Pages

பிதாவாகிய தேவனாலும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்கு கிருபையும், சமாதானமும் உண்டாவதாக
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி! அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்!! பரிசுத்த வேதாகமம் அருளப்பட்டதல்ல! பரிசுத்த மனிதர்கள் தேவனுடைய செய்தியை பெற்று எழுதினார்கள்!!

Sunday, September 30, 2018

இஸ்ரவேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஆற்றிய உரை 27-9-2018

Prime Minister Benjamin Netanyahu's 2018 UN General Assembly Speech 

இங்கு பொதுச் சபையில் நடைபெறப்போகும் உரையானது, மேன்மைத்தங்கிய பெஞ்சமின் நெத்தன்யாஹு இஸ்ரவேல் நாட்டின் பிரதமர், வெளிவிவகார அமைச்சர், பொருளாதார அமைச்சர், தொடர்பாடல் அமைச்சர், பிராந்திய கூட்டுறவு அமைச்சர் மேன்மை தங்கிய அவரை, பங்குபற்றுமாறு நான் வேண்டுகின்றேன். பொது சபையில் இஸ்ரவேல் நாட்டின் பிரதமர் அவர்களை உரையாற்றுமாறு அழைப்பதையிட்டு நான் பெரும் மகிழ்ச்சி கொள்ளுகின்றேன். நான் அவரை பொதுச் சபையில் உரையாற்றுமாறு அழைக்கின்றேன்.

ஐ.நா.சபையில் இஸ்ரவேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு ஆற்றிய உரை 27-9-2018 (பகுதி - 1/3)

'மேன்மைதங்கிய பிரதிநிதிகளே, சீமான்கள் மற்றும் சீமாட்டிகளே,

நான் மூன்று வருடங்களுங்களுக்கு முன்பு இங்கிருந்து பேசும்போது, தேசங்களுக்குள்ளே இஸ்ரவேல் தனிமையாக நின்று கொண்டிருந்தது. இந்த அறையில் அமர்ந்திருந்த ஏறக்குறைய 200 நாடுகளில், இஸ்ரவேல் மாத்திரமே வெளிப்படையாக ஈரானுடைய அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்த்தது. நாம் அதனை எதிர்க்கும் காரணம், அது! அது எமது உயிர் பிழைப்பில் மாத்திரம் அல்ல! அது எமது எதிர்காலத்தை கூட அச்சுறுத்துகின்றது. நாம் அதனை எதிர்க்கும் காரணம், அணுசக்தி ஆயுதங்களின் பாதையில் ஈரான் பயணிப்பதின் ஒப்பந்தத்தின் காரணத்தினால் ஆகும். பொருளாதார தடைகளை உயர்த்தியதன் மூலம் மத்திய கிழக்கு முழுவதும் படுகொலைகள் மற்றும் கைபற்றுதல் ஆகியவற்றை செய்வதற்கு ஈரான் எண்ணெய் ஊற்றுகின்றது. நாம் அதனை எதிர்க்கும் காரணம், ஈரான் அணுசக்தி ஆயுதங்களை உருவாக்க விரும்பவில்லை என்ற அந்த அடிப்படை பொய்யை, அடிப்படையாக கொண்ட ஒப்பந்தம் என்பதினாலேயேயாகும்.

இப்பொழுது, இந்த வருடத்தின் ஆரம்பத்தில் அந்த பொய்யை இஸ்ரவேல் வெளிப்படுத்தியது. கடைசி பெப்ரவரியில், ஈரானுடைய இரகசிய அணு ஆயுத காப்பகத்தை இஸ்ரவேல் தைரியமாக சோதனை நடத்தியது. தெஹ்ரானின் இதயப்பகுதியில் அப்பாவிகளை போல் காட்சியளிக்கும் கட்டிடங்களிலுள்ள கழிவறைகளில் மறைக்கப்பட்டுள்ளதான ஒளிநாடாக்களையும் 1,00,000ற்கு மேலான ஆவணங்களையும் நாம் பெற்றுக்கொண்டோம். மே மாதத்தில் நான், நாம் பெற்றுகொண்டவற்றின் குறுகிய சுருக்கத்தை சர்வதேச செய்தி ஊடகத்திற்கு சமர்ப்பித்தேன். ஆணுஆயுதங்களை கட்டுவதற்கான ஈராணுடைய திட்டங்கள் மற்றும்  சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்கான அதன் திட்டங்கள் ஆகியவற்றின் உறுதியான ஆதாரத்தை நான் சமர்ப்பித்தேன். P5+1 அங்கத்தவர்கள் மற்றும் பன்னாட்டு அணுசக்தி முகமையக (International Atomic Energy Agency) அங்கத்தவர்களோடு இந்த தகவல்களையும் நாம் கண்டெடுத்த இன்னும் கடுமையான சான்றுகளையும் இஸ்ரவேல் பகிர்ந்து கொண்டது. மாதங்கள் கடந்தன,  IAA ஆனது இன்னும் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அது ஈரானிடம் எந்த ஒரு கேள்வியையும் முன்வைக்கவில்லை. அது அந்த இரகசிய ஆவணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதிய இடத்தை கூட ஆய்வு செய்ய ஒரு தடவையும் கோரவில்லை.

ஆகவே இந்த செயலற்ற தன்மை தரப்பட்டதால், இன்று நான் சில உளவுத்துறை அமைப்புக்களோடும் IAA வுடனும் நாம் பகிர்ந்து கொண்ட அந்த சில காரியங்களை வெளிப்படுத்த தீர்மானித்தேன். நான் எதை கூறுகின்றேனோ அது முன்னர் பகிரங்கமாக வெளிப்படுத்தப்பட்ட காரியம் அல்ல. இன்று நான் ஈரான் தெஹ்ரானில் கொண்டிருக்கும் மற்றொரு ரகசிய வசதியையும் குறித்து முதல் தடவையாக வெளிப்படுத்துகின்றேன். ஈரானுடைய இரகசிய அணு ஆயுத திட்டங்களுக்கான மிகப் பெரிதளவிலான உபகரணங்களும் பொருட்களும் களஞ்சியப்படுத்துவதற்கான ஒரு இரகசிய அணு ஆயுத காப்பகம் ஆகும்.

