு நிறக் குட்டிகளைப் போட்டது.

9. இவ்விதமாய் தேவன் உங்கள் தகப்பனுடைய ஆடுகளை எடுத்து, எனக்குத் தந்தார்.

10. ஆடுகள் பொலியும் காலத்திலே நான் கண்ட சொப்பனத்தில் என் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, ஆடுகளோடே பொலியும் கடாக்கள் கலப்புநிறமும் புள்ளியும் வரியும் உள்ளவைகளாயிருக்கக் கண்டேன்.

11. அன்றியும் தேவதூதன் ஒருவர் சொப்பனத்தில்: யாக்கோபே என்றார். இதோ, இருக்கிறேன் என்றேன்.

12. அப்பொழுது அவர்: உன் கண்களை ஏறெடுத்துப்பார். ஆடுகளோடே பொலியும் கடாக்களெல்லாம் கலப்புநிறமும் புள்ளியும் வரியுமுள்ளவைகளாய் இருக்கிறது. லாபான் உனக்குச் செய்கிற யாவையும் கண்டேன்.

13. நீ தூணுக்கு அபிஷேகஞ்செய்து, எனக்கு ஒரு பொருத்தனையைப் பண்ணின பெத்தேலிலே உனக்குத் தரிசனமான தேவன் நானே. இப்பொழுது நீ எழுந்து, இந்தத் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, உன் இனத்தாரிருக்கிற தேசத்திற்குத் திரும்பிப்போ என்று சொன்னார் என்றான்.

14. அதற்கு ராகேலும் லேயாளும்: எங்கள் தகப்பன் வீட்டிலே இனி எங்களுக்குப் பங்கும் சுதந்தரமும் உண்டோ?

15. அவரால் நாங்கள் அந்நியராய் எண்ணப்படவில்லையா? அவர் எங்களை விற்று, எங்கள் பணத்தையும் வாயிலே போட்டுக்கொண்டார்.

16. ஆகையால் தேவன் எங்கள் தகப்பனிடத்திலிருந்து எடுத்த ஐசுவரியம் எல்லாம் நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் உரியது. இப்படியிருக்க, தேவன் உமக்குச் சொன்னபடியெல்லாம் செய்யும் என்றார்கள்.

17. அப்பொழுது யாக்கோபு எழுந்து, தன் பிள்ளைகளையும் தன் மனைவிகளையும் ஒட்டகங்கள்மேல் ஏற்றி,

18. தான் பதான் அராமில் சம்பாதித்த மிருகஜீவன்களாகிய அனைத்தையும் தன் பொருள்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு, கானான்தேசத்தில் இருக்கிற தன் தகப்பனாகிய ஈசாக்கினிடத்துக்குப் போகப் புறப்பட்டான்.

19. லாபான், தன் ஆடுகளை மயிர்க்கத்தரிக்கப் போயிருந்தான். அந்தச் சமயத்திலே ராகேல் தன் தகப்பனுடைய சுரூபங்களைத் திருடிக்கொண்டாள்.

20. யாக்கோபு தான் ஓடிப்போகிறதைச் சீரியனாகிய லாபானுக்கு அறிவியாமல், திருட்டளவாய்ப் போய்விட்டான்.

21. இப்படியே அவன் தனக்கு உண்டானவைகளையெல்லாம் எடுத்துக்கொண்டு, ஆற்றைக் கடந்து, கீலேயாத் மலையை நோக்கி ஓடிப்போனான்.

22. யாக்கோபு ஓடிப்போனது மூன்றாம் நாளிலே லாபானுக்கு அறிவிக்கப்பட்டது.

23. அப்பொழுது அவன், தன் சகோதரரைக் கூட்டிக்கொண்டு, ஏழுநாள் பிரயாணபரியந்தம் அவனைத் தொடர்ந்துபோய், கீலேயாத் மலையிலே அவனைக் கண்டுபிடித்தான்.

24. அன்று ராத்திரியிலே தேவன் சீரியா தேசத்தானாகிய லாபானுக்குச் சொப்பனத்தில் தோன்றி: நீ யாக்கோபோடே நன்மையே அன்றித் தீமை ஒன்றும் பேசாதபடிக்கு எச்சரிக்கையாயிரு என்றார்.

25. லாபான் யாக்கோபினிடத்தில் வந்தான். யாக்கோபு மலையிலே தன் கூடாரத்தைப் போட்டிருந்தான். லாபானும் தன் சகோதரரோடேகூடக் கீலேயாத் மலையிலே கூடாரம் போட்டான்.

26. அப்பொழுது லாபான் யாக்கோபை நோக்கி: நீ திருட்டளவாய்ப் புறப்பட்டு, என் குமாரத்திகளை யுத்தத்தில் பிடித்த சிறைகளைப்போலக் கொண்டுவந்தது என்ன செய்கை?