மே மாதத்தில் ஈரானுடைய இரகசிய அணு ஆயுத காப்பகத்தை நாம் அம்பலப்படுத்தினோம். இது தெஹ்ரானின் ஷஹாபாத் மாவட்டத்தில் சரியாக அமைந்துள்ளது. நான் இன்று இரண்டாவது வசதியுள்ள பகுதியை வெளிப்படுத்த போகின்றேன்: ஈரானுடைய இரகசிய அணு ஆயுத காப்பகம். இது தெஹ்ரானின் டுர்குசாஹ்பாத் மாவட்டத்தில் சரியாக அமைந்துள்ளது. ஏறக்குறைய மூன்று மைல் தொலைவில். இரகசிய அணு ஆயுத காப்பகம் எவ்வாறு சரியாக தோற்றம் அளிக்கின்றது என்பதை நான் உங்களுக்கு காட்டுகின்றேன். அது இங்கு தான் உள்ளது. நீங்கள் பார்க்கும் விதமாக, அணு ஆயுத காப்பகத்தை போல் இதுவும் மற்றொரு அப்பாவிபோல் காட்சிதரும் கட்டிடம் ஆகும். இப்பொழுது கூகுள் ஏர்த்தை (Google Earth) உங்களுடைய வீட்டில் நீங்கள் உபயோகிக்கும் ஒருவராயின், இது இரகசிய அணு ஆயுத காப்பகமாக நீண்ட காலத்திற்கு இருக்க முடியாது. உங்களிடம் ஒருங்கிணைக்கப்பட்ட தகவல் உள்ளது, நீங்கள் அதை பெறும்படியாக முயற்சிக்கலாம். அத்தோடு அதை பெறும்படியாக முயற்சிக்கும் ஒவ்வொருவருக்கும்: கம்பளியை-தூய்மையாக்கும் இடத்திலிருந்து 100 மீற்றர் தொலைவில் உள்ளது. அதே நேரத்தில், அங்கு கம்பளியை தூய்மையாக்கும் மிகச்சிறந்த காரியத்தை அவர்கள் செய்வதாக நான் கேள்விப்பட்டேன். ஆனால் இப்போதிருந்து கதிரியக்க பகுதிகளில் இருக்கலாம். இதுவே இரண்டாவது இரகசிய தளம். இப்பொழுது செயற்கைகோள் திறன் உடைய நாடுகள் வார நாட்களிலும் வார இறுதியிலும் அந்த நடைபாதைகளில் சில செயற்பாடுகள் அதிகரித்திருப்பதை காணலாம்.

முன்னும் பின்னும் வேகமாக செல்லக்கூடியதாக காணப்படும் அந்த மக்கள் ஈரானிய அதிகாரிகளே ஆவார்கள், அவர்கள் அந்த பகுதியை தூய்மைப்படுத்துவற்கான வேலையை முடிப்பதற்கு தீவிரமாக முயற்சிக்கின்றார்கள். நீங்கள் பார்க்கின்ற படி – அணு ஆயுத காப்பகத்தை தூய்மைப்படுத்துவதற்காக கடுமையாக வேலைப்பளுவில் அவர்கள் இருப்பதை எமது ஆணு ஆயுத சோதனையின் பின் நாம் காணலாம். ஏறத்தாள கடைசி மாதத்தில் அவர்கள் 15 கிலோகிராமுடைய கதிர்வீச்சுப் பொருட்களை அகற்றியுள்ளனர். அவர்கள் அதை கொண்டு என்ன செய்தார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? அந்த 15 கிலோ கிராமுடைய கதிர்வீச்சு பொருட்களை, இந்தப் பகுதியில் இருந்து வெளியேற்ற வேண்டும். அகவே அவர்கள் அதை வெளியே எடுத்து ஆதாரத்தை மறைக்;க முயற்சிக்கும் காரணத்தினால் தெஹ்ரானை சுற்றி அதை பரப்பி வைத்துவிட்டனர். தெஹ்ரானிலுள்ள ஆபத்தான பகுதியில் உள்ள குடியிருப்பாளர்கள் அமேசான் amazon.com தளத்திலிருந்து வெறும் 29.99 டாலருக்கு Geiger counter என்னும் (கதிர்வீச்சு அளவிடும் உபகரணத்தை) அவர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிய வேண்டுகின்றேன். இன்றைய நாளின் படி, அது ஈரானிய ரியாலில் வெறும் நான்கு மில்லியன் ஆகும். ஆனால் நாம் அதை பின்னதாக பார்த்துக்கொள்வோம். நான் ஈரானியருடைய பொருளாதாரத்தை குறித்து ஒரு நிமிடத்தில் பேசிக்கொள்ளுகின்றேன்.

அவர்கள் இந்த கதிர் வீச்சுப்பொருட்களை எடுத்து தெஹ்ரானை அதை சுற்றி பரப்பி வைத்துள்ளனர். இப்பொழுது ஈரானிய அதிகாரிகள் அந்த பகுதியை இன்னும் சுத்தம் செய்து கொண்டிருப்பதால் இன்னும் அதிகமாக செய்ய வேண்டிய வேலைகள் உள்ளன ஏனென்றால் ஏறக்குறைய 15 கப்பல் கொள்கலன்களில் அவைகளை அவர்கள் வைத்திருக்கிறார்கள், அவைகள் மிகப்பெரியவைகள், 15 கப்பல் கொள்கலன்களில் முழுமையான அணு ஆயுத தொடர்புடைய உபகரணங்களையும் பொருட்களையும் சேமித்து வைத்திருக்கின்றார்கள். இப்பொழுது வரைக்கும் இந்த ஒவ்வொரு கொள்கலன்களும் 20 தொன் வரையான பொருட்களை உள்ளடக்கக் கூடியதாக இருக்கும் இதன் அர்த்தமானது இந்த தளமானது ஆணு ஆயுதம் தொடர்புடைய 300 தொன் நிறையுடைய உபகரணங்களையும் பொருட்களையும் கொண்டிருக்கின்றது.

இங்கே தான். ஆகவே, மேன்மைதங்கிய பிரதிநிதிகளே, நீங்கள் உங்களுக்குள்ளேயே ஒரு கேள்வியை கேட்டுக்கொள்ள வேண்டும். ஈரான் ஏன் இரகசிய அணு ஆயுத காப்பகத்தையும் இரகசிய ஆணு ஆயுத ஆலையையும் வைத்திருக்க வேண்டும்? ஏனென்றால் அனைத்திற்கும் பிறகு, தெற்கு ஆபிரிக்காவும் லிபியாவும் கூட, அவர்களுடைய அணு ஆயுத திட்டங்களை அவர்கள் கொடுக்கும்போது, அவர்கள் செய்த முதலாவது காரியமானது இருவரிடமுமுள்ள காப்பகத்தையும், பொருட்களையும் மற்றும் உபகரணங்களையும் அழிப்பதாகவே இருந்தது. அத்தோடு இந்த கேள்விக்கான விடை இலகுவானது: ஈரான் அதனுடைய அணு ஆயுத காப்பகத்தையும் அதனுடைய அணு ஆயுத ஆலைகளையும் அழிக்காமல் இருக்கின்றது ஏனென்றால் அது அணு ஆயுத உபகரணங்களை விருத்திசெய்யும்படியான அதனுடைய இலக்குகளை கைவிடவில்லை. உண்மையாகவே, அணுகுண்டை சரியான தருணத்தில் வெளிப்படுத்துவதற்காக வரப்போகும் சில வருடங்களில் இந்த இரு தளங்களையும் அது பயன்படுத்த தீர்மானித்து உள்ளது. ஆனால் சீமான்கள் மற்றும் சீமாட்டிகளே, அது நடைபெறாதிருக்கும் பொருட்டு, மீதியானதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அது நடைபெறாது, ஏனென்றால் எதை ஈரான் மறைத்தாலும் அதை இஸ்ரவேல் கண்டுபிடித்து விடும்.

சீமான்கள் மற்றும் சீமாட்டிகளே, நான் IAA தலைமை செயலகம் மதிப்பிற்குரிய யுகியா அமானோ  அவர்களுக்கு ஒரு செய்தியை அறிவித்தேன். அவர் நல்ல மனிதன் என்று நான் நம்புகின்றேன். நான் அவர் சரியான காரியங்களை செய்யகின்றவர் என நம்புகின்றேன். நன்று... மதிப்பிற்குரிய அமானோ சரியான காரியத்தை செய்யுங்கள். சென்று இந்த அணு ஆயுத களஞ்சிய வீட்டை ஆய்வு செய்யுங்கள். உடனடியாகவே. ஈரானியர்கள் அந்த இடத்தை சுத்தம் செய்யும் முன்னர். மேன்மைதங்கிய பிரதிநிதிகளே, அந்த ஆய்வுகள் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் மேற்கொள்ளப்படலாம் என நாம் வாக்குறுதி அளித்ததை நீங்கள் ஞாபகத்தில் கொண்டிருக்கின்றீர்களா? அதை ஞாபகத்தில் வைத்திருக்கின்றீர்களா? எந்த நேரத்திலும், எந்த இடத்திலும். நன்று. இந்த இடத்தில், இந்த தருணத்தில் ஆய்வு செய்வதை குறித்தான நிலைப்பாடு என்ன? மற்றும் மதிப்பிற்குரிய அமானோ – நீங்கள் அந்த இடத்தில் இருக்கும்போது, நாங்கள் உங்களுக்கு சொன்னதை குறித்து மற்ற தளங்களை ஆய்வு செய்யுங்கள். அனைவருக்காகவும், ஒரு தடவை ஈரானை குறித்தான உண்மையை உலகிற்கு கூறுங்கள்.

இப்பொழுது தெஹ்ரானின் கொடுங்கோலர்களுக்கு, இன்று கூட நான் ஒரு செய்தயை வைத்திருக்கின்றேன். நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள் என்பது இஸ்ரவேலுக்கு தெரியும், அத்தோடு அதை நீங்கள் எங்கு செய்கின்றீர்கள் என்பதும் இஸ்ரவேலுக்கு தெரியும். எமது அழிவுக்காக விருத்தி செய்யப்படும் அணு ஆயுதங்களுக்கான அந்த ஆட்சிமுறையான செயற்பாட்டை இஸ்ரவேல் ஒருபோதும் அனுமதிக்காது. இப்பொழுது அல்ல! பத்து வருடங்களில் அல்ல!! என்றென்றைக்குமே அனுமதிக்காது!!!

அத்தோடு ஈரானுடைய ஆக்கிரமிப்பிற்கு எதிராக தன்னைத்தான் தற்காத்துக்கொள்ள இஸ்ரவேல் எது வேண்டுமானாலும் செய்யும்! நாம் சிரியாவில் உங்களுக்கு எதிரான நடவடிக்கையை தொடருவோம்! நாம் லெபனானில் உங்களுக்கு எதிரான நடவடிக்கையை செய்வோம்! நாம் ஈராக்கில் உங்களுக்கு எதிரான நடவடிக்கையை செய்வோம்!  நாம் உங்களுக்கு எதிரான நடவடிக்கையை எந்த நேரத்திலும், எங்கென்றாலும் செய்வோம்! நாம் எமது நாட்டை பாதுகாக்கவும், எமது மக்களை பாதுகாக்கவும் செயற்பாடுகளை செய்ய வேண்டும். மேன்மை தங்கிய பிரதிநிதிகளே, மூன்று வருடங்களுக்கு முன், சில வாரங்களுக்கு அப்புறம் அணு ஆயுத ஒப்பந்தம் நிறைவேறியது, நான் இந்த கேள்வியை இந்த சிறந்த மேடையில் இருந்து கேட்டேன்: ஆயுதம் மற்றும் பணத்தை கொண்ட ஈரானியருடைய வெள்ளம் போன்ற தீவிரமான ஜனநாயகமானது அதன் ஆக்கிரமிக்கும் பசியை கட்டுப்படுத்தும் என யாராவது உண்மையாகவே நம்புகின்றீர்களா?

ஆனால் ஒப்பந்தத்தை ஆதரிப்போர் அநேகர் அதையே சாதாரணமாக நம்புகின்றார்கள். ஈரானுடைய ஆட்சியானது இன்னும் அதிகம் மிதமாக, அதிகம் சமாதானமாக மாறும் என அவர்கள் நம்புகின்றார்கள். அவர்கள் மேலிடத்திலிருந்து அது பெறும் பில்லியன் கணக்கான டாலர்களை தமது மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றுவதற்கு ஈரான் பயன்படுத்தும் என அவர்கள் நம்புகின்றார்கள். தண்ணீர் பிரச்சனையை நீக்குவதற்கு. போக்குவரத்து பிரச்சினையை தீர்ப்பதற்கு. மின்சார பிரச்சினையை தீர்ப்பதற்கு. வைத்தியசாலைகள், பாடசாலைகள். இதைத்தான் அவர்கள் நம்புகின்றார்கள். மெய்யாகவே உங்களில் சிலரும் கூட அதைதான் நம்புகின்றீர்கள். நன்று, உண்மையில் அது நடைபெறவில்லை. மாறாக, ஈரான் அதன் பரந்த போர் உபகரணங்களுக்கு எரிபொருள் நிரப்பவே பணத்தை உபயோகிக்கின்றது. கடந்து சென்ற வருடத்தில் ஈராக்கில் இருந்த குர்தியர்களை ஈரான் தாக்கியது, சிரியாவில் இருந்த சுன்னி பிரிவினரை படுகொலை செய்தது, லெபனானில் இருந்த ஹிஸ்புல்லாவிற்கு ஆயுதங்களை கொடுத்தது, காசாவில் இருந்த ஹமாஸிற்கு நிதியுதவி அளித்தது, சவுதி அரேபியாவிற்குள் ஏவுகனைகளை ஏவியது, ஸ்ட்ரெய்ட் ஆப் ஹோர்மஸ் மற்றும் ஸ்ட்ரெய்ட் ஆப் பாப் அல்-மாட் ஆகியோரின் வழிநடத்தப்பட்ட சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் விடுத்தது.

ஐ.நா.சபையில் இஸ்ரவேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு ஆற்றிய உரை 27-9-2018 (பகுதி - 2/3)

சில சமாதானம். சில நிதானம். இப்பொழுது நீங்கள் சிந்தித்தால், ஈரானுடைய ஆக்கிரமிப்பானது மத்திய கிழக்கில் வரையறுக்கப்பட்டது என நீங்கள் சிந்தித்தால், மீண்டும் சிந்தித்துக் கொள்ளுங்கள். ஐக்கிய அமெரிக்காவில், கடைசி மாதத்தில் இரண்டு ஈரானிய முகவர்கள், அதாவது சரியாக இப்பகுதியில் தீவிரவாத தாக்குதல்களுக்கு சதி திட்டம் தீட்டிய காரணத்தினால் கைது செய்யப்பட்டார்கள்.  அத்தோடு பல வாரங்களுக்கு முன்பு, ஐரோப்பிய மத்திய பகுதியில் தீவிரவாத தாக்குதல்களுக்கு சதிதிட்டம் செய்யப்பட்ட காரணத்தினால் இரண்டு ஈரானிய முகவர்கள் கைது செய்யப்பட்டார்கள். இன்னமும் கூட ஐக்கிய அமெரிக்காவால் ஈரான் மீது புதிய தடைகளை எதிர்கொள்ளுகின்றது, ஐரோப்பா மற்றும் வேறு நாட்டவர்கள் ஈரானுக்கு உதவி செய்து அந்த புதிய தடைகளை நீக்கி அமைதிப்படுத்த முயற்சிக்கின்றன.