27. நீ ஓடிப்போவதை மறைத்து, எனக்கு அறிவியாமல், திருட்டளவாய் என்னிடத்திலிருந்து வந்துவிட்டது என்ன? நான் உன்னைச் சந்தோஷமாய், சங்கீதம் மேளதாளம் கின்னரமுழக்கத்துடனே அனுப்புவேனே.

28. என் பிள்ளைகளையும் என் குமாரத்திகளையும் நான் முத்தஞ்செய்ய விடாமல் போனதென்ன? இந்தச் செய்கையை நீ மதியில்லாமல் செய்தாய்.

29. உங்களுக்குப் பொல்லாப்புச்செய்ய எனக்கு வல்லமை உண்டு. ஆகிலும், உங்கள் தகப்பனுடைய தேவன்: நீ யாக்கோபோடே நன்மையே அன்றித் தீமை ஒன்றும் பேசாதபடிக்கு எச்சரிக்கையாயிரு என்று நேற்று ராத்திரி என்னோடே சொன்னார்.

30. இப்பொழுதும் உன் தகப்பனுடைய வீட்டின்மேலுள்ள வாஞ்சையினால் நீ புறப்பட்டுப்போகிறதானால் போகலாம், என் தெய்வங்களை ஏன் திருடிக்கொண்டுபோகிறாய் என்று கேட்டான்.

31. யாக்கோபு லாபானுக்குப் பிரதியுத்தரமாக: உம்முடைய குமாரத்திகளைப் பலாத்காரமாய்ப் பிடித்து வைத்துக்கொள்வீர் என்று நான் அஞ்சினதினாலே இப்படி வந்துவிட்டேன்.

32. ஆனாலும் யாரிடத்தில் உம்முடைய தெய்வங்களைக் கண்டுபிடிக்கிறீரோ, அவனை உயிரோடே விடவேண்டாம். உம்முடைய பொருள்கள் ஏதாவது என் வசத்தில் உண்டானால் நீர் அதை நம்முடைய சகோதரருக்கு முன்பாகப் பரிசோதித்தறிந்து, அதை எடுத்துக்கொள்ளும் என்றான். ராகேல் அவைகளைத் திருடிக்கொண்டுவந்ததை யாக்கோபு அறியாதிருந்தான்.

33. அப்பொழுது லாபான் யாக்கோபின் கூடாரத்திலும், லேயாளின் கூடாரத்திலும், இரண்டு வேலைக்காரிகளின் கூடாரத்திலும் பிரவேசித்துப்பார்த்தும் ஒன்றும் கண்டுபிடிக்கவில்லை. பின்பு, லேயாளின் கூடாரத்தைவிட்டு ராகேலின் கூடாரத்துக்குப் போனான்.

34. ராகேல் அந்தச் சுரூபங்களை எடுத்து, ஒட்டகச் சேணத்தின்கீழ் வைத்து, அதின்மேல் உட்கார்ந்திருந்தாள். லாபான் கூடாரம் எங்கும் தடவிப்பார்த்தும், அவைகளைக் கண்டுபிடிக்கவில்லை.

35. அவள் தன் தகப்பனை நோக்கி: என் ஆண்டவனாகிய உமக்கு முன்பாக நான் எழுந்திராததைக்குறித்துக் கோபங்கொள்ளவேண்டாம். ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு எனக்கு உண்டாயிருக்கிறது என்றாள். அப்படியே அவன் அந்தச் சுரூபங்களைத் தேடியும் கண்டுபிடிக்கவில்லை.

36. அப்பொழுது யாக்கோபுக்குக் கோபம் எழும்பி, லாபானோடே வாக்குவாதம்பண்ணி: நீர் என்னை இவ்வளவு உக்கிரமாய்த் தொடர்ந்துவரும்படிக்கு நான் செய்த தப்பிதம் என்ன? நான் செய்த துரோகம் என்ன?

37. என் தட்டுமுட்டுகளையெல்லாம் தடவிப்பார்த்தீரே. உம்முடைய வீட்டுத்தட்டுமுட்டுகளில் என்னத்தைக் கண்டுபிடித்தீர்? அதை என்னுடைய சகோதரருக்கும் உம்முடைய சகோதரருக்கும் முன்பாக இங்கே வையும். அவர்கள் எனக்கும் உமக்கும் நடுத்தீர்க்கட்டும்.

38. இந்த இருபது வருஷகாலமாய் நான் உம்மிடத்தில் இருந்தேன். உம்முடைய செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும் சினையழியவில்லை. உம்முடைய மந்தையின் கடாக்களை நான் தின்னவில்லை.

39. பீறுண்டதை நான் உம்மிடத்துக்குக் கொண்டுவராமல், அதற்காக நான் உத்தரவாதம்பண்ணினேன். பகலில் களவுபோனதையும், இரவில் களவுபோனதையும் என் கையில் கேட்டு வாங்கினீர்.

40. பகலிலே வெயிலும் இரவிலே குளிரும் என்னைப் பட்சித்தது. நித்திரை என் கண்களுக்குத் தூரமாயிருந்தது. இவ்விதமாய்ப் பாடுபட்டேன்.

41. இந்த இருபது வருஷகாலம் உம்முடைய வீட்டிலே இருந்தேன். பதினாலு வருஷம் உம்முடைய இரண்டு குமாரத்திகளுக்காகவும், ஆறு வருஷம் உம்முடைய மந்தைக்காகவும் உம்மிடத்தில் சேவித்தேன். பத்துமுறை என் சம்பளத்தை மாற்றினீர்.

42. என் பிதாவின் தேவனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் பயபக்திக்குரியவரும் என்னோடிராமற்போனால், நீர் இப்பொழுது என்னை வெறுமையாய் அனுப்பிவிட்டிருப்பீர். தேவன் என் சிறுமையையும் என் கைப்பிரயாசத்தையும் பார்த்து, நேற்று ராத்திரி உம்மைக் கடிந்துகொண்டார் என்று சொன்னார்.

43. அப்பொழுது லாபான் யாக்கோபுக்குப் பிரதியுத்தரமாக: இந்தக் குமாரத்திகள் என் குமாரத்திகள், இந்தப் பிள்ளைகள் என் பிள்ளைகள், இந்த மந்தை என் மந்தை. நீ காண்கிற யாவும் என்னுடையவைகள். என் குமாரத்திகளாகிய இவர்களையும், இவர்கள் பெற்ற பிள்ளைகளையும் இன்று நான் என்ன செய்யக்கூடும்?

44. இப்பொழுதும் எனக்கும் உனக்கும் சாட்சியாயிருக்கும்பொருட்டு, நீயும் நானும் உடன்படிக்கைபண்ணிக்கொள்ளக்கடவோம் என்றான்.

45. அப்பொழுது யாக்கோபு ஒரு கல்லை எடுத்து, அதைத் தூணாக நிறுத்தினான்.

46. பின்னும் தன் சகோதரரைப் பார்த்து, கற்களைக் குவியலாகச் சேருங்கள் என்றான். அவர்கள் கற்களை எடுத்துக்கொண்டுவந்து, ஒரு குவியலாக்கி, அந்தக் குவியலின்மேல் போஜனம்பண்ணினார்கள்.

47. லாபான் அதற்கு ஜெகர்சகதூதா என்று பேரிட்டான். யாக்கோபு அதற்குக் கலயெத் என்று பேரிட்டான்.

48. இந்தக் குவியல் இன்று எனக்கும் உனக்கும் சாட்சி என்று லாபான் சொன்னபடியினாலே, அதின் பேர் கலயெத் என்னப்பட்டது.

49. அல்லாமலும் அவன்: நாம் ஒருவரை ஒருவர் விட்டு மறைந்தபின், நீ என் குமாரத்திகளைத் துயரப்படுத்தி, அவர்களையல்லாமல், வேறே ஸ்திரீகளை விவாகம்பண்ணினாயானால், கர்த்தர் எனக்கும் உனக்கும் நடுநின்று கண்காணிக்கக்கடவர்.

50. நம்முடனே ஒருவரும் இல்லை. பார், தேவனே எனக்கும் உனக்கும் சாட்சி என்று சொன்னபடியால், அது மிஸ்பா என்னும் பேர்பெற்றது.

51. பின்னும் லாபான் யாக்கோபை நோக்கி: இதோ, இந்தக் குவியலையும் எனக்கும் உனக்கும் நடுவாக நான் நிறுத்தின தூணையும் பார்.

52. தீங்குசெய்ய நான் இந்தக் குவியலைக் கடந்து உன்னிடத்துக்கு வராதபடிக்கும், நீ இந்தக் குவியலையும் இந்தத் தூணையும் கடந்து என்னிடத்துக்கு வராதபடிக்கும் இந்தக் குவியலும் சாட்சி, இந்தத் தூணும் சாட்சி.

53. ஆபிரகாமின் தேவனும் நாகோரின் தேவனும் அவர்கள் பிதாக்களின் தேவனுமாயிருக்கிறவர் நமக்குள்ளே நடுநின்று நியாயந்தீர்ப்பாராக என்றான். அப்பொழுது யாக்கோபு தன் தகப்பனாகிய ஈசாக்கின் பயபக்திக்குரியவர்மேல் ஆணையிட்டான்.