இப்பொழுது நான் சாதாரணமாக ஒரு வார்த்தையை உபயோகிக்கின்றேன். ஓர் கடினமாக வார்த்தை. ஓர் பலமுள்ளதுமான ஓர் வார்த்தை. அமைதிப்படுத்தல். அத்தோடு நான் அதை தயக்கமின்றி பயன்படுத்துகின்றேன். ஆனால் துரதிஷ்டவசமாக அது சரியானதாகவே நாம் மீண்டும் அதனை பார்க்கின்றோம். ஐரோப்பியாவில். இதை சிந்தித்துப் பாருங்கள். இதே வாரத்தில் ஐரோப்பிய குடிமக்களை படுகொலை செய்வதற்கான முயற்சியில் ஈரான் கையும் களவுமாக பிடிபட்டது, ஜனாதிபதி ரோஹினிக்கு சிவப்பு கம்பளத்தை விரிக்கும் ஐரோப்பிய தலைவர்கள், ஈரானுக்கு இன்னும் அதிகம் பணத்தை கொடுப்பதற்கு வாக்குறுதி அளிக்கின்றனர்.

நான் ஒரு வரலாற்று மகன், நான் தான் கேட்க வேண்டும்: நான் ஒரு வரலாற்று மகனாக மாத்திரம் அல்ல, ஒரு யூதனாக, உலகத்தின் குடிமகனாக, 20ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒருவரைப்போன்று - இந்த ஐரோப்பிய தலைவர்கள் வரலாற்றில் இருந்து எதையும் கற்கவில்லையா? அவர்கள் ஒருபோதும் எழும்ப மாட்டார்களா? நன்று!

நாம் இஸ்ரவேலில் உள்ளோம் -- எம்மை எழுப்பவேண்டிய அழைப்பு மணி தேவையில்லை ஏனென்றால் ஒவ்வொரு நாளும் ஈரான் எம்மை அச்சுறுத்துகின்றது. ஏனென்றால் மிகச் சிறந்த நம்பிக்கைகள் இருந்த போதிலும், அணுசக்தி ஒப்பந்தத்தோடு சுற்றி அநேக நம்பிக்கைகள் இருந்த போதிலும் இந்த ஒப்பந்தமானது போரை மேலும் தூரத்திற்கு தள்ளி விடவில்லை. அது எமது எல்லைகளுக்கு மிக அருகாமையில் போரை கொண்டு வந்துள்ளது. சிரியாவில், ஈரான் எமக்கு எதிராக நிரந்தரமான இராணுவ தளங்களை நிறுவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றது அத்தோடு ஏற்கனவே எமது பிராந்தியத்திற்குள் ஏவுகணைகளையும் ஆளற்ற விமானங்களையும் ஏவியுள்ளது. காசாவில் ஈரான் எமது நகரங்களுக்கு ஏவுகணை தாக்குதல்களை நிறுவுவதற்காகவும், எமது குடிமக்களுக்கு எதிராக தீவிரவாத தாக்குதல்களுக்காகவும் தீவிரவாத குழுக்களுக்கு ஆயுதங்களை அளித்துள்ளது. லெபனானில், ஈரான் தவறாக செல்லும் ஏவுகணைகளை துல்லியமான வழிநடத்தப்படகூடிய ஏவுகணைகளாக மாற்றுவதற்கான ரகசிய தளங்களை கட்டுவதற்கு ஹிஸ்புல்லாவை வழிநடத்துகின்றது. இஸ்ரவேலிற்கு ஆழமாக உற்புறம் ஏவுகனைகள் சரியாக பத்து மீற்றருக்கும் இடையில் இலக்குவைக்கப்பட்டுள்ளது. ஹிஸ்புல்லா, இதை கவனித்து கொள்ளுங்கள், ஹிஸ்புல்லா பெய்ரூட்டில் வேண்டுமென்றே அப்பாவி மக்களை மனித கவசங்களாக பயன்படுத்துகின்றது. பெய்ருட் சர்வதேச விமானத்தளத்திற்கு அருகாமையில் மாற்று ஏவுகணை தளங்களாக இந்த மூன்று இடங்களை அவர்கள் வைத்துள்ளார்கள்.

இங்கு ஒரு படம் காணப்படுகின்றது இதன் பெறுமதியானது 'ஆயிரம் ஏவுகணைகள்' ஆகும். இங்குள்ளது பெய்ரூட் சர்வதேச விமான நிலையம். இங்குள்ளது முதலாவது ஏவுகணை தளம். இது நீர்விளிம்பின் அருகாமையிலுள்ள உசாய் பக்கத்தில், ஓடுதளத்திலிருந்து சில அடிகளுக்கு அப்பால் அமைந்துள்ளது. இங்குள்ளது இரண்டாவது தளம். இது இரண்டு அடி தூரத்தில் கால்பந்து மைதானத்திற்கு அப்பால் உள்ளது. அத்தோடு இதுவே மூன்றாவது தளம். இது அதனுடன் அடுத்து சரியாக விமான நிலையத்திற்கு அருகில் இருக்கின்றது. ஆகவே நான் இன்று ஹிஸ்புல்லாவிற்கு ஒரு செய்தியை வைத்திருக்கின்றேன்: இஸ்ரவேலுக்கு தெரியும்!, நீங்கள் என்ன செய்கின்றீர்கள் என்பதும் கூட இஸ்ரவேலுக்கு தெரியும்! எங்கே நீங்கள் அவற்றை செய்கின்றீர்கள் என்பது இஸ்ரவேலுக்கு தெரியும்! அத்தோடு நீங்கள் அதற்கூடாகவே செல்லும்படியாக இஸ்ரவேல் ஒரு போதும் அனுமதிக்காது!

சீமான்கள் மற்றும் சீமாட்டிகளே, தடைகள் நீக்கப்பட்டால் என்ன நடைபெறும் என்பதை குறித்து அணு ஆயுத ஒப்பந்தத்தை ஆதரிப்போர் தறவான நிலைபாட்டில் உள்ளார்கள். அவர்கள் தவறான நிலைபாட்டில் உள்ளார்கள், தடைகள் மீள் ஏற்படுத்தப்பட்டால் என்ன நடைபெறும் என்பதை குறித்தும் மிகதவறான நிலைபாட்டில் உள்ளார்கள். ஐக்கிய அமெரிக்காவினுடைய தடைகள் மாத்திரம் ஈரானில் சிறிதளவிலான பொருளாதார தாக்கம் கொண்டிருக்கும் என அவர்கள் வாதிடுகின்றார்கள். அதை தான் அவர்கள் கூறினார்கள். உண்மையாகவா? நன்று இப்பொழுது ஈரானுடைய  GDP அளவிலும் ஐம்பது மடங்கு பெரிதளவு GDP கொண்ட ஐக்கிய அமெரிக்காவோடு வியாபாரம் செய்யும் நிறுவனங்களுக்கும்  ஜனாதிபதி டிரம்பினால் ஈரானில் வியாபாரம் செய்யும்படியாக கட்டாயப்படுத்தப்பட்ட நிறுவனங்களினாலும் ஈரானிய பொருளாதாரத்திற்கு என்ன நடைபெற்றுள்ளது என்பதை நாம் பார்ப்போம். ஒரு வருடத்திற்கு முன்னர் ஈரானுடைய பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தது. இப்பொழுது அது சரிகின்றது. ஈரானுடைய நாணயம் வீழ்ச்சியடைந்துள்ளது. பணவீக்கம் மற்றும் வேலையின்மை உயர்ந்து வருகின்றது. பிரித்தானிய விமான நிறுவனங்கள், ஜெர்மானிய வங்கிகள், பிரான்சு எண்ணை கம்பனிகள், ஜப்பானிய எண்ணெய் இறக்குமதியாளர்கள் மற்றும் அநேகர் இதிலிருந்து வெளியேறுவதற்கு தடுமாறுகின்றனர். இது சிறு பொருளாதார தாக்கமானது என்றால், நவம்பர் மாதத்தில் ஐக்கிய அமெரிக்காவால் திணிக்கப்படப்போகும் அடுத்தகட்டத்தில் என்ன நடைபெறும் என்பதை எண்ணிப் பாருங்கள்.

ஒப்பந்தத்தின் ஆதரவாளர்கள், பொருளாதார தடைகளை மீட்டெடுப்பதானது, ஆட்சிக்கு எதிராக ஈரானிய மக்களை அணிவகுக்கும் என்று வாதிடும் போது கூட தவறானவர்கள் ஆகின்றனர். நன்று! அவர்கள் நிச்சயமாக அணிவகுக்கின்றார்கள் ஆனால் ஆட்சியை சுற்றி அல்ல - - அவர்கள் ஆட்சிக்கு எதிராகவே அணிவகுக்கின்றார்கள். அவர்கள் 'அமெரிக்காவுக்கு அழிவு உண்டாகட்டும்' என கோஷமிடவில்லை.  அவர்கள் 'சர்வதிகாரத்திற்கு அழிவு உண்டாகட்டும்' என கோஷமிடுகின்றனர்.  அவர்கள் 'இஸ்லாமிய புரட்சியை ஏற்றுமதி செய்யுங்கள்' என  கோஷமிடவில்லை. அவர்கள் 'சிரியாவை விட்டு வெளியேறு,' 'லெபனானை விட்டு வெளியேறு,' 'காசாவை விட்டு வெளியேறு,' 'ஈரானில் எம்மை கவனியுங்கள்' என கோஷமிடுகின்றனர்.

நான் இந்த ஆர்பாட்டங்களை குறித்து கேட்டேன். நான் ஈரானிய மக்களோடு பேசினேன். நான் இந்த ஒளிநாடாக்களை பகிர்ந்தேன். அத்தோடு நான் அநேக பிரதியுத்தரவுகளை ஈரானியர்களிடம் இருந்து பெற்றேன். முதலில் லண்டனில் அல்லது பாரிசில் அல்லது லாஸ் ஏஞ்சல்சில் பாதுகாப்பாயிருப்பதாக ஈரானிய வெளிநாட்டவர்களை எண்ணினேன். இல்லை. ஈரானிலிருந்த ஈரானியர்கள், இஸ்ரவேலை தழுவி, ஆட்சியை விமர்சித்து – அவர்களுடைய பெயர்களின் படி --- அவ்வாறு ஒர் குறை இருக்கின்றது. அத்தோடு என்னுடைய உளவுத்துறை மக்களிடம் நான் கேட்டேன்: என்ன நடைபெறுகின்றது? அத்தோடு சிறிது நேரத்திற்கு பின் எதிர்ப்புக்கள் வெடித்தவுடன், நான் கூறியதின் காரணத்தினால் அல்ல ஆனால் அந்த இடத்தில் மேற்கொள்ளப்படும் அசாதாரணமான காரியத்தை சுட்டிக்காட்டுவதாகவே அது இருந்தது ஏனென்றால் இந்த எதிர்ப்புக்களில் ஈரானிய மக்கள் நம்பமுடியாதளவு நம்பிக்கையை காட்டினர். நகர்புற மையங்களிலிருந்து வெளிப்புற கிராமங்களுக்கு, அத்தோடு இது முழு ஈரான் தேசத்தையும் தழுவிக்கொண்டிருக்கின்றது. வேலை செய்யும் பஜார் வியாபாரிகளிடம் இருந்து இளம் பெண்கள் வரை தமது முடியை மறைக்காதபடி செய்கின்றனர்: மத்திய கிழக்கு முழுவதும் இரத்தக்களரி போர்களுக்கிடையில், ஈரானிய மக்கள் நான்கு தசாப்தங்களாக மிருகத்தனமாக அடக்குமுறை செய்கின்ற ஒரு ஆட்சிக்கு முன்னால் தைரியமாக நிற்கின்றார்கள், அத்தோடு அது அவர்களுடைய பணத்தை வீணாக்கியது, இன்னும் அவர்களுடைய பணத்தை வீணாக்கும்.

ஆகவே இங்கு ஐரோப்பிய தலைவர்களுக்கும் மற்றவர்களுக்கும் நான் கூறுவது என்னவென்றால்: ஈரானிய சர்வதிகாரிகளை மூடுவதற்கு பதிலாக அனைத்து உலகிலும், எல்லா அபாயத்திற்கு உட்படுத்தும் அந்த ஆட்சியிற்கு எதிரான புதிய ஆதரவுக்காக அநேக அராபிய நாடுகளோடும், ஐக்கிய அமெரிக்காவோடும், இஸ்ரவேலோடும் இணைந்து கொள்ளுங்கள்.

ஈரானுடனான பேரழிவுகரமான அணுசக்தி உடன்படிக்கையிலிருந்து விலகிக்கொள்வதான தைரியமான முடிவுக்கு ஜனாதிபதி டிரம்பிற்கு இஸ்ரவேல் ஆழமான மிகப்பெரிதான நன்றியுடையதாயிருக்கின்றது. அநேக, அநேக எமது அரபு அயலகத்தவர்களும் கூட நன்றியுடையவர்களாக இருக்கின்றார்கள். அத்தோடு உலகத்தின் பாதுகாப்பு மற்றும் சமாதானத்தை குறித்து கரிசனை கொள்ளும் அனைவரும் நன்றியுடையவர்களாக இருக்கின்றார்கள். ஆனால் சீமான்கள் மற்றும் சீமாட்டிகளே, எனக்கு செய்ய வேண்டிய மிக முக்கியமான அறிக்கை ஒன்று உள்ளது: இது உங்களை ஆச்சரியப்பட வைக்கலாம் ஆனால் நான் அதை ஒப்புக்கொள்ள வேண்டும் அதாவது ஈரானுடைய உடன்படிக்கையானது ஒரு அநீதியான காரியத்தை கொண்டிருக்கின்றது -- ஈரானை மேம்படுத்துவதின் மூலம், முன் எப்பொழுதும் இராத வரையில் ஒர் நெருங்கிய உறவு மற்றும் நட்பில் அது இஸ்ரவேலையும் அநேக அரபு தேசங்களையும் நெருக்கத்திற்குள் கொண்டுவந்திருக்கின்றது, அதை என்னுடைய வாழ்நாளில் பார்த்திருக்க முடியாது, ஒரு சில வருடங்களுக்கு முன்பு வரை கற்பனை செய்ய முடியாதளவிற்கு இருந்தது.