54. பின்பு, யாக்கோபு மலையின்மேல் பலியிட்டு, போஜனம்பண்ணும்படி தன் சகோதரரை அழைத்தான். அப்படியே அவர்கள் போஜனம்பண்ணி மலையிலே இராத்தங்கினார்கள்.

55. லாபான் அதிகாலமே எழுந்திருந்து, தன் குமாரரையும் தன் குமாரத்திகளையும் முத்தஞ்செய்து, அவர்களை ஆசீர்வதித்தான். பின்பு லாபான் புறப்பட்டு, தன் இடத்துக்குத் திரும்பிப்போனான். (ஆதியாகமம் 31:1-55)

1. யாக்கோபு பிரயாணம்பண்ணுகையில், தேவதூதர்கள் அவனைச் சந்தித்தார்கள்.

2. யாக்கோபு அவர்களைக் கண்டபோது: இது தேவனுடைய சேனை என்று சொல்லி, அந்த ஸ்தலத்திற்கு மக்னாயீம் என்று பேரிட்டான்.

3. பின்பு, யாக்கோபு ஏதோம் சீமையாகிய சேயீர் தேசத்திலிருக்கிற தன் சகோதரனாகிய ஏசாவினிடத்துக்குப் போகும்படி ஆட்களை அழைப்பித்து:

4. நீங்கள் என் ஆண்டவனாகிய ஏசாவினிடத்தில் போய், நான் இதுவரைக்கும் லாபானிடத்தில் தங்கியிருந்தேன் என்றும்,

5. எனக்கு எருதுகளும், கழுதைகளும், ஆடுகளும், வேலைக்காரரும், வேலைக்காரிகளும் உண்டென்றும், உம்முடைய கண்களில் எனக்குத் தயவுகிடைக்கத்தக்கதாக ஆண்டவனாகிய உமக்கு இதை அறிவிக்கும்படி ஆட்களை அனுப்பினேன் என்றும் உம்முடைய தாசனாகிய யாக்கோபு சொல்லச்சொன்னான் என்று சொல்லும்படி கட்டளைகொடுத்துத் தனக்கு முன்னாக அவர்களை அனுப்பினான்.

6. அந்த ஆட்கள் யாக்கோபினிடத்துக்குத் திரும்பிவந்து: நாங்கள் உம்முடைய சகோதரனாகிய ஏசாவினிடத்துக்குப் போய்வந்தோம். அவரும் நானூறுபேரோடே உம்மை எதிர்கொள்ள வருகிறார் என்றார்கள்.

7. அப்பொழுது யாக்கோபு மிகவும் பயந்து, வியாகுலப்பட்டு, தன்னிடத்திலிருந்த ஜனங்களையும் ஆடுமாடுகளையும் ஒட்டகங்களையும் இரண்டு பகுதியாகப் பிரித்து:

8. ஏசா ஒரு பகுதியின்மேல் விழுந்து அதை முறிய அடித்தாலும், மற்றப் பகுதி தப்பித்துக்கொள்ள இடம் உண்டு என்றான்.

9. பின்பு யாக்கோபு: என் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும், என் தகப்பனாகிய ஈசாக்கின் தேவனுமாய் இருக்கிறவரே: உன் தேசத்துக்கும் உன் இனத்தாரிடத்துக்கும் திரும்பிப்போ, உனக்கு நன்மை செய்வேன் என்று என்னுடனே சொல்லியிருக்கிற கர்த்தாவே,

10. அடியேனுக்கு தேவரீர் காண்பித்த எல்லா தயவுக்கும் எல்லா சத்தியத்துக்கும் நான் எவ்வளவேனும் பாத்திரன் அல்ல, நான் கோலும் கையுமாய் இந்த யோர்தானைக் கடந்துபோனேன். இப்பொழுது இவ்விரண்டு பரிவாரங்களையும் உடையவனானேன்.

11. என் சகோதரனாகிய ஏசாவின் கைக்கு என்னைத் தப்புவியும், அவன் வந்து என்னையும் பிள்ளைகளையும் தாய்மார்களையும் முறிய அடிப்பான் என்று அவனுக்கு நான் பயந்திருக்கிறேன்.

12. தேவரீரோ: நான் உனக்கு மெய்யாகவே நன்மைசெய்து, உன் சந்ததியை எண்ணிமுடியாத கடற்கரை மணலைப்போல மிகவும் பெருகப்பண்ணுவேன் என்று சொன்னீரே என்றான்.