ஓர் அச்சுறுத்தலை சுற்றி, ஓர் சவாலை சுற்றி, நட்பை நீங்கள் உருவாக்கும் போது, நீங்கள் உடனடியாகவே சந்தர்ப்பங்களை காண்கின்றீர்கள் என்று நீங்கள் அறிவீர்கள். இஸ்ரவேல் உதவி செய்தும், உதவி செய்யப்படவும் எமது மக்களுக்கான நல்ல வாழ்க்கையை எவ்வாறு கொண்டுவர வேண்டும் என்பதாகும், ஆனால் இது பாதுகாப்பிற்கு மட்டும் அல்ல. இஸ்ரவேல் இந்த புதிய நட்பு குறித்து ஆழமான பெறுமதியினை கொண்டிருக்கின்றது அத்தோடு பாலஸ்தீனியர்கள் உட்பட, ஜோர்தானிலிருந்து அராபிய அண்டை நாடுகள், எகிப்து அப்பால் இஸ்ரவேல் சமாதானத்தை விரிவுபடுத்தும், முறையான சமாதானம், இயலுமை சீக்கிரம் வரும் நாட்களை குறித்து நான் நம்பிக்கையுடையவனாக இருக்கின்றேன். இந்த இலக்கை அடையும்படியாக ஜனாதிபதி டிரம்ப் மற்றும் அவருடைய சமாதான குழுக்களோடு வேலை செய்வதற்கு நான் எதிர்பார்த்து இருக்கின்றேன். நான் அறிந்த இடமாகிய ஐக்கிய அமெரிக்காவாகிய இங்கு நாம் இருக்கின்றோம், நானும் கூட இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த வேண்டுகின்றேன,; ஏனென்றால் அநேக வருடங்களுக்கு முன்பு அநேக வருடங்களாக நான் தூதுவராக பணியாற்றினேன், ஆகவே நான் ஐ.நா குறித்து சில காரியங்களை நான் அறிவேன். ஆகவே நான் இந்த சந்தர்ப்பத்தை ஜனாதிபதி டிரம்ப் அத்தோடு ஐ.நா.வில் இஸ்ரவேலுக்கு அசைக்க முடியாத ஆதரவை ஏற்படுத்திய தூதர் ஹெலி அவர்களுக்கும் இஸ்ரவேலினுடைய பாராட்டை தெரிவிக்கும் விதமாக பயன்படுத்த விரும்புகின்றேன். அவர்கள் ஐயத்திற்கு இடமின்றி இஸ்ரவேல் தன்னைத்தான் பாதுகாத்துக்கொள்ளும் உரிமையை குறித்து மிகவும் ஆதரவாக செயற்பட்டனர்.

அவர்கள் சரியாக வரலாற்று புறக்கணிப்பை செய்தார்கள் - யுனெஸ்கோவை புறக்கணித்தார்கள் மற்றும் ஐ.நா மனித உரிமை அமைப்பிலிருந்து மிகச்சரியாக வெளியேற்றப்பட்டனர். உலகை சேர்த்தல் தொடர்பாக மற்ற பகுதிகளை விட இஸ்ரவேலை குறித்த அநேக தீர்வுகளை அவர்கள் கொண்டிருக்கின்றார்கள் என நான் எண்ணுகின்றேன். அத்தோடு பத்து மடங்கு அதிகமாக ஈரான், சிரியா, அதற்கு எவ்வாறு பெயர் வைப்பீர்கள் என்று எனக்கு தெரியாது. பத்து மடங்கு மாத்திரம் அல்ல, ஏனென்றால் பூச்சியத்தை கொண்டு எந்த எண்ணையும் உங்களால் பெருக்க முடியாது.

ஜனாதிபதி டிரம்ப், தூதுவர் ஹேலி ஆகியோருக்கு நிதியளிப்பதை அவர்கள் நிறுத்தினார்கள், அவர்கள் மறுசீரமைக்கப்படாத UNRWA க்கு நிதியளிப்பதை அவர்கள் நிறுத்தினார்கள், இது பாலஸ்தீன அகதிகளுக்கான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மாறாக அதை பூரணப்படுத்தும் ஓர் அமைப்பாகும்.

நாளுக்கு நாள், இஸ்ரேலினுடைய பழிதூற்றலுக்கு பின் டிரம்பினுடைய நிர்வாகமானது ஐ.நா.வில் இங்கு நீண்ட காலமாக ஓர் சிறப்பம்சமாக எழுந்து நிற்கின்றது. 25 வருடங்களுக்கு முன்பாக சீயோனிசத்தை இனவாதத்திற்கு ஒப்பிட்டு செய்யும் வெட்கப்படுத்தும் தீர்வானது அகற்றப்பட்டாலும், அதன் தவறான துர்நாற்றம் இன்னும் இந்த அறைகளுக்கிடையே ஒட்டிக்கொண்டிருக்கின்றது என்று நான் கூற மிகவும் வருந்துகின்றேன்.

இஸ்ரவேல் எத்தியோப்பிய யூதர்களை சுதந்திரத்திற்கு நேராக உயர்த்தினர், அத்தோடு யூத நகரில், இஸ்ரவேலில் ஒரு புதிய வாழ்க்கையோடும் கூட. இன்னும் ஐ.நா.வில் இங்கு, ஐ.நா.வில் இங்கு இஸ்ரவேலின் மீது அபத்தமான இனவெறி குற்றச்சாட்டு உள்ளது.

இஸ்ரவேலில் அராபிய குடிமக்கள் எமது தேர்தலில் பங்குபற்றியுள்ளனர், எமது பாராளுமன்றங்களில் சேவித்துள்ளனர், எங்கள் நீதிமன்றங்களில் தலைமை தாங்கியுள்ளனர், அனைத்து மற்றைய இஸ்ரவேலிய குடிமக்களை போல அதே தனிமனித உரிமைகளை சரியாக கொண்டிருக்கிறார்கள். இன்னும் ஐ.நா.வில் இங்கு, இஸ்ரவேல் வெட்கக்கேடான முறையில் குற்றம் சாட்டப்படுகின்றது.

இன்று! இஸ்ரவேல் நிலைபெற்ற வருடமாகிய 1948ல் இருந்ததை காட்டிலும் ஐந்து மடங்கு அநேக பலஸ்தீனியர்கள் காணப்படுகின்றார்கள். இன்னும் ஐ.நா.வில் இங்கு, இனப் படுகொலைக்கு முர்க்கத்தனமாக குற்றம் சாட்டப்படுகின்றது.

சீமான்கள் மற்றும் சீமாட்டிகளே, இது என்ன என்பதை குறித்து உங்களுக்கு தெரியுமா?

இது அதே பழைய ஆன்டி செமிஸ்தியம் தான் ஆனால் வேறொரு புதிய முகமூடியுடன்... அவ்வளவும் தான் இது.

ஐ.நா.சபையில் இஸ்ரவேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு ஆற்றிய உரை 27-9-2018 (பகுதி - 3/3)

மேலும், யூத மக்களே அவதூறு செய்யப்பட்டனர் அத்தோடு வித்தியாசமான தராதரத்திற்கு ஏற்படுத்தப்பட்டார்கள்.

இன்று! யூத நாடே அவதூறு செய்யப்படுகின்றது, அத்தோடு வித்தியாசமான தராதரத்திற்கு உட்படுத்தப்படுகின்றது.

இங்கு ஓர் உதாரணம் தரப்படுகின்றது: யூத மக்களுடைய தேசிய மாநிலமாக இஸ்ரவேலின் சட்டத்தின் அறிவிப்பின்படி சமீபத்தில் பெறப்பட்ட, எமது பாராளுமன்றம், எமது நெசட்டிற்கு பின் இஸ்ரவேலுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு தாக்குதல்களை எடுத்துக்கொள்ளுங்கள்.

ஞாபகத்தில் கொள்ளுங்கள்! இஸ்ரவேல் ஒரு சுதந்திர நாடு! நீங்கள் ஒரு சட்டத்தை எதிர்க்கலாம், அத்தோடு மக்களும் எதிர்ப்பு செய்தார்கள். இதற்கு நீங்கள் வித்தியாசமான வார்த்தைகளை அல்லது அந்த பிரிவுகளை கொண்டு அழைக்கலாம் அல்லது அந்த பிரிவில் சேர்ப்பதற்கோ அல்லது கழிப்பதற்கோ நீங்கள் அழைக்கலாம். உங்களால் அது செய்ய முடியும்.

ஆனால் இஸ்ரவேல் இனவெறி என அழைக்கப்படும் போது, இஸ்ரவேல் ஹீப்ருவை அதன் உத்தியோகபூர்வ மொழியாக உருவாக்கியதால் இனவெறி என அழைக்கப்படுகின்றதா மற்றும் தாவீதினுடைய நட்சத்திரத்தை  அதன் கொடியில் கொண்டிருப்பதாலா இஸ்ரவேல் யூத மக்களுடைய தேசிய நாடு என தன்னில் பிரகடனம் செய்வதால் இனவெறி எனப்படும் முத்திரை குத்தப்படுகின்றதா, இது இது கீழ்த்தரமான ஆபத்தான நேர்மையற்ற முறை ஆகும். அத்தோடு உங்களுக்கு ஏன் என்று தெரியுமா?

ஏனென்றால் இந்த அறையில் 100 நாட்டிற்கும் அதிகமான பிரதிநிதிகள் இருக்கின்றார்கள் அவர்களிடம் ஒரேஒரு உத்தியோகபூர்வ மொழியே காணப்படுகின்றது, அநேக நாடுகளில் பொதுவாக பேசப்படும் வேறு அநேக மொழிகளும் கூட காணப்படுகின்றது. சிலுவை அடையாளங்களையும் அல்லது பிறை அடையாளங்களையும் அவர்களுடைய கொடிகள் கொண்டிருக்கும், 50க்கும் மேற்பட்ட நாடுகள் காணப்படுகின்றன, எவ்வாறாயினும் கூட அவர்களில் அநேக இஸ்லாமியர்கள் அல்லாதவர்களும் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களும் இருக்கின்றார்கள், அவர்களின் அநேகர், அவர்களுக்கு நடுவில் வாழுகின்றார்கள். அத்தோடு கூட டஜன் கணக்கான நாடுகள் அவர்களுடைய எல்லைக்குள் பல இன மற்றும் தேசிய சிறுபான்மையினர் இருப்பினும் கூட குறிப்பிட்ட மக்களுக்கு தேசிய நாடாக தம்மைத்தாம் வரையறுக்கின்றனர்.

அவர்களுடைய தனிப்பட்ட தேசிய அடையாளத்தை கொண்டாடுவதற்கு அவமதிப்பு அல்லது இழிவு செய்யப்படும் எந்த ஒரு நாடும் இல்லை. இஸ்ரவேல் மாத்திரமே அவமதிப்பு செய்யப்படுகின்றது. இஸ்ரவேல் மாத்திரமே இழிவு செய்யப்படுகின்றது.

நாம் ஒரு தேசிய அரசை கொண்டிருக்காமல் இருக்கும் யூத மக்களை குறித்தான தனிப்பட்ட விடயம் என்ன? நாம் ஒர் தேசிய அரசை கொண்டிருப்பதை இன்னும் அநேகர் எதிர்ப்பதன் குறித்தான தனிப்பட்ட விடயம் என்ன?

சில தருணங்களுக்கு முன்னர், ஜனாதிபதி அப்பாஸ் இஸ்ரவேலர்களுடைய தேசிய மாநில சட்டம் இஸ்ரவேல் ஒரு இனவெறியுடைய, நிறவெறியுடைய அரசு என்பதை உறுதிப்படுத்துகின்றது என அருவருப்புடன் கூறினார்.

ஜனாதிபதி அப்பாஸ், நீங்கள் மிகச்சிறந்த காரியத்தை அறிந்திருக்க வேண்டும். நீங்கள் இன அழிப்பை மறுத்து ஒரு விளக்கவுரையை எழுதினீர்கள். உங்களுடைய பாலஸ்தீன ஆணையம் யூதர்களுக்கு நிலத்தை விற்பனை செய்வதற்காக பாலஸ்தீனர்களுக்கு மரண தண்டனையை விதிக்கின்றது. நீங்கள் அதை குறித்து அறிந்திருக்கின்றீர்களா? ஓரு யூதர் ஒரு கட்டிடத்தை அல்லது பாலஸ்தீன பிராந்தியத்தில் எங்காவது ஒரு துண்டு நிலத்தை வாங்கினால், அந்த நிலத்தை விற்ற பஸ்தீனியராகிய அவர் தூக்கிலிடப்படுவார். இவ்விதமாகவே சட்டங்கள் கூறுகின்றது.

ஜனாதிபதி அப்பாஸ், யூதர்களை கொன்ற பலஸ்தீனிய பயங்கரவாதிகளுக்கு நீங்கள் பெருமையாக பணம் செலுத்துகின்றீர்கள். உண்மையாகவே, எவ்வளவுக்கதிகம் அவர்கள் கொல்லப்படுகின்றார்களோ, அவ்வளவுக்கு அதிகம் நீங்கள் பணம் செலுத்துகின்றீர்கள். அவர்களுடைய சட்டத்திலும் கூட அவ்வாறு இருக்கின்றது. அத்தோடு இஸ்ரவேலின் அறநெறியை நீங்கள் கண்டனம் செய்கின்றீர்களா? நீங்கள் இஸ்ரவேலை இனவெறி என அழைக்கின்றீர்களா?

இது சமாதானத்திற்கான வழி அல்ல! இஸ்ரவேல் தொடர்ச்சியாக அர்ப்பணிக்கப்பட்டிருப்பதும், தேவைப்படும் எம் அனைவருக்கும் அவசியமான  சமாதானத்தை அடைவதற்கான வழி இது அல்ல. பயங்கரவாதிகளுக்கு பணம் செலுத்தும் ஆட்சியில் உள்ள தலைவரை இந்த சரீரம் பாராட்டக் கூடாது. ஐ.நா. அத்தகைய ஒரு இழிந்த கொள்கையை கண்டிக்க வேண்டும்.

அத்தோடு ஐ.நா, 2014ல் யுத்த நிறுத்தத்திற்கு இடைதரகராக செயல்பட்ட ஐ.நா வானது, வீழ்ந்த எமது வீரர்களான ஓரோன் ஹாவுல் மற்றும் ஹாடார் கோல்ட்டின் ஆகியோரை ஹமாஸ் விடுவிக்கும்படியாக கோர வேண்டும், இவர்கள் போர்நிறுத்தத்தை மீறி ஹமாசினால் கட்டத்தப்பட்டவர்கள் ஆவார்கள்.

ஹமாசும் கூட அது சிறைவைத்து கொண்டிருக்கும் அபேரா மென்கிஸ்து மற்றும் ஹிசாம் அல் சாயத் ஆகிய இரண்டு இஸ்ரவேலிய குடிமக்களையும் கூட விடுவிக்க வேண்டும்.

சீமான்கள் மற்றும் சீமாட்டிகளே,

நான் இங்கு நின்றும் ஒவ்வொரு தடவையும், இன்று நான் செய்ததை போலவே நான் உணருகின்றேன். இஸ்ரவேலின் ஜனநாயக அரசு மற்றும் யூதர்களின் பிரதம மந்திரியாக இங்கு நான் நின்று கொண்டிருக்கின்றேன்.