13. அன்று ராத்திரி அவன் அங்கே தங்கி, தன் கைக்கு உதவினவைகளிலே தன் சகோதரனாகிய ஏசாவுக்கு வெகுமானமாக,

14. இருநூறு வெள்ளாடுகளையும், இருபது வெள்ளாட்டுக் கடாக்களையும், இருநூறு செம்மறியாடுகளையும், இருபது ஆட்டுக்கடாக்களையும்,

15. பால் கொடுக்கிற முப்பது ஒட்டகங்களையும், அவைகளின் குட்டிகளையும், நாற்பது கடாரிகளையும், பத்துக் காளைகளையும், இருபது கோளிகைக் கழுதைகளையும், பத்துக் கழுதைக்குட்டிகளையும் பிரித்தெடுத்து,

16. வேலைக்காரர் கையில் ஒவ்வொரு மந்தையை தனித்தனியாக ஒப்புவித்து, நீங்கள் மந்தை மந்தைக்கு முன்னும் பின்னுமாக இடம் விட்டு எனக்கு முன்னாக ஓட்டிக்கொண்டுபோங்கள் என்று தன் வேலைக்காரருக்குச் சொல்லி,

17. முன்னே போகிறவனை நோக்கி: என் சகோதரனாகிய ஏசா உனக்கு எதிர்ப்பட்டு: நீ யாருடையவன்? எங்கே போகிறாய்? உனக்குமுன் போகிற மந்தை யாருடையது? என்று உன்னைக் கேட்டால்,

18. நீ: இது உமது அடியானாகிய யாக்கோபுடையது. இது என் ஆண்டவனாகிய ஏசாவுக்கு அனுப்பப்படுகிற வெகுமதி. இதோ, அவனும் எங்கள் பின்னே வருகிறான் என்று சொல் என்றான்.

19. இரண்டாம் மூன்றாம் வேலைக்காரனையும், மந்தைகளின் பின்னாலே போகிற அனைவரையும் நோக்கி: நீங்களும் ஏசாவைக் காணும்போது, இந்தப்பிரகாரமாக அவனோடே சொல்லி,

20. இதோ, உமது அடியானாகிய யாக்கோபு எங்கள் பின்னாலே வருகிறான் என்றும் சொல்லுங்கள் என்று கட்டளையிட்டான். முன்னே வெகுமதியை அனுப்பி, அவனைச் சாந்தப்படுத்திக்கொண்டு, பின்பு அவன் முகத்தைப் பார்ப்பேன், அப்பொழுது ஒருவேளை என்பேரில் தயவாயிருப்பான் என்றான்.

21. அந்தப்படியே வெகுமதி அவனுக்கு முன் போயிற்று. அவனோ அன்று ராத்திரி பாளயத்திலே தங்கி,

22. இராத்திரியில் எழுந்திருந்து, தன் இரண்டு மனைவிகளையும், தன் இரண்டு பணிவிடைக்காரிகளையும், தன்னுடைய பதினொரு குமாரரையும் கூட்டிக்கொண்டு, யாப்போக்கு என்கிற ஆற்றின் துறையைக் கடந்தான்.

23. அவர்களையும் சேர்த்து, ஆற்றைக் கடக்கப்பண்ணி, தனக்கு உண்டான யாவையும் அக்கரைப்படுத்தினான்.

24. யாக்கோபு பிந்தித் தனித்திருந்தான். அப்பொழுது ஒரு புருஷன் பொழுது விடியுமளவும் அவனுடனே போராடி,

25. அவனை மேற்கொள்ளாததைக் கண்டு, அவனுடைய தொடைச்சந்தைத் தொட்டார். அதினால் அவருடனே போராடுகையில் யாக்கோபின் தொடைச்சந்து சுளுக்கிற்று.

26. அவர்: நான் போகட்டும், பொழுது விடிகிறது என்றார். அதற்கு அவன்: நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன் என்றான்.

27. அவர்: உன் பேர் என்ன என்று கேட்டார். யாக்கோபு என்றான்.

28. அப்பொழுது அவர்: உன் பேர் இனி யாக்கோபு என்னப்படாமல் இஸ்ரவேல் என்னப்படும். தேவனோடும் மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே என்றார்.

29. அப்பொழுது யாக்கோபு: உம்முடைய நாமத்தை எனக்கு அறிவிக்கவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர்: நீ என் நாமத்தைக் கேட்பானேன் என்று சொல்லி, அங்கே அவனை ஆசீர்வதித்தார்.

30. அப்பொழுது யாக்கோபு: நான் தேவனை முகமுகமாய்க் கண்டேன், உயிர் தப்பிப் பிழைத்தேன் என்று சொல்லி, அந்த ஸ்தலத்துக்கு பெனியேல் என்று பேரிட்டான்.

31. அவன் பெனியேலைக் கடந்துபோகையில், சூரியன் உதயமாயிற்று. அவன் தொடைச்சுளுக்கினாலே நொண்டி நொண்டி நடந்தான்.

32. அவர் யாக்கோபுடைய தொடைச்சந்து நரம்பைத் தொட்டபடியால், இஸ்ரவேல் புத்திரர் இந்நாள்வரைக்கும் தொடைச்சந்து நரம்பைப் புசிக்கிறதில்லை. (ஆதியாகமம் 32:1-32)

1. யாக்கோபு தன் கண்களை ஏறெடுத்து, இதோ, ஏசாவும் அவனோடேகூட வருகிற நானூறு மனிதரும் வருகிறதைக் கண்டு, பிள்ளைகளை லேயாளிடத்திலும் ராகேலிடத்திலும் இரண்டு பணிவிடைக்காரிகளிடத்திலும் வேறுவேறாகப் பிரித்துவைத்து,

2. பணிவிடைக்காரிகளையும் அவர்கள் பிள்ளைகளையும் முதலிலும், லேயாளையும் அவள் பிள்ளைகளையும் இடையிலும், ராகேலையும் யோசேப்பையும் கடையிலும் நிறுத்தி,

3. தான் அவர்களுக்கு முன்னாக நடந்துபோய், ஏழுவிசை தரைமட்டும் குனிந்து வணங்கி, தன் சகோதரன் கிட்டச் சேர்ந்தான்.

4. அப்பொழுது ஏசா எதிர்கொண்டு ஓடிவந்து, அவனைத் தழுவி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான். இருவரும் அழுதார்கள்.

5. அவன் தன் கண்களை ஏறெடுத்து, ஸ்திரீகளையும் பிள்ளைகளையும் கண்டு: உன்னோடிருக்கிற இவர்கள் யார்? என்றான். அதற்கு அவன்: தேவன் உமது அடியானுக்கு அருளின பிள்ளைகள் என்றான்.

6. அப்பொழுது பணிவிடைக்காரிகளும் அவர்கள் பிள்ளைகளும் சேர்ந்துவந்து வணங்கினார்கள்.

7. லேயாளும் அவள் பிள்ளைகளும் சேர்ந்துவந்து வணங்கினார்கள். பின்பு யோசேப்பும் ராகேலும் சேர்ந்துவந்து வணங்கினார்கள்.

8. அப்பொழுது அவன்: எனக்கு எதிர்கொண்டு வந்த அந்த மந்தையெல்லாம் என்னத்துக்கு என்றான். அதற்கு அவன்: என் ஆண்டவனுடைய கண்களில் எனக்குத் தயவு கிடைக்கிறதற்கு என்றான்.

9. அதற்கு ஏசா: என் சகோதரனே, எனக்குப் போதுமானது உண்டு. உன்னுடையது உனக்கு இருக்கட்டும் என்றான்.

10. அதற்கு யாக்கோபு: அப்படி அல்ல, உம்முடைய கண்களில் எனக்குத் தயவு கிடைத்ததேயானால், என் வெகுமதியை என் கையிலிருந்து ஏற்றுக்கொள்ளும். நீர் என்மேல் பிரியமானீர், நான் உம்முடைய முகத்தைக் கண்டது தேவனுடைய முகத்தைக் கண்டதுபோல இருக்கிறது.

11. தேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார். வேண்டியதெல்லாம் எனக்கு உண்டுளூ ஆகையால் உமக்குக் கொண்டு வரப்பட்ட என் காணிக்கையை ஏற்றுக்கொள்ளும் என்று சொல்லி, அவனை வருந்திக் கேட்டுக்கொண்டான். அப்பொழுது அவன் அதை ஏற்றுக்கொண்டான்.

12. பின்பு அவன்: நாம் புறப்பட்டுப்போவோம் வா, நான் உனக்கு முன் நடப்பேன் என்றான்.

13. அதற்கு அவன்: பிள்ளைகள் இளம் பிள்ளைகள் என்றும், கறவையான ஆடுமாடுகள் என்னிடத்தில் இருக்கிறது என்றும் என் ஆண்டவனுக்குத் தெரியும். அவைகளை ஒரு நாளாவது துரிதமாய் ஓட்டினால், மந்தையெல்லாம் மாண்டுபோம்.

14. என் ஆண்டவனாகிய நீர் உமது அடியானுக்கு முன்னே போம். நான் சேயீருக்கு என் ஆண்டவனிடத்தில் வருமளவும், எனக்குமுன் நடக்கிற மந்தைகளின் கால்நடைக்கும் பிள்ளைகளின் கால்நடைக்கும் தக்கதாக, மெதுவாய் அவைகளை நடத்திக்கொண்டு வருகிறேன் என்றான்.

15. அப்பொழுது ஏசா: என்னிடத்திலிருக்கிற ஜனங்களில் சிலரை நான் உன்னிடத்தில் நிறுத்திவிட்டுப் போகட்டுமா என்றான். அதற்கு அவன்: அது என்னத்திற்கு, என் ஆண்டவனுடைய கண்களில் எனக்குத் தயவுகிடைத்தால் மாத்திரம் போதும் என்றான்.

16. அன்றைத்தினம் ஏசா திரும்பித் தான் வந்த வழியே சேயீருக்குப் போனான்.

17. யாக்கோபு சுக்கோத்திற்குப் பிரயாணம்பண்ணி, தனக்கு ஒரு வீடுகட்டி, தன் மிருகஜீவன்களுக்குக் கொட்டாரங்களைப் போட்டான். அதினாலே அந்த ஸ்தலத்துக்குச் சுக்கோத் என்று பேரிட்டான்.

18. யாக்கோபு பதான் அராமிலிருந்து வந்தபின் கானான்தேசத்திலிருக்கிற சாலேம் என்னும் சீகேமுடைய பட்டணத்திற்கு அருகே சென்று பட்டணத்திற்கு எதிரே கூடாரம்போட்டான்.

19. தான் கூடாரம்போட்ட வெளியின் நிலத்தைச் சீகேமின் தகப்பனாகிய எமோரியரின் புத்திரர் கையிலே நூறு வெள்ளிக்காசுக்குக் கொண்டு,

20. அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு ஏல்எல்லோகே இஸ்ரவேல் என்று பேரிட்டான். (ஆதியாகமம் 33:1-20)

மேற்கண்ட சரித்திரத்தில், எபிரெயர்கள் ரெபேக்காளை நோக்கி…. எங்கள் சகோதரியே, நீ கோடாகோடியாய்ப் பெருகுவாயாக. உன் சந்ததியார் தங்கள் பகைஞருடைய வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்வார்களாக என்றும் (ஆதியாகமம் 24:60-61)

கர்த்தர் ஆபிரகாமை பார்த்து

2. கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி: நீ எகிப்துக்குப் போகாமல், நான் உனக்குச் சொல்லும் தேசத்திலே குடியிரு.

3. இந்தத் தேசத்திலே வாசம்பண்ணு, நான் உன்னோடேகூட இருந்து, உன்னை ஆசீர்வதிப்பேன். நான் உனக்கும் உன் சந்ததிக்கும் இந்தத் தேசங்கள் யாவையும் தந்து, உன் தகப்பனாகிய ஆபிரகாமுக்கு நான் இட்ட ஆணையை நிறைவேற்றுவேன்.

4. ஆபிரகாம் என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து, என் விதிகளையும், என் கற்பனைகளையும், என் நியமங்களையும், என் பிரமாணங்களையும் கைக்கொண்டபடியினால்,

5. நான் உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப்போலப் பெருகப்பண்ணி, உன் சந்ததிக்கு இந்தத் தேசங்கள் யாவையும் தருவேன். உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றும் (ஆதியாகமம் 26:2-5)

ஈசாக்கு யாக்கோபை, ஏசா என நினைத்து ஆசீர்வதிக்கும் போது

இதோ, என் குமாரனுடைய வாசனை கர்த்தர் ஆசீர்வதித்த வயல்வெளியின் வாசனையைப்போல் இருக்கிறது.

28. தேவன் உனக்கு வானத்துப்பனியையும் பூமியின் கொழுமையையும் கொடுத்து, மிகுந்த தானியத்தையும் திராட்சரசத்தையும் தந்தருளுவாராக.

29. ஜனங்கள் உன்னைச் சேவிக்கவும் ஜாதிகள் உன்னை வணங்கவும் கடவர்கள். உன் சகோதரருக்கு எஜமானாயிருப்பாய். உன் தாயின் பிள்ளைகள் உன்னை வணங்குவார்கள். உன்னைச் சபிக்கிறவர்கள் சபிக்கப்பட்டவர்களும், உன்னை ஆசீர்வதிக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களுமாய் இருப்பார்கள் என்று சொல்லி ஆதியாகமம் 27:27-29 என்று ஆசீர்வதிப்பதையும்,

யாக்கோபு பதான் ஆராமிற்கு ஓடிச்செல்லும் போது, இரவில் கனவில் தோன்றிய இறைவன்….

12. அங்கே அவன் ஒரு சொப்பனங்கண்டான். இதோ, ஒரு ஏணி பூமியிலே வைக்கப்பட்டிருந்தது, அதின் நுனி வானத்தை எட்டியிருந்தது, அதிலே தேவதூதர் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாய் இருந்தார்கள்.

13. அதற்கு மேலாகக் கர்த்தர் நின்று: நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனுமாகிய கர்த்தர். நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன்.

14. உன் சந்ததி பூமியின் தூளைப்போலிருக்கும். நீ மேற்கேயும், கிழக்கேயும், வடக்கேயும், தெற்கேயும் பரம்புவாய். உனக்குள்ளும் உன் சந்ததிக்குள்ளும் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும்.

15. நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் தேசத்துக்கு உன்னைத் திரும்பிவரப்பண்ணுவேன். நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை ஆதியாகமம் 28:12-15 என்று ஆசீர்வதித்ததையும்,

யாக்கோபு பதான் ஆராமில் இருக்கும் போது அவனின் மாமனான லாபானின் ஏமாற்றுக்களை கண்டபோது,

3. கர்த்தர் யாக்கோபை நோக்கி: உன் பிதாக்களுடைய தேசத்திற்கும் உன் இனத்தாரிடத்திற்கும் நீ திரும்பிப்போ. நான் உன்னோடேகூட இருப்பேன் என்று கூறியதையும் (ஆதி 31:3)

பின்பு யாக்கோபு தன் குடும்பத்தாருடன் மாமனாருக்கு கூறாமல் கானான் தேசத்திற்கு ஓடிப்போனதையும், அவனைப்பின் தொடர்ந்த மாமனான லாபானைப்பார்த்து தேவனாகிய கர்த்தர் 24. அன்று ராத்திரியிலே தேவன் சீரியா தேசத்தானாகிய லாபானுக்குச் சொப்பனத்தில் தோன்றி: நீ யாக்கோபோடே நன்மையே அன்றித் தீமை ஒன்றும் பேசாதபடிக்கு எச்சரிக்கையாயிரு என்று எச்சரித்ததையும் (ஆதி 31:24) பின்பு இறுதியாக யாக்கோபு இரவு முழுவதும் தேவனோடு ஜெபத்தில் போராடி… அவன் வெற்றி பெற வேண்டும் என்று தேவன் அன்பினால் அவனிடம் தோல்வி அடைந்ததையும் பின்பு தேவன் அவனை ஆசீர்வதித்து……….

28. அப்பொழுது அவர்: உன் பேர் இனி யாக்கோபு என்னப்படாமல் இஸ்ரவேல் என்னப்படும் தேவனோடும் மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே (ஆதி 32:28) என்று அவன் பெயரை மாற்றி அவனை இஸ்ரவேல் என்று அழைத்து அவனை ஆசீர்வதித்ததையும் நாம் காணலாம்.

இவ் ஆசீர்வாதங்களின் அடிப்படையில் அன்று தொடக்கம் ஜெகோவா என்னும் தெய்வத்தை வணங்கும் யூத ஜனங்கள் மத்திய கிழக்கில் அழிந்து போகாமல், இஸ்ரவேல் என்னும் பெயருடன் இன்று வரை இருப்பதையும், அவர்களைச் சூழ்ந்து அரேபிய தெய்வமான அல்லாஹ்வை வணங்கும், இஸ்ரவேலரை விட 175 மடங்கு அதிகமான இஸ்லாமியரும் இஸ்ரவேல் தேசத்தை விட 575 மடங்கு அதிகமான நிலப்பரப்புடைய அரேபிய நாடுகளுகளும் அவர்களுக்கு எதிரிகளாக திகழ்வதையும் நாம் காணலாம்.

மேலும் எண்ணெய்ச்செல்வம் மிகுந்த ஏறக்குறைய 21 நாடுகளின் தலைமையில் ஐக்கிய நாடுகள் சபைக்கு ஊடாக இஸ்ரேலுக்கு எதிராக பிழையான அபிப்பிராயங்களை ஏற்படுத்தி, இஸ்ரவேலை மட்டந்தட்டி அவர்களை அழிக்க முற்பட்டாலும், அந்நாடுகள் அனைத்தும் இஸ்ரவேலுக்கு பயந்தே வாழுகின்றன என்பதை காணக்கூடியதாக உள்ளது. ஆம்! பரிசுத்த வேதாகமம் மனித கற்பனைக்கு உட்பட்டதல்ல என்பதை இன்றைய உலக அரசியல் நமக்கு உணர்த்துகின்றன.

3850 ஆண்டுகளுக்கு முன் பரிசுத்த வேதாகமத்தின் முதல் புஸ்தகத்தில் கூறப்பட்ட இவ் ஆசீர்வாதங்கள் அனைத்தும் பரிசுத்த வேதாகமத்தின் இறுதிக் காலமாகிய இக்காலத்தில் நிறைவேறிய வண்ணமே உள்ளது!

“எங்கள் சகோதரியே! நீ கோடாகோடியாய் பெருகுவாயாக! உன் சந்ததியார் தங்கள் பகைஞருடைய வாசல்களை சுதந்தரித்துக் கொள்வார்களாக”.. அதேபோல் பரிசுத்த வேதாகமம் கூறும் இயேசு கிறிஸ்துவுக்கூடான இலவச இரட்சிப்பை பெற்று நல்ல, வெற்றிகரமான கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்வதும் இதை வாசிக்கும் அனைவரின் கடமையுமாகும்! நன்றி!!