இஸ்ரவேல் யூதமாகவும் ஜனநாயகமாகவும் இரண்டையும் கொண்டிருக்க முடியாது என சிலர் நம்புகின்றார்கள். இது தவறானது. இஸ்ரவேல் இரண்டுமே ஆனது, இஸ்ரவேல் இரண்டிலுமே தொடர்ந்தும் நிலைத்து நிற்கும்.

ஏறத்தாழ 4000 வருடங்களுக்கு முன்பாக வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தில் ஆபிரகாம் மற்றும் சாராள் அவர்களுடைய பயணத்தை மேற்கொண்டார்களோ அன்றே இஸ்ரவேல் என்னும் தேசம் எமக்கான தாய் நாடாக மாறி விட்டது. இந்த இடத்திலேயே ஈசாக்கு, ரெபேக்காள், யாக்கோபு, லேயாள்; மற்றும் ராகேல் தேவனுடனான அவர்களுடைய நித்திய உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டார்கள்.

இங்கேயே யோசுவா, இஸ்ரவேலை எமக்கு ஓரு இறையாண்மை உள்ள தேசமாக மாற்றி கொடுத்தார், இங்கேயே தாவீது ஆட்சி செய்தார், ஏசாயா பிரசங்கித்தார், இங்கேயே மக்காபியர்கள் போராட, மசாடா வீழ்ச்சியடைந்தது, இந்த இடமே நாம் நாடுகடத்தப்பட்டதும், பின்பு நாம் திரும்பியதுமான இடமாகும், இங்கேயே எமது பண்டைய நகரை மீள கட்டி நித்திய தலைநகராக எருசலேமை ஏற்படுத்திக்கொண்டோம்.

இந்த இடமாகிய இஸ்ரவேல் தேசம் மாத்திரமே யூத மக்கள் பெருமையுடன் சுய நிர்ணயத்தின் எமது கூட்டு உரிமையை கையாளக்கூடிய ஒரே இடம் ஆகும். உலக நாடுகளின் சங்கத்தினால் ஏறத்தாள நூற்றாண்டுக்கு முன்னேயும் ஐ.நாவினால் 70 ஆண்டுகளுக்கு முன்னேயும் யூத தேசத்தை நிறுவுவதற்கான ஆதரவை வாக்களித்த போதே அந்த உரிமை அங்கீகரிக்கப்பட்டது.

அதே நேரத்தில், இஸ்ரவேல் ஒரு துடிப்புமிக்க ஜனநாயக நாடாக, அதாவது அதனுடைய குடிமக்கள் அனைவரும் -- யூதர்களும் யூதர்கள் அற்றவர்களும் ஒன்றுபோல் சமமான தனிமனித உரிமையை அனுபவிப்பதோடு இந்த உரிமைகள் அனைத்தும் சட்டத்தினால் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரவேலில் நீங்கள் யூதராய் இருக்கலாம் அல்லது அரபியராய் இருக்கலாம் அல்லது கிறிஸ்தவர் அல்லது இஸ்லாம், டூரூஸ் அல்லது பிடோயுன் அல்லது எதுவாகவும் இருக்கலாம், உங்களுடைய தனிபட்ட உரிமைகளானது ஒரே மாதிரியாகவே காணப்படும், அத்தோடு அது என்றென்றைக்குமே ஒரே மாதிரியாகவே காணப்படும்.

மத்திய கிழக்கில் அது வெளிப்படையாக இல்லை, இப்பொழுது அது தெளிவாக இல்லை, மத்திய கிழக்கில் பெண்களை பெரும்பாலும் சொத்து என்றே கருதுகின்றார்கள், சிறுபான்மையினத்தினர் துன்புறுத்தப்படுகின்றார்கள், ஓர் பாலினத்தார் தூக்கிலிடப்படுகின்றனர், இஸ்ரவேலானது மின்னும் சுதந்திரம் மற்றும் செயற்பாடுகளுக்கும் உதாரணமாக எழுந்து நிற்கின்றது.

சீமான்கள் மற்றும் சீமாட்டிகளே,

என்னுடைய நாடான இஸ்ரவேலை பிரதிநிதித்துவம் செய்வதால் நான் அதிகம் பெருமிதம் அடைய முடியாது. இஸ்ரேவேலை கண்கவர் படைபாற்றலான உலகரீதியான தொழில்நுட்ப வல்லமையையும், தகவல் தொழில்நுட்பத்தையும், நுட்பமான வேளாண்மையையும் உடையதாக நாம் மாற்றியிருக்கின்றோம் என்பதில் நாம் பெருமையடைகின்றோம். உங்களுக்கு அது என்ன என்று தெரியுமா? நாம் ஒவ்வொரு தாவரத்திற்கு அடியிலே உரத்தையும் தண்ணீரையும் இலக்காக வைக்கின்றோம். தோட்டத்தில் அல்ல, தோட்டத்தின் ஒரு பகுதியில் அல்ல. ஒவ்வொரு தாவரத்திற்கு அடியிலேயே தான்.  உலகை சுற்றியுள்ள மில்லியன் கணக்கான மக்களுடைய வாழ்க்கையில் முன்றேற்றத்தை ஏற்படுத்தும் நீர் மேலாண்மை, இணைய பாதுகாப்பு, தன்னாட்சி வாகனங்கள், தொழில்நுட்ப சுகாதாரம், மருத்துவ உபகரணங்கள் மற்றும் இன்னும் அநேக துறைகளில் இந்த மிகச்சிறந்த நம்பமுடியாத அபிவிருத்திகளை கொண்டு வருவதையிட்டு நான் பெருமையடைகின்றேன்.

இஸ்ரவேலின் ஞானமுள்ள அறிஞர்கள், புதிதாக்கும் தொழில் முனைவோர், தாலந்துள்ள கலைஞர்களுக்காக நான் பெருமையடைகின்றேன். இஸ்ரவேலின் அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்கள், இரக்கமுள்ள மருத்துவர்கள், ஹைட்டி தொடக்கம் மெக்சிகோ வரை, நேபாளம் தொடக்கம் பிலிப்பைன்ஸ் வரை வாழும் மக்களை பாதுகாத்த எமது தேடுதல் மற்றும் உயிர்களை காப்பாற்றும் குழுவினருக்காக நான் பெருமையடைகின்றேன். மிக உயர்ந்த நிலை பெறுமதிகளை நிலைநிறுத்தும் எமது தாய்நாட்டை மிக அறிவுடன் பாதுகாக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய தைரியமுள்ள இஸ்ரவேலின் வீரர்களுக்காக நான் மிகவும் பெருமையடைகின்றேன். மிகவும் பெருமையடைகின்றேன்.

அனைத்திற்கும் அதிகமாக, சீமான்கள் மற்றும் சீமாட்டிகளே, அனைத்திற்கும் அதிகமாக எமது பாரம்பரியத்தின் ஆழ்ந்த ஊற்றுக்களிலிருந்து அசாதாரண வலிமைகளை பெற்ற, ஒன்றே மற்றும் ஒரே யூத தேசமாக எதிகாலத்தை பாதுகாத்து காட்டுவதற்கு, அற்புதகமாக கட்ட தீர்மானிப்போருக்காகவும், பிரிக்க முடியாத தியாக எண்ணங்களை கொண்டிருக்கும் இஸ்ரவேலின் மக்களுக்காக நான் பெருமை அடைகின்றேன்.

நன்றி.

No comments: